Wednesday, April 20, 2016

சேத்துர் ஜமீன்,சிவகிரி ஜமீன்-மறவர்கள்

சேத்துர் ஜமீன்


முன்னுரை:
14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ஆளுநராக இருந்த ஜலாலூதீன் ஆசான் ஷா 1335ல் தன்னை சுல்தானியத்திலிருந்து விடுவித்துக் கொண்டு மதுரை சுல்தனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்வாறு தோன்றிய மதுரை சுல்தானியர்கள் இங்குள்ள இந்துக்களை கொடுமைப்படுத்தியும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டதால் மக்கள் சொல்லாத துன்பத்திற்கு ஆளானார்கள். தாங்களை இந்த துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு தகுந்த நேரத்தையும் மீட்பவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் விஜய நகர பேரரசின் அரசரின் மகனான (முதலாம் புக்கரின் மகன்) குமார கம்பணாவை மதுரையை கைப்பற்றுமாறு அனுப்பி வைத்தார். 1371 ல் திருச்சியை கைப்பற்றிய குமார கம்பணன் மதுரையையும் கைப்பற்றி விஜய நகர பேரரசின் ஆட்சியை மதுரையில் நிறுவினார்கள்.
இவ்வாறு தமிழகத்தில் ஆட்சி நடத்திய விஜய நகர பேரரசை தோப்ப10ர் 1616 போருக்கு பின்னால் தனது வலிமையை இழக்கத் தொடங்கியது. ஏற்கனவே விஜய நகர பேரரசின் கீழ் பணிபுரிந்த நாயக்கர்கள் மதுரையை தங்களின் சுதந்திர அரசாக அறிவித்தன. இதனைத் தொடாந்து தஞ்சை, செஞ்சி, ஆகிய நாயக்க அரசுகள் தோன்றின.
ஜமீன்தாரி முறை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. 1801ல் கர்நாடக ஒப்பந்தத்தின் படி தென்தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கைவசம் ஆயிற்று. அதுவரை இருந்த பாளையஙகள் அனைத்தும் 1802 ல் ஜமீன்தாரி முறையாக மாற்றப்பட்டது. அதன்படி சேத்துர் ஜமீன் உருவானது. சேத்துர் ஜமீன் திருநெல்வேலி பாளையங்களில் ஒன்றாகும். இதன் தோற்றம் வளர்ச்சி, நிர்வாக முறை மற்றும் சமயத் தொண்டுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தோற்றம்:
சேத்துர் ஜமீந்தார் "வடமலை திருவொனாத சேவுக பாண்டிய தேவர்" என்கிற பட்டம் உடையவர். இவர் தமிழ் மூவேந்தர் காலத்தில் தோன்றிய மன்னர் வம்சமாகும். இவர்கள் மூதாதையர்கள் காஞ்சியை ஆண்ட வீர சோழனிடம் பொக்கிஷதாராக இருந்தவர்கள். இவர்களை "மன்னிய குருகுல வணங்காமுடி பண்டாரத்தார்" என்று அழைத்தார்கள். இவர்கள் பண்டாற மறவர் என்ற "வணங்காமுடி பண்டார மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள். பின்பு அங்கு இருந்து பெயர்ந்து சோழ நாட்டை அடைந்தனர். பின்பு குழோத்துங்க சோழனிடம் தளபதிகளை வேலை செய்தனை. அப்போதைய தலைவர்கள் வாண்டையாத்தேவரும் கலிங்குராயதேவரும் ஆவார். பின்பு அரசியல் காழ்புனர்ச்சி காரனமாக அங்கு இருந்து நீங்கி தல யாத்திரையாக மதுரையை அடைந்தனர். அப்போது பாண்டிய ராஜாவாக இருந்த பரக்கிரம பண்டியன் இவர்கலை ஆதரிது தம் படையில் தளபதிகளாக நியமிது கொண்டான். அப்போது யாரலும் அடக்க முடியாத மன்னனின் யானையை அடக்கியதர்க்காக மதுரைக்கு மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள் "வாலந்தூர்" என்ற ஊரினை பரிசளித்தான் பான்டிய மண்ணன். அப்போது தம் உறவினர்களை அழைத்து வந்து வாலந்தூரிலே குடியேற்றினர்.அப்போது பாண்டிய மன்னனுக்கு எதிராக கிளம்பிய பந்தளமன்னனனை அடக்க இவர்கள் தலைவனான் சின்னய்ய தேவர் பாண்டிய படையுடன் சேர நாட்டு பந்தள எல்லை வரை விரட்டியடித்து அங்கு கோட்டை ஒன்றை கட்டி பந்தள மன்னனான திருவொனாத நாயர் தேசிகர் திரும்பாமல் காவல் செய்த்தார். பாண்டிய மன்னன் இவர்கள் வீரத்தை பாராட்டி "திருவொனாத சேவுக பாண்டிய தேவர்" என்ற பட்டம் தந்து சேத்துர் பகுதிக்கு தலை காவலானக மன்னனக முடிசூட்டினான். இவர்கள் "விக்கிரம" சோழ மரபினர் என்று சேத்துர் வம்சாவளி கூறுவதாக ர.வடிவேல் "தென் இந்திய அரச பரம்பரை" என்ற் நூலில் கூறி இருந்தார். இப்பளையம் தோன்றிய ஆண்டு 1284. இவரும் சிவகிரி பாளயக்கரரும் சம காலத்தவர். இது சோற்றுர் என அழைக்கபட்ட விளைநிலமுள்ள பூமியாகும். அதன் பின்பு சேத்துர் பளையத்தை 48 பளையத்தார்கள் வரை ஆண்டுள்ள்ணர். இவரது ஆட்சி பகுதி சேரநாட்டின் எல்லையான் மேற்க்கு தொடர்ச்சி மலையில் ராஜாபளையம் பகுதியில் உள்ளது. கொல்லம்கோண்டான் மற்றும் கங்கைகொண்டான் பளையக்காரர்கள் இப்பிரிவினை சார்ந்த்வ்ர்கள்.
சபரிமலை ஐயப்பன் கதையில் பந்தளநாட்டு எதிர்புற பாண்டிய நாட்டு ராஜாவாக வரும் மறவர் தலைவர் இவரே. சேத்துருக்கும் பந்தளத்திற்கும் அடிக்கடி எல்லை போர்கள் நடக்கும் பந்தள பகுதியிடம் நிறய பகுதிகளை வென்றுள்ளார்.

இவர்கள் வணங்கும் தெய்வம் நச்சடையப்பன். இது சேர மன்னனின் குல தெய்வம் இந்த கோயிலை கட்டியது சேர மன்னன் விருத்தங்கல் கோயில் கல்வெட்டில் விளங்குகின்றன. இத்தெய்வத்திற்குத் திருப்பனி செய்து திருவிழக்கொண்டாடி வரும்படியாக சேர மன்னர்களால் ஏற்றுக்கொள்ளபட்ட குறுநில மன்னர்கள் இவர்கள் முன்னோர்கள். இது பற்றிய தெய்வ திருப்பனியில் தெய்வீக திருப்பனியின் நிமித்தம் இன்னவர்கள் என்பதை சேவுக பாண்டிய தேவர் என் குல பெயராக கொண்கிருக்கிறார்கள்.

நச்சாடையப்பன்(நச்சாடை தவிர்த்த ஈஸ்வரன்) கோயில்:
ஒரு சமயம் பந்தள மன்னனுக்கும் பாண்டியனுக்கும் ஏற்பட்ட போரில் பண்டியனை கொல்வதற்கு நச்சடை கொண்டு முயன்றவர்களை சிவன் அடையாளம் காட்டினாராம். ஆனால் இதை சேத்துர் அரசர் அந்த மன்னன் தம் மூதாதயரான "சின்னயா சேவுக பாண்டிய தேவர்" தான் எனவும் அவர் காலத்தில் பந்தள்த்துடன் உண்டான் சண்டையில் பரமேஸ்வ்ரனே நேரில் தோன்ற் காப்பற்றிய்தாக கூறுகிறார்.இது ப்ரசித்தி பெற்ற் 140 சிவாலயங்களில் ஒன்ற் இது மேற்கு தொடர்சிமலையில் உள்ளது

பாளயபட்டுகள்லுடனான போர்களும் நிகழ்வுகளும்:

சேற்றூரரும்(வ்டமலையர்) சிவகிரியாரும்(தென்மலையர்) பரம் வைரிகளகும். இவ்விவிருவரும் வடரை,தென்கரை என் மறவர் தலைவருள் மோதிகொள்வது வழக்கமாகும்.17-ஆம் நூற்றண்டில் வடகரை ஜமீனுடன் சேர்ந்து தென்மலை(சிவகிரி ) மற்றும் ஊற்ற்மலையாரயும் போரில் கொன்றனர். இத்ற்கு வடகரை ஆதிக்கம் என பெயர்.ஆனல்1792-ல் சிவகிரி சேத்துரின் மீது படையெடுத்து அதன் தலைவரைகொன்று தனது உறவினரை அமர்த்தினார். சிவகிரி வன்னியனாரும் வன்னிய மறவர் தலைவர் என்பது குறிப்பிட தக்கது.

சேத்துர் ஜமீன் 1754-64. அம் ஆண்டு வரை பூலிதேவருடன் இனைந்து விடுதலை போரில் பங்கு பெற்று 1803 ஆம் ஆண்டு அடக்கபட்டு ஆங்கிலயரால் ஜமீன் ஆனது.

20- ஆம் நூற்றண்டில் சேத்துர்:

1945 காலத்தில் இருந்தவர் ராஜா ராம சேவுக பாண்டிய தேவர் ஆவார்.. இவர் அருனசல கவிராயர்,கந்தசாமி கவிராயர் வித்வான் மாமூண்டியா பிள்ளை முதலிய பல கலைஞர்களை ஆதரித்தவர். இவர் சிறந்த சேவல் சண்டை பிரியர் ஆதலல் "சேவல் துரை" என அழைக்கபட்டார். ஆங்கில அரசால் "ராஜா" மற்றும் "ஹைனஸ்" என பாராட்ட பெற்றார். பாசவலை என்னும் திரைகாவியத்தை தொடங்கிய பின்பு தொடரமுடியாத சூழ்நிலை உண்டனது. இவரும் தனது பரம வைரியான சிவகிரியாரும் தற்போது உறவினர்களாவர் பென் கொடுத்து பென் எடுத்துள்ளனர்.பண்டுக கலவரத்தின் போது முடிவில் பிரான்மலை கள்ளர்களுக்கும் புது நாட்டு இடையர்களுக்கும் சமாதானம் சேவுக பாண்டியர் அரன்மனையில் நடந்தது. அப்போது கள்ளர்களும் இடையர்களுக்கும் அவர் அவர் வரலாறு சேத்துர் அரன்மனையில் வாசிக்க பட்டது


நச்சடையப்பன் திருவிழா:
இது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவதானம் என்ற இடத்தில் உள்ளாது. ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருத்தேரொட்டம் மிக விமரிசையாக பல லட்சம் செலவில் நடைபெறுகிறது.


நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கிராம ஆட்சி முறைக்கு சிறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின் 19 ம் நூற்றாண்டின் மத்திய காலங்களில் ஆங்கிலேயர் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கப்படுத்துவதற்காக 1830 க்கு பின்னால் தொடர்ச்சியாக பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் சுதந்திரத்திற்குப் பின்னால் காந்தியடிகள் கிராம ராஜ்ஜியத்தை ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்த கனவு கண்டார். அவருடைய கனவை நனவாக்கும் முகமாக பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தி இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டு திரு. பீ.வி நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது கிராம ராஜியம் நடைமுறைபடுத்தப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு தான் தலைவன் கோட்டையிலும் பஞ்சாயத்து முறை அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுபிரிவாக உள்ளது. இப்போதைய பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் திரு.கோ.ப10சைப் பாண்டியன் ஆவார்.
ஊராட்சி நிர்வாகம்:
கிராம சபை:
இந்திய அரசியலமைப்பு 72 வது திருத்த சட்டத்தின் படி கிராம ஊராட்சிகளில் கிராம சபை அமைக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. 1994ம் வருட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 3 ன் படி கிராம ஊராட்சி வாக்காளர் பட்டியலிலுள்ள மொத்த வாக்களர்களையும் உள்ளடக்கிய அமைப்பு கிராம சபையாக செயல்படுகிறது.
சபையின் செயல்பாடு:
கிராம சபையினை ஊராட்சி மன்ற தலைவர் கூட்டி, தலைமையேற்று நடத்தி வருகிறார். ஊராட்சி மன்றத் தலைவர் இல்லாத சூழ்நிலையில் துணைத்தலைவரும், இவ்விருவரும் இல்லாத சூழ்நிலையில் மற்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் மூத்த உறுப்பினர் தலைமை ஏற்று கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது அரசு விதி.
கிராம சபை கூட்ட நாட்கள்:
அரசாணையின் படி கிராம சபை கூட்டம் ஓராண்டில் குறைந்த பட்சம் நான்கு முறை நடத்தப்பட வேண்டும். இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க
மற்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களான குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், தேவர் ஜெயந்தி மற்றும் நமது தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள் ஆகிய ஐந்து நாட்களில் தவறாத கிராம சபை கூட்டப்படுகிறது.
மேலும் இரு கிராம சபைக் கூட்டங்களுக்கிடையே ஆறு மாதத்திற்கு மேல் கால இடைவெளி கூடாது ஊராட்சி மன்றத்தலைவர் ஏதேனும் ஒரு காரணத்தால் கிராம சபையைக் கூட்ட தவறினால் ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் வேண்டும்.
முக்கியத்துவம்:
கிராம சபையானது கிராம மக்களின் முக்கிய கருத்தை வெளியிட வாய்ப்பளிக்கும் அரங்கமாக செயல்பட்டு வருகிறது. கிராம சபை மூலம் கிராம மக்கள் அனைவரும் நேரடியாக கிராம நிர்வாகத்தை நடத்த வாய்ப்பு உள்ளது. கிராம ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள், வரவு செலவுகள் மற்றம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாடுகள் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக கிராம சபை செயல்படுகிறது. இக்கிராம சபைக் கூட்டத்தின் மூலம் திட்டச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை விவாதித்து அக்குறைபாடுகளைக் களைந்து அத்திட்டத்தின் முழுப்பயனும் மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது.
தேவர் ஜெயந்தி:
இவ்வ10ரில் தேவர் சமுதாய மக்கள் ஆண்டுதோறும் அக்டோபர் 30ந் தேதி ஊர் பொது மக்களின் செலவிலும், மறவர் சமுதாய இளைஞர்கள் செலவிலும் தேவர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அப்போது இங்குள்ள இளைஞர்களுக்கு கபடி போட்டி, கண்ணைக் கட்டி பானை உடைத்தல் போட்டி, மோட்டார் சைக்கிள் போட்டி, சைக்கிள் போட்டி ஆகிய போட்டிகள் நடைப்பெறும்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒட்டப்போட்டி, இசை நற்காலி போட்டி, கோ – கோ விளையாட்டு போட்டிகள் நடைப்பெறும்.
அக்டோபர் 30 ந் தேதி காலையில் தேவர்க்கு பால் அபிஷேகம், தீர்த்தக்குடம் (குற்றாலம் நீர்) அபிஷேகம் நடைப்பெறும் இவ்வ10ர்
இளைஞர்கள் தேவர் சிலைக்கு முன் அமர்ந்து மொட்டைப் போடுவார்கள். பின்பு இனிப்புகள் வழங்கப்படும் அதற்கு பிறகு இரவு 7 மணி அளவில் விளையாட்டில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற்ற இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த இவ்வ10ர் மாணவ, மாணவிகளுக்கு பரிசாக ரொக்கப் பணம் ரூ.1000 முதல் 3000 வரை வழங்கப்படும். இவ்வாறு இவ்வ10ர் மக்கள் தேவர் ஜெயந்தியை கோவில் திருவிழா போல் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.


சிவகிரி ஜமீன்-மறவர்கள்


முன்னுரை:
ஸ்விஸ் நாட்டின் வங்கியில் 2 லட்சம் கோடி ரூபாய் பனம் சிவகிரி ஜமின் கனக்கில் உள்ளதால் வாரிசுகள் நான் நீ என்று போட்டி போட்டு சண்டையில் இறங்க சென்ற வாரம் குமுதம் ரிப்போர்டர் சிங்கம்பட்டி ஜமிந்தார் சிவகிரியில் மறவர்களே பெரும்பான்மையக உள்ளர்கள்.அதை ஆண்டவர்களும் மறவர்களே என்று கூறியுள்ளதை இதலில் ப்ரசுரித்தோம்.உடனே வன்னியர் சங்கங்களின் தலைவர்களன முரளிநாயக்கர்,அன்னல் கண்டர் இதற்க்கு மறுப்பு தெரிவித்து அது வன்னியர் ஜமீன் என்று கூறினர். ஆனல் இதை அப்பட்டமக மறுக்கும் தற்போதய ஜமீன் வாரீசான ஜெகன்நாதன் மறவர் ஜமீன் தான் என்று கூறியுள்ளார் சிவகிரியில் மரபு ரீதியிலான புதிய சர்ச்சை வெடிதுள்ளது.
சிவகிரி ஜமீனை ஆண்டவர்கள் யார்?
இதற்கு பதில் இதை ஆண்டவர்கள் வன்னியர் பட்டம் உள்ள வன்னிய மறவர்கள் (அ)வன்னி கொத்து மறவர்கள். இவர்களை கன்னிகட்டி(தாலி வகை) மறவர்கள் என்றும் கூறுவர். எழயிரம்பன்னை,அழகபுரி,வேப்பங்குளம் யாவும் இதே வன்னி கொத்து மறவர்களே.
இது என்ன வன்ன்யர் ஒரு சாதி மறவர் ஒரு சாதி அது எப்படி மறவர்களுக்கு வன்னியர் பட்டம் என்ற கேள்வி எழும். மறவர்களுக்கு வேறு பட்டம் உண்டா? என்றால் உண்டு.கொல்லம்கொண்டான் ஜமீனுக்க் வாண்டாயத் தேவர்,கங்கைகொண்டான் சேத்துர் ஜமீனுக்கு சோழகத் தேவர் என்ற பட்டம் உண்டு. இவ்விருவரும் வனங்கமுடி பண்டார மறவர் என்ற உட்பிரிவை சேந்தவர்கள்,(வாண்டயார்,சோழகர் என்ற பட்டம் கள்ளர் பெருமக்களுக்கு உண்டு.இலங்கையில் உள்ள் வல்வெட்டிதுறை மறவர்களுக்கு வாண்டையார் பட்டம் உண்டு).
திருநெல்வேலியில் 20-ஆம் நூற்றாண்டில் எடுத்த சாதிக் கனக்கெடுப்பில் வெள்ளாளர் (அ) பிள்ளை 33,975
வன்னியர் (அ) மறவர் 47,945 சாணார் 13,313 கோனார் 12,395 பிராமின் 10,791 பறையர் 13,456 என கனக்கெடுத்துள்ளனர்.

திருநெல்வேலி ஜாதிய அறிக்கை இது.இதில் "பள்ளி" என்னும் சாதி கிடையாது.
இது என்ன குழப்பம் என்ர்ற கேள்விக்கு மறவர்க் குலத்தில் 38 பிரிவுகள் உண்டு அவை.

நாட்டார், மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம், வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி,





வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு,
கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரியூர்,
வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது,
கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி
கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.

இவைகலின் ஒன்றே வன்னியர் என்ற உட்பிரிவுகளாவர். இவர்களை பற்றி"Nicoles dirkes,'The hollow ethenic crown of indian kingdom'" என்ற நூலில் வன்னி மறவர்கலின் வம்சாவளியை பற்றி குறிபிட்டுள்ளர் அது.Both vanniya maravars of tirunelveli.See alakapuri zamindar vamsavali and citampara vanniyan of elayiram pannai vamsavalli GOML,. Madras
இன்றைய சூழ்நிலையில் பல்வேரு சாதியினர் தம்மை உயர்த்திக்கொள்வதற்காக தம் சங்கங்களின் மூலம் பன உதவிகள் புரிந்து சாதிக்கெனவே தனிதனியாக தொல் பொருள் ஆய்வாளர்களை உருவக்கி அவர்கள் மூலம் புதிது புதிதக செப்பு பட்டயம் கல்வெட்டு கண்டறிந்த்தகவும் வரலாற்றுகளை திரித்து பொய்யுரைபவர்களை கொண்டு உலவ விட்டுருகின்றன. சில சாதிகளின் பொருளாதர பலம் இந்த மாநிலதை ஆள்பவரே வைத்தே தம்மை அரச வாரிசுகள் என்ற அறிவிக்க்ன்ற சூழ்நிலை நாம் காட்டும் ஆதாரங்கள் அப்படி புரட்டர்களால் உருவக்கபட்டவை அல்ல..
அவை நம்மீது படையெடுத்து பாளயங்களை அழித்து,பகுதிகளை ஜப்தி செய்து, வரிவசூல் செய்த ஆங்கில தளபதிகளலும் பல ஆட்சியாள்ர்களாலும்,மாவட்ட கலைக்டர்களாலும் அரசாங்கத்தில் 250 வருடங்களுக்கு மேல் ஆவணாமாக இருப்பவை. அவைகளின் கூற்றை இங்கு நாம் எடுத்து காட்டியுள்ளோம்.
சிவகிரி ஜமீனின் தோற்றம்:
சிவகிரி ஜமீனின் மூததையர்களாக புரசாம்பட்டு வன்னியாடியும், தச கண்ட வன்னியனாரும் பழைய மறவர் சீமையான இரமனாதபுரம் சீமையில் சிவகங்கை பகுதியில் உள்ள் திருப்புவனம் பகுதியே பூர்வீகமாகும். இதில் புரசாம்பட்டு வன்னியடி பாண்டிய மன்னனிடம் தளபதியாக இருந்துள்ளர். இவர் சோழ மன்ன்வ்னான் மூன்றாம் ராஜேந்திரனை வெல்ல் கார்ன்மாக இருந்த காரனத்தால் 72 ஊர்களின் திசை காவலனாக் வழங்கினார் .இவரதி பூர்வீகம் தொண்டை மண்டலமோ(அ) காவிரியின் வடகரையோ கிடையாது. இதன் பின் தன் சுற்றத்தாரை அழைத்து சென்று எழாயிரம் பன்னை,அழகபுரி போன்ற பகுதியில் குடியேறினர்.இவரும் சேத்துர் ஜமீனும் சம காலதவர்கள். ஆதவது 13-நூற்றண்டு.


வன்னியர்-பட்டம் பற்றிய சில தெளிவுகள்:

வன்னியர் எனற பெயரின் விளக்கதில்
வன்னி - கிளி,தீ, குதிரை, மர வகை,தலைவன், சிங்கம் என்று பல பொருள் தருகிறது எனவே இவை அனைதும் ஒரு சாதிக்கு பொருந்தும் என எற்கலாகது.
வன்னியன் என்னும் சொல்லின் பொருள் வன்மை என்ற வேர் சொல்லின் ஊருவனது என்பதே உன்மை.
தின்னிய நெஞ்சம் உள்ளவன் தின்னியன். வன்மையுடை நெஞ்சம் உள்ளவன் வன்னியன்.
வன்னியர் என்பது ஜாதி பெயரல்ல என்று தெளிவாக தெரிகிறது பட்டமே





வன்னியர் என்ற பட்டம் எந்த எந்த ஜாதியனர்க்கு உள்ளது என்று பார்போம்.
1.ஈசனாட்டு கள்ள்ர்(மத்திய அமைச்சர் பழனி மானிக்கம் வன்னியர்)
2.வலைய முத்தரையர்(வழுவாடி வன்னியர்)
3.வன்னிகொத்து மறவர்(வன்னியர்,வன்னியடி மறவர்)
4.ஆர்க்காடு அகமுடையர்(வன்னிய முதலியார்)
5.துளுவ,கொங்கு வெள்ளலள்ர்(வன்னியர்கவுண்டர்)
6.பார்க்கவ குலத்தார்(வன்னிய மூப்பனார்)
7.பரவர்,கரையர்(வன்னியர்)

என பல்வேறு சமூகதினருக்கு இருக்கிறது. அப்போது இவர்கள் கோர காரனம்.


அப்போது வன்னியர் என்று தற்காலத்தில் உள்ள சாதியர் யார்?
இதறகு ஆதார்பூர்வமாக தொண்டை மண்டலதின் மிரஸ் ரேட் கல்வெட்டு சொல்லும் குடிமக்களாய் கூறும் செய்தி:

“தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………”


இதில் இன்று தொண்டை மண்டலதில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் என்ற ஜாதி பற்றி குறிப்பிடவில்லை.
அதற்க்கு பதிலாக பள்ளி 
என்ற ஜாதியை பற்றி குறிபிடுகின்ர்ற்ர்.
இப்ப்ள்ளி என்ற இவ்வினமே பிற்காலதில் வன்னியர் என்று 1891 தமிழ்நாடில் கெஜட்டில் மாற்றம் செய்து கொண்டார்கள்.

வெள்ளாளரின் 18 சூத்திர சாதியினர்:

பள்ளி என்ற வார்தைக்கு அர்ததம் பாட சாலை,கோயில்,குறும்பர் என்ற அர்ததம்(சுராவின் தமிழ் அகராதி). ஆம் குறும்பர் என்ற இனத்தின் வேறு பெயரே பள்ளி.

குறும்பர் முல்லை நிலத்தில் வாழ்ந்த குடி மக்கள் ஆவர்.ஆதனால் காடவர் குறும்பர் என்று கூறுவர்.



குறும்பர் அல்லது குறுமனர் அல்லது குறுபாரு (Kurumbar or Kurumans or Kurubaru) தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர். இந்தியாவின் பழங்குடியினர் ஆவர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது மொழி குருமன் பழங்குடி கன்னடம் ஆகும். இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். தங்களது தலையில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகின்றனர். இவர்களது சாதிப்பெயர்கள் கவுண்டர், கௌடர், ஹெக்கடே, நாய்க்கர் என்பன ஆகும்.இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள் தங்கர் என அறியப்படுகின்றனர். குறும்பர்களின் தெய்வமான் வீரபத்திரரை தான் "அக்னி வீர பத்திரர்" என்றும் கூறுவர்.வன்னியர்(பள்ளி)களின் மூததாதையரக "ருத்திர வீர வன்னியர்" என்கிறர்கள்.
வன்னியர்-அக்னி
பத்திரர்-ருத்திரர்.
இரண்டும் ஒன்றே. "அக்னி வீர பத்திரர்" என்ற சொற்றொடரின் எதிர் சொற்றொடரே "ருத்திர வீர வன்னியர்".குறும்பர் இனமே வன்னியர்(பள்ளி) ஆகும்.அக்னி வீரபத்திரரை வழிபடுவதால் தம்மை அக்னி குலதவர் என்று கூறுகிறர்.அக்னி வீரபத்திர் வழிபாடு வன்னியர்(பள்ளி) உள்ள தர்மபுரி,சேலம் மாவட்டங்களில் கானபடுகின்றனர்.
குறும்பர் முல்லை நிலத்தில் வாழ்ந்த குடி மக்கள் ஆவர்.ஆதனால் காடவர் குறும்பர் என்று கூறுவர்.தொண்டை மண்டலமே குரும்பர் நாடு என்ற அழைக்கபட்டுள்ள்து. பின்பு.கார்வேள் என்ற கன்னட நாட்டை சேர்ந்த வெள்ளாலரல் வெல்லபட்டு அதிகாரதை இழந்தனர்.

காடவ குறும்பர்------>வனப்பள்ளி----->பள்ளி------>வனயர்------------>வன்யர்----->வன்னியர்
காடவர் என்ற காரனபெயர்தான் வனயரகி பின்பு வன்னியர் என்று திரிந்துள்ளது.

இக்குலத்தவர்கள் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பொதுவாக வன்னியர்கள் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படலாயினர். இவர்களுக்கும் வன்னியர் என்ற சாதிப்பட்டம் புனையும் கள்ளர் குலப் பிரிவினருக்கும் அதுவரை தொடர்பு ஏதுமில்லை.


கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய, சென்னை பாடியிலுள்ள திருவலிதாயம் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள, இரண்டாம் தேவராயர் கல்வெட்டில் விஜயநகர அரச அலுவலர்களான வன்னியர்கள், அவ்வூர்ப் பள்ளி குலத்தவர்க்குச் சில சலுகைகள் வழங்கிய செய்தி பதிவாகியுள்ளது.

வன்னிகொத்து மறவர்கள் பற்றிய பல ஆதாரங்கள்:

"Th kingship and political practise the colonial of india"72 பளையக்கரர்க்ளால் வெல்ல முடியாதவரும் சிவகங்கை,புதுக்கோட்டை,தஞ்சவுர் 14 நாட்டு தலைவர்களும் பாஞ்சலங்குரிச்சி,காடல்குடி தலைவர்களால் வனங்குதர்குறியவரான சேதுபதியே கொண்டயங்கோட்டை,வன்னிய,வனங்கமுடி தலைவர்களை போற்றுதல் குரிய உட்பிரிவுகளாக(subsects) மறவர் குலத்தில் விளங்கினர்.இதில் இருந்து வன்னியர் என்பது மறவரில் ஒரு உட்பிரிவு என்று தெறிகிறது. An eighteenth century document of Maravar Caste codes relates that ,at setupati royal assembly ,Kontaiyakottai and Vanniya Subcastes held a superior status among Maravar chiefs

இதே போல் தென் இந்திய அரச வம்சத்தை ஆறாய்ந்த ச.ரா.கதிர்வேலு தம் நூலில் சிவகிரி ஆண்டவர்கள் வன்னியர் பட்டம் உள்ள வன்னிய மறவர்கள் (அ)வன்னி கொத்து மறவர்கள். இவர்களை கன்னிகட்டி(தாலி வகை) மறவர்கள் என்றும் கூறுவர். எழயிரம்பன்னை,அழகபுரி,வேப்பங்குளம் யாவும் இதே வன்னி கொத்து மறவர்களே. "The history of tirunelveli"கnல்டுவெல் திருநெல்வெலி மானுவலில் ஸ்டுவர்ட் "திருநெல்வெலி உள்ள மறவர் (அ) வன்னியன் என்ற ஜாதி மிகவும் அதிசயமானது பாளயக்கரர்களில் அநேகர் இவ்வகுப்பை சார்ந்தவர் 18,19 நூற்றண்டில் ஆங்கிலெயருடன் சண்டையிட்டனர்.
அதே நூலில் "வன்னிய மறவர்-நாடார் மோதல்" என கழுகுமலை கலவரதை பற்றி கூறுகிரர். 



சேர,சோழ,பாண்டிய,பல்லவ,சாளுக்க்,வேளிர்,ரஷ்டிரகூட இனமாக அடயால படுத்த விரும்புகின்றர். அதற்கு வன்னியர் என பெயரில் வரும் அனைவரையும் கோறுகின்றனர்.அவர்கள் சிவகிரியையும் தம்முடையது என கோறும் ஆதரங்களில் ஒன்று "வன்னியர்"
என்ற பெயரையும் மற்றொன்று பழனியில்

///உள்ள ஸ்ரீ வீரமாத்தி ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கிடைத்த அறிக்கை மடல் 1944 ஆம் ஆண்டு மே திங்கள் முத்திரையிட பெற்றுள்ளது . இவ்வறிக்கை ஏட்டில் ரிஷிஸ்வர சுவாமி என்றும் லோக குருசாமி என்றும் குறிப்பிடப்படுபவர் வன்னிய குல மரபினர் என்பதை அறிக  என்று 'வன்னிய பெருங்குலம்' நூலாசிரியர் திரு. காவிரி நாடன், அந்நூலில் பக்கம் 36 இல் குறிப்பிட்டிருக்கிறார். 

அங்கு கிடைத்த இரண்டாம் அறிக்கையில் அந்த "லோக குருசாமி" 255 வது பட்டம் ஏற்றவர் என்றும் சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர் பழனிமலை பரம அருட்... மகா பண்டார சந்நிதானம் சிவகிரி பாண்டிய மகாராஜா என்று பரம்பரை பட்டத்து பெயர் வைத்து விளங்கி வருகின்ற சிவபெருமான் திருவருள் பழனிமலை தண்டாயுதபாணி பொன்னம்பல கைலாச போகனாத ஞானதேசிகேஸ்வர மஹா மஹேஸ்வர சுவாமி அவர்களாகிய 133 வயதுள்ள மஹா கையிலாச தெண்டாயுத பாணி மஹா ராஜா குரு மஹா ராஜ ரிஷிஸ்வர சுவாமி அவர்கள் என்று எழுதப்பட்டிருகிறது.

இவ்வறிக்கை மூலம் கி பி 1944 வாக்கில் சிவகிரி சமீனை சேர்ந்த அரச பரம்பரையினரில் ஒருவர் பழனிமலை மஹா பண்டார சந்நிதானமாக  பட்டம் எற்றுருக்கிறார் என்று தெரிகிறது.

////////

இதில் இருந்து இது எவ்வளவு பிழையான புரிதல் என்று தெறிகிறது. இதில் சிவகிரி ஜமீனை சேர்ந்த மஹராஜ ஒருவர் பண்டாரமாக உள்ளர் என கூறுகிரர்கள்.முதலில் அவர்களுக்கு பழனி மலை வரலாறு தெரியாது என்று தோன்றுகிறது.இடும்பன் என்ற அரக்கன் 2 மலைகலை காவடியாக கொண்டு வருகையில் முருகன் அவனை வென்று பழனி மலை காவலனாக்கினர்.கோயில் இருக்கும் இடம் பழனிமலை(சிவகிரி) அருகில் இருக்கும் இடும்பமலை(சக்திகிரி).பழனிமலை குன்றின் பழைய பெயர்(சிவகிரி)-பழனி தல வரலாறு.அவர் பள்ளி இனத்தவர்தான் ஆனால் சிவகிரி ஜமீன் அல்ல பொதுவாக பனடார மடதிபதிகளும்,ஆதீன சாமியார்களும் மஹராஜ் என்ற பட்டம் போட்டு கொள்வார்கள் அதற்காக அவர்கள் ராஜா அல்ல.இத்ல் வரும் உனமை செய்தி இது தான் " பழனி மலைகுன்று(சிவகிரி) பண்டாரம்" ஆவர்.(சிவகிரி -பழனிமலை குன்று)மற்றபடி சிவகிரி ஜமீந்தாருக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையது
இச்சர்சைக்கு முற்றுபுள்ளி வைதுள்ளார் தற்போதய வாரிசு ஜெகன்நாதன் அவர் குமுதம் ரிப்பொர்டார்-ல் அளித்துள்ள பேட்டியில் "எங்களை வன்னிய குல சத்திரியர்" என்கிறனர் அது மறவரில் ஒரு பிரிவே அன்றி (பள்ளி) இனம் அல்ல.எங்கள் சம்பந்தம் அனைத்தும் மறவர் ஜமீங்களுடன் தான்.சில ஜமீந்தார்களுக்கு வாரிசு இல்லாத காரனத்தால் வன்னியர் ஜமீன் என்று கூறுகின்ற்னர்.உன்மை என்னவெனில் முக்குலத்தோர் இனத்தில் தர்போது தான் 20 வருடமாக ஒருவருக்குள் சம்பந்தம் செய்கின்றனர்.அதற்கு முன்பு முக்குல்த்தோரிலே கிடையாது எனில் மறவர் சமூகம் எனில் இது எப்பொதுமே கிடையாது.அதுவும் ஜமீனில் வேறு சமூகம் எனில் நினைத்து கூட பார்க்க முடியாது.
ஆனால் தென் பாளயையட்டு(மறவர்கள்) அனைவரும் உறவினர்களே. தற்போதய வாரிசு ஜெகன்நாதன் அவர்கள் தாயார்(சிங்கம்பட்டி ஜமீனை சார்ந்தவர்). இவர் அன்னியாரும் தற்போதய ரானியாரான் பாலகுமாரி நாச்சியார் சேத்துர் ஜமீனை சார்ந்தவர். தற்போதைய தலைவண்கோட்டை,சேத்துர் ரானியார்கள்(சிவகிரி ஜமீனை சார்ந்தவர்களாவர்).
"இன்னொரு ஆதாரத்தில் கருப்பயி நச்சியார் என்ற "சின்ன தம்பியார்" மேல அரன்மனை சத்திரிய வன்னியர் அரன்மனையை சார்ந்தது". இதுவும் தவ்றுதலான புரிதலே.அரன்மனை "சத்திரிய வன்னியர்" என்பது "வன்னியனார்"(அ)"வன்னிய ராஜன்" என்ற பட்டத்தை குறிக்குமே தவிர "பள்ளி" (அ) "வன்னிய குல சத்திரியர்" என்ற இனத்தை குறிக்காது.பொதுவாக அரன்மனையோ நிலமோ பாண்டியனை சார்ந்தது,தொண்டைமானை சார்ந்தது,சேதுபதியை சார்ந்த்து என்று பட்டதை குறித்துவருமே தவிர சமூகத்தை குறிக்காது
நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 


எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.

15 ஆம் நூற்றாண்டுக்கு முன் வன்னியபட்டம் உள்ளதா என்று கேட்டுள்ளனர்.

அதலையூர் நாடாள்வான் = விஜயாலத்தேவன் = வன்னியநார் அடைக்கலம் காத்த சூரைக்குடி அரையன்.
நாடாள்வான் விஜயாலயத்தேவன்
ஆதளையூர் நாடாள்வான் பொன்னனான விஜாயலயத்தேவர் கி.பி(1219) 

I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம் 

ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு.......திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்............................ 




கி.பி.1424



"வன்னிநார் அடைக்கலம் காத்த விஜயாலத்தேவன்"



The Poligar of sivagiri: “Barakatulla and nabikan kattak set off from nellitangaville with 500 horse,leaving mahfuz khan with the puli devar. Skirting along poligar Vaniah of shevagherry[“Vaniah” stands here for Vannia, the caste name or title of a branch of the Marava caste, to which the sivagiri belonged. The Elayiram pannai Poligar also a vanniya.
வன்னியர் சங்கத்தினர் "வன்னியர்" என்ற பெயரை மட்டும் வைத்து கோறுகிறார்களே இவற்களால் "பள்ளி என்றும் படையாட்சி" என்று கோற் முடியுமா.இன்னும் எத்தனை நாள் இந்த போர்வையில் வரலாறை சொந்தம் கொண்டாட முடியும்!இன்னும் சொல்லபோனால் இவர்களுக்கு வன்னியர் என்பது சாதி பெயர் தானே ஒழிய வன்னியர் என்ற பட்டம் இவர்களுக்கே கிடையாது.இவர்களோ படையச்சி,கவுண்டர்,கவுடா,நாயக்கர்,ரெட்டி,ராவ்,.. என்றுதான் பட்டம் சூடுகிரர்கள்.
இறுதியாக காட்டும் ஆதாரம் ஒன்றே ஓன்று.
திருநெல்வேலி பெருமாள் கல்வெட்டில் மறவரின் வன்னிய பட்டம்
க.என்:35
ஆட்சி ஆண்டு:கி.பி.1547
இடம்:இளவேலங்கால்
குறிப்பு: போரில் இறந்துபட்ட மறவர்க்கு கல்
அரசன்: திருநெல்வேலி பெருமால்
கல்வெட்டு:
சகாத்தம் துல் கில வருசம் மாதம் ..
திருநெல்வேலி பெருமாளாம்
வெட்டும் பெருமாள் இளவேலங்காலிருண்
தருளி போது.......வெங்கல ராச வடுக படை.....
வெட்டிய கோனாடு வகை பொது வேலங்காலிருக்கும்
குண்டையன் கோட்டை மறவரில் லிங்க தேவ வன்னியனை...
...பட்டான் வென்று முடிகொண்ட விசயாலய தேவன்

இதிலிருந்து கல்வெட்டில் வன்னியர் பட்டம் 15- ஆம் நூற்றாண்டு முன்னாலிருந்து வழக்கில் உள்ளது.


undefined
(History of tirunelveli by robert caldwell bishop) Most Marava palaiyams were contiguous units at the foot of the Eastern Ghats and were collectively known as the Western Bloc. Nayaka palaiyams (mostly in eastern Tirunelveli, Dindigul, and Coimbatore) constituted the so-called Eastern Bloc.only Marava and Nayaka have the paliyams in Tirunelveli. Each polegar “concentrated in his hands the exchange of money and the traffic of every merchantable article that was produced within the pollam’s limits. He also possessed the sole exercise of judicial authority, both civil and criminal, in the fullest extent.” “In areas of Marava and Vaduga [Telegu-speakers] settlement concentration, specific chiefs were recognized as the official heads of territorial segments of the [Nayaka] state. The largest of these palaiyakkarar domains … were those of Ettaiyapuram, Chokkampatti, Panchalamkurichi and Sivagiri.”
மறவர்கள் பாளயம்கள் அனைத்தும் நெல்லை மேற்கு தொடர்ச்சி மழைதொடரில் அமைக்கபட்டு இருக்கும் இதம் பெயர்(மேகாடு).நாயக்கர் பாளயம்கள் அனைத்தும் நெல்லை கிழக்கில் அமைக்கபட்டு இருக்கும் இதம் பெயர்(கீகாடு).மறவரையும் நாயக்கரையும் தவிர வேறு யாருக்கும் மதுரைக்கு தெற்கு பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை யாருக்கும் பாளையம்கள் கிடையாது. மறவர் பாளயபட்டுகளின் வம்சங்களும் அதன் உட்பிரிவுகளும்:

நெல்லைச் சீமையில் களக்காடு முதல் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடியைத் தொட்டு நின்ற இராƒபாளையம் வரை மறவர்கள் பரவியிருந்தார்கள். பெரும்பாலான மறவர் பாளையங்கள் இப் பகுதியிலேயே உருவாக்கப்பட்டன.
ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் . உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். கொல்லம்கொண்டான்,கங்கைகொண்டான் மற்றும் சேத்துர் முதலிய மூன்று பாளயம்கள் வனங்காமுடி பண்டார மறவர். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னியர் பட்டம் கொண்ட வன்னிகொத்து மறவர்கள் இவர்க்ள் வன்னியர்(பள்ளி) அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார்.

மறவர் ஜமீன்கள்(திருநெல்வேலி)
----------------------------------------------
1. சிவகிரி-சங்கிலி வீர பாண்டிய வன்னியனார்
2. சேத்துர்-ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்
3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
7. ஊர்க்காடு- சேது ராம தலைவனார்
8. தெங்காஞ்சி- சீவல மாறன்
9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
10. திருக்கரங்குடி- சிவ ராம தலைவனர்
11. ஊற்றுமலை- ஹிருதலய மருதப்ப பாண்டியன்
12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்
14. தலைவன் கோட்டை- இரட்டைகுடை இந்த்ர தலைவனர்(அ) ராம சாமி பாண்டியன்
15. கொடிகுளம்- முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்
16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்க தலைவனார்(அ) பூலோக பாண்டியன்
17. மனியச்சி- தடிய தலைவனார் பொன் பாண்டியன்
18. குற்றாலம்- குற்றால தேவன்
19. புதுகோட்டை(திருனெல்வெலி)- சுட்டால தேவன்
20. குருக்கள்பட்டி- நம்பி பாண்டிய தலைவனார்
21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்
22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்
23. தெண்கரை- அருகு தலைவனார்
24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்
----------------------------------------------------
மறவர் சமஸ்தனங்கள்
*******************************
1. ராமநாதபுரம்- சேதுபதி(சேது செம்பியன்)
2. சிவகங்கை- கௌரி வல்லப உடையார் தேவர்(கவுரியர்)
---------------------------------

மறவர் ஜமீன்கள்(ராமநதபுரம்)
------------------------------------------------
1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்
2. பாளையம்பட்டி - தசரத சின்ன தேவர்
3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்
4. கட்டனூர்- தினுகாட்டுதேவர்
5. அரளிகோட்டை- நல்லன தேவர்
6. செவேரக்கோட்டை - கட்டனதத் தேவர்
7. கார்குடி- பெரிய உடையன தேவர்
8. செம்பனூர்- ராஜ தேவர்
9. கோவனூர்- பூலோக தேவர்
10. ஒரியுர்- உறையூர் தேவர்
11. புகலூர்- செம்பிய தேவர்
12. கமுதி கோட்டை - உக்கிர பாண்டிய தேவர்
13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்


ஆய்வுக்கான நோக்கம்:
மற்றவர் பெருமையை அபகரித்து, போலி பெருமை தேடும் அளவுக்கு எங்கள்(முக்குலத்தோர்) சமூகம் இல்லை. ஏனெனில் எங்களுக்குள்ள வரலாற்றுப் பெருமைகள் வேறு எவருக்கும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. அதற்காக எங்கள் பெருமைகளில் ஒன்று திருடப்பட்டால் நமக்குத்தான் வேறு பல பெருமைகள் உள்ளனவே, இது ஒன்று போனால் போகட்டும் என்று விட்டு விட முடியாது. கூடாது. விட்டு விடுவது அல்லது விட்டுக் கொடுப்பது எங்களுக்குப் பெருமை தாராது. எங்கள் புகழ் அனைத்தையும் பேணிக்காக்கும் கடமையும், உரிமையும் எங்களுக்கு உண்டு.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.