Saturday, April 23, 2016

ஈழ மறவர்


இலங்கையில் மறவர்குடியேற்றம் சோழ,பாண்டியர் காலத்தில்


நித்திலத்தீவென்று வித்தகரால் போற்றிப்புகழ்ந்த இலங்கை என்ற ஈழவள நாட்டிலே முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களான மறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.வடஈழத்திலே, குறிப்பாகத் தீவகத்திலே குடிபதி களாக வாழ்ந்த மறவர்குலத்தவர்கள்.இவர்கள்“நெடுந்தீவு சஞ்சுவான் கோயில் கிறீஸ்தவர்கள் தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாக நெடுந் தீவில் இறக்கப்பட்டவர்களென்றும், இவர்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்களென்றும்மற்றப்படி உள்ளபடியே இவர்கள் மேன்குல மக்களென்றும்” அறிய முடிகிண்றது.

பண்டைக்காலத் தமிழர் காலத்தில் மாதோட்டம் மிகச் சிறந்த செல்வ நாடாய்த் திகழ்ந்தது. ரோமர், கிரேக்கர் முதலானோர் தம்மரக்கல்களோடு இங்கு வந்து, தந்தம் முத்து, தோகை, இலவங்கம், முதலாம் விலையுயர்ந்த திரவியங்கள் ஏற்றிச் சென்றிருக்கின்றனர்.

சோழர் காலத்தில் மறவர் குடியேற்றம்:

மாதோட்டத்தை ஆண்ட சிற்றரசர்களோடு பலமுறை சோழரும், பாண்டியரும் போர் பொருதியுள்ளனர். சிலகாலம் சோழரும் பாண்டியரும் மாதோட்டத்தை வென்று இங்கு ஆணையுஞ் செலுத்தியுள்ளார் கள். 9.பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடபாகம் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாயிற்று. கி.பி.1012 இல் முழு இலங்கையும் சோழமண்டலத்துக்குச் சேர்ந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த சிங்கை நகர் (வல்லிபுரம்) அரசர்கள் சோழப் பிரதானிகளாயினர். சோழர்கள் எண்ணிறந்த சைவக் கோவில்களைப் புதிதாக அமைத்ததுடன், பழைய சைவாலயங்களையும் புதுப்பித்தனர். நூற்றிருபத்தாறு நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சோழராட்சி இலங்கையில் நிலவிய காலத்தில் நயினாதீவில் இருந்த பழம்பெருமை வாய்ந்த நயினார்கோவிலும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கலாம்.



பிற்கால சோழர்களில் பராந்தக சோழன் ,முதலாம் ராஜ ராஜன்,ராஜேந்திர சோழன் தொடங்கி பிற்க்கால சோழர்கள் பல முறை இலங்கை மீது படையெடுத்துள்ளனர்.இதன் மூலம் தான் மறவர்கள் இலங்கைக்கு படைவீரரய் வந்துள்ளனர் . இவர்களின் படையெழுச்சிக் காலத்தில் மறவர்களே சேனா வீரர்களாகக் கடமையாற்றினர். போர் முடிந்த பிற்பாடு ஒரு சில போர்வீரர்கள் தம் தாயகந் திரும்பாமல் மாதோட்டத்திலே தங்கினர்.இது 12-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கூறுகின்றது.அந்த காலக்கட்டத்தில் சோழ அதிகாரிகளின் பெயர்களிலே இவர்கள் பணியாற்றியமைக்காக கல்வெட்டு ஆவனங்கள் உறுதி செய்கின்றனர்.மறவர்களுடன் வெள்ளாள மக்களும் இங்கு குடியேற்றப்பட்டுள்ளனர்.இவர்கள் இங்கு காடுகளை அழித்து கழனியாக்கவும் நில அளவைகனக்கர்களாக பணியாற்றவும் தருவிக்கபட்டனர்.இது 12-ஆம் நூற்றாண்டு மாதோட்டத்தில் உள்ள சோழ கல்வெட்டு உறுதி செய்கிறது. 1848 - P. 73. ^ யாழ்ப்பாணச் சரித்திரம் பக். 3 (ஆ. முத்துத்தம்பி)

ஈழமும் பாண்டியரும்

“தென்னாடு முத்துடைத்து” என ஒளவையாரால் புகழ்ந்து பாடப் பெற்ற நாடே பாண்டி நாடாகும். பாண்டிய மன்னர்க்குரிய செல்வங்களுள் முத்தே பிரதானமானது. முத்தாரமார்பனாய் பாண்டிய மன்னன் விளங்கினானென்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பாண்டி நாட்டின் கடல்படுதிரவியமான முத்துச் சிறப்பு தெளிவாகிறது.

dதமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் பக். 9 (வண. ளு. ஞானப்பிரகாசர்) அலையும் கலையும் (டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை)

கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிங்கள மன்னனான விஜயன் பாண்டியன் புத்திரியை மனந்து இலங்கைக்கு வரும்போது, பாண்டி நாட்டிலிருந்து எழுநூறு மேன்குலச் சீடமாட்டிகளோடும், பதினெட்டுவரிசையான பரிவாரங்கனோடும், ஐந்து வரிசையான ஏவலர்களோடும் வந்துள்ளதாக மகாவம்சம் கூறுகிறது. uமதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் நூற்றுப்பதினாறு பேர்களாவர். இந்நூற் றுப்பதினாறு மன்னர்களும் மொத்தம் 1740 ஆண்டுகள் ஆணை செலுத்தியுள்ளார்கள். ^ஈழ நாட்டுடனும் பாண்டிய மன்னர்கள் பலமுறை போர் பொருதி வெற்றிவாகை சூடினர். ஆனால் இவர்களின் ஆளுகை வெகு காலம் நீடிக்கவில்லை. எனினும் முதலாம் புவனேகபாகு என்னும் சிங்கள அரசன் காலத்தில் பாண்டி இராச்சியத்தை ஆண்ட ஐவர் சகோதரரும், பெரும் வலிமைபடைத்த தமது மந்திரியை ஒரு பெருஞ்சேனையுடன் இலங்கைக்கனுப்பி நாடுநகர்களையும், கோட்டை கொத்தளங்களையும் பாழாக்கிப் புத்தருடைய தந்ததாதுவையும் மற்றும் செல்வங்களையும் கொள்ளையடித்துப் பாண்டி நாட்டுக்கு மீண்டு குலசேகர மன்னனுக்கு தந்ததாதுவை அளித்தனா.; (மகாவம்சம்) தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் (வண. ளு. ஞானப்பிரகாசர்) ^யாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்) சடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் (1251-1280) இலங்கை அரசனிடம் யானைத் திறை பெற்றுள்ளதாகவும் சிதம்பரக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அக்கல்வெட்டுவருமாறு.

இச் சுந்தர பாண்டியன் ஈழத்து வேந்தனொருவன் திறை கொடுக்காதொழிந்த காரணத்தால் காலில் சங்கிலிபூட்டி வருத்தியதாகவும், சடவர்மன் இரண்டாம் வீரபாண்டியனும் இவ்வண்ணமே இலங்கையரசர்களிலிருவருள் ஒருவனைக் கொண்று அவனுடைய சேனை இரதம், சிங்காசனம், முடி முதலான சகல பொக்கிஷங்களையும் கைப்பற்றி, கோணமலையிலும், திரிகூடகிரி மலையிலும் பாண்டிய துவசங்களை நாட்டி, மற்ற அரசனிடம் யானைத்திறை கொண்டதாகவும் சாசனங்கள் கூறுகின்றன. (1254-1257) uயாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்).

பாண்டியன் காலத்தில் மறவர் குடியேற்றமும்

இவ்வண்ணம் பாண்டிய இராச்சியம், தலைசிறந்து விளங்கியதற்கும், பலபல போர்களிலே வெற்றி ஈட்டியமைக்கும், முத்துக்குளிப்புத்துறை சிறந்ததற்கும் மறவர்களின் போர்த்திறனே முக்கிய காரணம்.
<
மறவர்களே சகல பாண்டிய மன்னர்களுக்கும் நம்பிக்கையான படைவீரர்களுமாவர்.இந்த காலக்கட்டத்தில் இராமநாதபுரம் ஆண்ட சேதுபதியும்,யாழ்பானத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தி என்ற குணவீராஆரியசிங்கணும் பாண்டியருக்கு குறுநிலை மன்னனாக பணியாற்றிமைக்கு சாண்றாக மாறவர்மன் குலசேகர பாண்டியன்(1268-1330) இராமநாதபுரம் கல்வெட்டுகளில் யாழ்பானத்தை ஆண்ட குணவீரசிங்கனின் பெயரும் சேதுபதிகளின் பெயரும் கானப்படுகின்றனர்.


நெடுந்தீவின் பழங்காலச் சிறப்பு

வீரஞ் செறிந்த மறக்குடி மக்கள் இலங்கையிலும் பூர்வகாலந் தொட்டு நிலத்தரசர்களாய், குடிபதிகளாய் வாழ்ந்துள்ளனர். இவர்கள் பாண்டிய மன்னர்களுக்குப் போர்ப்பணி புரிந்தவர்கள் மாத்திரமல்ல, இம்மன்னர்களின் முத்துக் குளிப்புத் துறைகளுக்கும் காவலாளிகளாகவும் கடமை செய்துள்ளார். பாண்டியர்களின் தொடர்பு விஜயன் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைக்கேற்பட்டுள்ளதென முன் அத்தியாயத்தில் கூறியுள்ளோம். மாதோட்டத்தில் ஆணைசெலுத்திய தமிழ் சிற்றரசர்கள் பாண்டியருக்கும் சோழருக்கும் திறை செலுத்தியும் வந்துள்ளார்கள். சிலகாலம் சோழரும் பாண்டியரும் நேரடியாகவும் மாதோட்டத்தை ஆண்டுமுள்ளனர்.

விஜயன் இலங்கை அரசனான பிற்பாடும் பாண்டியரும் பலமுறை படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றினர். இவர்களின் படையெழுச்சிக் காலத்தில் மறவர்களே சேனா வீரர்களாகக் கடமையாற்றினர். போர் முடிந்த பிற்பாடு ஒரு சில போர்வீரர்கள் தம் தாயகந் திரும்பாமல் யாழ்ப்பாணத்திலே தங்குவதற்கு விருப்பங் கொண்டனர். வேறுசிலர் வெற்றியீட் டிய சந்தோஷத்திற்காக மன்னர்களிடம் சன்மானமாக நிலங்களைப் பெற்றுங் குடிபுகுந்தனர். இன்னும் சில மறவர்களை யாழ்ப்பாண மன்னர்கள் தமக்குச் சேவகம் புரிவதற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகத் தருவித்துமுள்ளனர்.

யாழ்ப்பாண குணவீரசிங்கையாரியச் சக்கரவர்த்தி மதுரையரசனுக்குப் படைத்துணை யனுப்பிய சந்தோஷத்திற்காகப் பெருந்தொகைத் திரவியமும் கன்னடர் சிலரையும், சிவிகையார் சிலரையும், வில்லியர் சிலரையும் வேடர் சிலரையும் இத்துடன் மறவர் சிலரையும் அனுப்பிவைத்தாகவும், மறவரை மறவழன்புலவிலிருத்தினரெனவும் யாழ்ப்பாணச் சரித்திரங் கூறுகிறது.

இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதுயும் யாழ்பானத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தியும்

சோழ, பாண்டிய அரசர்களும், அவர்களுக்குப் பின்பு சேது நாட்டு (இராமநாதபுரம்) அரசர்களும், பின் யாழ்ப்பாண அரசர்களும் முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் போன்ற தொழில்களை ஊக்குவித்து வந்தனர்.


இதன் பின்பு பாண்டியர் வீழ்ச்சியுற்ற காலக்கட்டத்தில் சிங்கை ஆரியன் பாண்டியன் மீதும் சேதுபதிகளின் மீதும் படையெடுத்து இருவரையும் வீழ்த்தி மதுரை பிடித்து பின்பு சேதுபதியையும் வீழ்த்தி "சேதுக்காவலன்" என்ற சிறப்பு பட்டம் சூடினான்.இதன் பிண்புகுணவீரசிங்கை ஆரியன் காலத்தில் இராமேஸ்வரக் கற்பக்கிரகத்தைக் கட்டுவதற்கு திரிகோணமலையிலிருந்து கொண்டவரப்பட்ட கற்களும் நெடுந்தீவு மார்க்கமாகவே கொண்டு செல்லப்பட்டது.குணவீரசிங்கை ஆரியன் காலத்தில் இராமேஸ்வரக் கற்பக்கிரகத்தைக் கட்டுவதற்கு திரிகோணமலையிலிருந்து கொண்டவரப்பட்ட கற்களும் நெடுந்தீவு மார்க்கமாகவே கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்பு சேதுக்காவலன் என்ற பெயரில் நந்தி ருபமும் கொண்ட நானயங்களை வெளியிட்டாண்.இதன் பின்பு சேதுபதி காத்த தேவரை விடுவித்து நாட்டை திரும்ப ஒப்படைத்தான் இவரது சேதுக்காவலன் நானயத்தில் ஒரு நந்தி,சங்கு,லிங்கம் காணப்படும்.காலம் 14-ஆம் நூற்றாண்டு.
இதன் பின்பு சேதுபதிகளும் தன் காலக்கட்டத்தில் சேதுக்காவலன் என்று வெளியிட்ட நாணயங்கள் காணப்படுகின்றன அவை இளம்பிறை(வளரி),கயல்மீன்,புலி கொண்ட நாணய அமைப்பை காணலாம்.காலம் 14-ஆம் நூற்றாண்டு. இந்த நானயம் புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே கண்டு பிடிக்க பட்டுள்ளது.பிற்கால சேதுபதிகள் நானயத்தில் கருட,அனுமன்,வளரி அமைப்பில் காணப்படும்.சேதுபதிகளுக்கும் யாழ்பாண அரசனுக்கும் சேதுக்காவலன் என்ற பட்டம் உண்டு இருவரும் வர்த்தக ரீதியாகவும் முத்துகுளித்தல் தொழில்கள் இரு ராஜ்ஜியத்திற்கும் பொதுவாக நடைப்பெற்றன.இருவரும் பாண்டியர் காலத்தில் செல்வாக்கு மிகுந்த சிற்றரசுகளாக திகழ்ந்ததாக யாழ்பாண் சரித்திரமும் இலங்கை வரலாறும் கூறுகின்றது. சேதுபதிகளின் நாணயங்கள் தமிழ்நாட்டிலும் யாழ்பாண அரசன்னின் நானயங்கள் இலங்கையிலும் கண்டெடுக்கபட்டு இன்று தொல்லில்யல் துறையில் உள்ளது.



சங்கிலி அரசன் காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து வந்த மறவர்கள் ஆதியில் மறவன் புலத்தில் குடியேறி, பின்பு பன்றியந்தாழ்வில் போய் தங்கியிருந்ததாகவும் யாழ்ப்பாண வைபமாலை கூறுகிறது.

The Maravars are of the Mukkulathor warrior caste and the people of Veeramanickthevanthurai also trace their lineage as being Kshatriya.The Kailaya Malai and the Vaiya Padal, the earliest works on the colonization of Jaffna, appear to be such histories. But eleven of them have Kallar and Maravar caste titles. The Jaffna Maravar were able to resume their caste occupation under the Dutch, who met troop shortages through Jaffna’s feudal military system which the Portuguese had attempted to dismantle. The Dutch governor and director of Ceylon, Thomas van Rhee informed his successor Gerrit de Heere in 1697, that in the Jaffna peninsula "the Marruas are bound to serve the Company as Lascoryns (native soldiers) and pay t[w]o Fanams a year without anything more". But 93 years later, a Dutch census (1790) of all males between the ages 16-70 in Jaffna recorded that there were only 49 Maravar males in the peninsula, as against 1,570 Vellala males.

இன்னும் “1048ம் ஆண்டு நல்லூரை ஆண்ட கூழங்கைச் சிங்கை ஆரியனுக்கு மறவர்களே படைவீரர்களாக இருந்தனர். இவர்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர் களேயாவர் இவர்கள் மறவகுலச் சத்திரியராவர். போரில்லாக்காலங்களில் கமஞ்செய்வதே இவர்களின் பிரதான தொழில். இவர்களின் குலரப்பெயர்களை அடிப்படையாகக்கொண்டே மறவராட்சியென அழைக்கப்பட்டு, மராட்சியெனத்திரிந்து, பின் வடமராட்சி, தென்மராட்சியென வழங்கப்படுவதாயிற்று. இவர்கள் வழிபடும் தெய்வம் ஐயை அல்லது துர்க்கை. சண்டைக்குத் தலைமைபூண்ட இப்பெண்தெய்வத்தையே மறவர் மாத்திரமன்றி தமிழ் அரசர்களும் வணங்கி வந்தனர். இதன் காரணமாகவே நல்லூரரசன் வீரமாகாளியம்மை கோயிலைத் தன் இராசதானியில் கட்டுவித்து வணங்கி வந்தான். மறவர் குடியேறிய பாகங்களிலெல்லாம் துர்க்கை கோவில்கள் ஸ்தாபிதமாயின. பருத்தித் துறை சாமுண்டியம்மை, வல்வை முத்துமாரியம்மை, இடைக்காடு மாதகல், அராலி, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய இடங்களிலுள்ள அம்மன் கோயில்களெல்லாம் இந்நோக்கமாகவே உண்டாயின.”

மேலே கூறிய செய்தி 7-2-67ல் தினகரனில் வெளிவந்த கட்டுரைச் செய்தியாகும். இதனை இங்கு பிரசுரிக்கவேண்டிய பிரதான நோக்கம், கோயில்களைப் பற்றியல்ல மறவர் களின் குடியேற்றத்தைச் சுட்டிக்காட்டவேயாகும். the Karaiyar of Myliddy which states that three Marava chieftains who were brothers came with their caste-men from Tamilnadu, married among the karaiyar and founded the village. Its dominant clan, known as Thuraiyar – the others are known as Panivar – was connected by marriage to Ramnad, the home country of the Maravar, until recent times. The martial arts of Maravar were popular among the Thuraiyar of Myliddy, before their youth were introduced to modern methods of military training in the last decade [i.e., 1980s]. A narrative related to the founding of Valvettithurai, based on folk etymology states that the village arose on land given to a Marava chieftain, called Valliathevan, by the eponymous founder of the Tamil kingdom of Jaffna

இவ்வித ஏதுக்களைக்கொண்டு மறவர்கள் யாழ்ப்பாணத்தில் பலபாகங்களிலும் குடியேறியுள்ளது நிச்சயமென்பதை முடிவுகட்டலாம். இவர்கள் குடியேறிய ஒரு சிலஇடங்களில் தற்போது இக்குலத்தவர்கள் இல்லாவிடினும் இவர்களின் குலப்பெயர் களைக் கொண்ட கிரமங்களான மறவன்புலம், மறவன்காடு, மறவனோடை, மறவன்பிட்டி இன்றும் இருப்பதை நாம் அறியலாம்.

இவர்களின் குடியேற்றம் மாதோட்டத்திலுமுண்டு. மாதோட்டப் பகுதியில் மறவர்களின் நாமத்தோடு அநேகம் காணிகளும், கிராமங்களும் இருக்கின்றன. அடம்பனுக்கருகில் மறத்திகன்னாட்டி என்னும் ஓர் கிராமம் இருப்பதையும், அங்கு ஏராள மான மறவர்கள் இன்றும் நிலத்தரசர்களாயிருந்து வருவது இதற்கோர் எடுத்துக்காட்டாகும். பூநகரியிலும் இக்குலத்தவர்கள் சீவிக்கின்றார்கள்.

மறவர்கள் உயர்வான சத்திரியகுலத்தவர்களான படியால் மேன் குடிமக்கள் எவ்வித அச்ச ஆசவமின்றி சம்பந்தம் செய்ததினால் காலகதியில் இவர்களின் குலம் கருகிப் போயிருக்கலாமெனவும் யூகிக்க இடமுண்டு.

மாதோட்டத்திலும், யாழ்ப்பாணப் பகுதியிலும் மறவர்களின் நாமங்களைக் கொண்ட காணிகள், தோட்டங்கள், வயல்கள் விளங்குமாப்போன்று நெடுந்தீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, லைடன்தீவு முதலாந் தீவுகளிலும் பலபல இடங்கள் செறிந்து விளங்குவதினால் இங்கும் இவர்களின் குடியேற்றம் இருந்திருப்பது உண்மையேயாகும். அதிலும் விசேஷமாக நெடுந்தீவில் இவர்கள் நிச்சயம் குடிபுகுந்திருப்பதற்குப் பலபல காரணங்களுமுண்டு.

நெடுந்தீவு இந்தியாவுக்கு வெகு சமீபமாயிருப்பதாலும், அதிலும் பாண்டி நாட்டின் கிராமங்களான, இராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், கோடிக்கரை, தனுஷ்கோடி, அக்காமடம், தங்கச்சிமடம், வல்லை முதலான கிராமங்கள் இருபது மைல் தூர வித்தியாசத்திலே அமைந்துள்ளதாலும், வல்வை ஓர் பிரசித்தம் வாய்ந்த கடற்றுறையாக விளங்கியதினாலும், வல்லையிலும் மேற்கூறிய கிராமங்களிலும் பெருந்தொகையான மறவர்கள் வாழ்ந்தமையாலும், மறவர்கள் வெகு இலகுவாக நெடுந்தீவில் வந்து தங்குவதற்கும், குடிபதியாய் வாழ்வதற்கும், வாய்ப்பிருக்கிறது. மேலே சுட்டிக்காட்டிய ஒரு சில சரித்திரக்குறிப்புக்களும், கட்டுரைகளும் நெடுந்தீவில் மறவர்கள் வாழ்ந்தனர் என்ற உண்மையையும் இந்தீவின் பண்டைக்காலப் பெருமையையும் தெளிவாக்கிறது.

But a strong tradition was prevalent among the Karaiyar of Valvettithurai that they had fought the Portuguese as the soldiers of the last king of Jaffna, Sankili. This tradition, as we shall see later, was greatly exploited by TULF propagandists to mobilise people in that part of Jaffna. The tradition seems to be related to the trade wars between the early colonial powers and the Maravar kings of Ramnad. The Portuguese, Dutch and the British tried to wrest control of the profitable rice and chank trade between Burma, Bengal and Ceylon which was in the hands of the Thevars (title of the Ramnad kings) and their Muslim and Tamil tradesmen, on either side of the Palk Strait, among whom were many Karaiyar schooner proprietors of Valvettithurai, Point Pedro and Thondamanaru. The British found that one Vaithianathan of Jaffna was among the few confidantes of the Thevar, who were looking after his chank trade in Calcutta. Karaiyar families carried on with the rice and chank trade in collaboration with Muslims, Chetties and military caste families on the south Indian coast from Ramnad to Tanjore, even after the British finally wrested control of it from the Maravar kings of Ramnad. A large number of Thandayals (traditional navigators – captains of ocean going craft) from Valvettithurai, Point Pedro were employed in the Thevar’s domain of sea trade. This became the basis of a vast ‘smuggling network’ between south India, Sri Lanka and southeast Asia, after independence in1948. The powerful Vandayar family (Maravar) of Tanjore maintained very close relations with a leading business house of Valvettithurai until 1983.

யாழ்பான சாதியரின் தொழில்களின் விவரம்:

தமிழ் நாட்டிலே தொழிலின் காரணமாகவே சாதிப்பிரிவுகளேற்பட்டதென்பது சகலரும் ஒரே வாய்ப்பட ஒப்புக்கொள்ளப்பட்டதொன்றாகும். பலபல தொழில்களைப் புரியும் சகல சாதியரும் நாட்டுக்குத் தேவைப்பட்டபடியால் எல்லாக் குலத்தவர்களும் ஈழநாட்டில் குடியேற்றப்பட்டனர். இன்னும் இராசபவனிக்கும், அரசாங்க சேவைக்கும் தேவைப்பட்ட சிவிகை காவுவோர், கோல் கொண்டொழுகுவோர், முரசடிப்போர், பறைசாற்றுவோர் முதலா னோர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

குடியேற்றப்பட்ட சாதியருள் ஒருசல சாதிமக்களுக்கு அரசாங்கம் சில பல ஒழுக்கங்களை வகுத்து, அதனைக் கட்டாயச் சட்டமுமாக்கி அதன் பயனாய் நாட்டுக்கு வருமானத்தையும் ஊழியத்தையும் தேடிக்கொண்டது. உதாரணமாக வேளாளர், செட்டிகள் முதலாம் சாதியருள் தாம் தாம் ஒழுதுண்டு வாழ்பவரைத் தவிர உழவர், பள்ளர் முதலாம் பண்ணையாட்களைக் கொண்டு கமஞ்செய்து உண்பவரெல்லாம் தமக்கு வேலைசெய்யும் அத்தனை வேலையாட்களையும் கொண்டு வருஷமொருமுறை பதினைந்து நாட்களுக்கு இராச ஊழியஞ்செய்ய அனுப்புதல் வேண்டும். விளைவில் ஆறிலொரு பங்கும் கொடுக்க வேண்டும். சிவியார் எனப்பட்டோர் அரசாங்க சிவிகையாட்களாகவும், சிவிகை முன் செல்லும் கூறியராகவும், அரன்மனை வாயிலாளராகவும், ஒவ்வொரு குழுவினராக மாதந் தோறும் முறைப்படி இராசசேவை செய்யவேண்டும். இத்தொண்டிற்காக அரசாங்கத்தால் நிலங்கள் அவர்களுக்கு உபகரிக்கப்பட்டன. ஆண்டிகளானோர் விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்து ஊர்கள் தோறும், கிராமங்கள் தோறும் சென்று சங்குகள் ஊதி மக்களைத் துயிலெழுப்ப வேண்டும். கோயில்களிலும் அரண்மனைகளிலும் செய்யும் சேவைகளை ஒழித்த மற்றக்காலங்களில் ஊர்தோறும் சென்று யாசகம் பண்ணுவதோடு மாரியம்மன் கோயில், பிடாரி கோயில்களுக்குப் பூசகராயும் வலைஞர் முதலிய சாதியாருக்கு குருக்கள் மாராகவும் பணியாற்றவேண்டும். முக்கியர், கரையார், பரவர், திமிலர் முதலானவர்களில் அரசாங்க கடற் சேவையிலிருப்பவரைத் தவிர, மற்றவர்கள் முத்துக்குளிப்புக் காலத்தில் வருடத்தில் பதினைந்து நாளைக்கு அரசாங்க கடமையாற்றக் கடமைப்பட்டவராவர். இவர்களுக்கு மீன் வரியில்லை. வலையர் அரசன் வேட்டைக்குச் செல்லும் போது உடன் செல்லவேண்டும். கடைஞர் சுண்ணம் நீற்றுக் கொடுத்தல் வேண்டும். கம்மாளர், கொல்லர், தச்சர் முதலான விஸ்வகர்ம குலத்தவர்கள் கிராம மக்களுக்கு தேவைப்பட்ட கலப்பை, கொழு, அரிவாள் முதலியவைகள் கூலியின்றிச் செய்து கொடுத்தும், வருடத்தில் எட்டு நாளைக்கு இராசகாரியமுஞ் செய்தல் வேண்டும். இவர்களுக்குக் கிராமங்கள் தோறும் வரியின்றி நிலங்கள் வழங்கப்பட்டன. ஈழத்திரும்பென நெடுங்காலம் பெயர்படைத்த இரும்பு யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட இரும்பேயாம். கன்னார், தட்டார், கற்சிற்பியர் இராச அரண்மனையிலும் கோயிலிலும் வருடத்தி;ல் பதினைந்து நாள் வேலைசெய்யுங் கடமைப்பட்டவராவர்.சிவியார் அரசாங்கத்துக்குச் சிவிகை ஆட்களாகவும், சிவிகை முன் செல்லுங் கூறியராகவும், அரன்மனை வாயில் காப்போராகவும், மாதங்கள் தோறும் முறைப்படி ஒவ்வொரு தொகையினராக மாறி மாறிக் கடமையாற்றல் வேண்டும். இவர்களுக்கு அரசாங்க நிலங்கள் மான்யமாய்விடப்பட்டன. உமணர் இரசாங்கத்துக்கு உப்பு அமைப்பவர்களாக இருந்தார்கள். ஆண்டிகள் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று சங்கநாதஞ் செய்து மக்களைத் துயிலெழுப்பவேண்டும். கோயில்களிலும் அரண்மனைகளிலுமுள்ள முறைக்காலங்களைத்தவிர ஏனைய நாட்களில் ஊர்தோறுஞ் சென்று யாகஞ்செய்து பிழைக்க வேண்டும். முக்கியர், கரையார், பரவர், திமிலர் முதலானோர் முத்துக்குளிப்புக் காலங்களில் வருஷத்தில் பதினைந்து நாளைக்கு இராச ஊழியஞ் செய்யக் கடமைப்பட்ட வராவர். இவர்களுக்கு மீன் வரியில்லை. கொல்லர், தச்சர் முதலானோர் கிராமத்தாருக்கு வேண்டும் கல்பை, கொழு, அரிவாள் முதலியபயிர்த் தொழில் கருவிகளைக் கூலியின்றிச் செய்து கொடுக்கவேண்டும். வருஷத்தில் எட்டு நாளைக்கு இராச கருமமுஞ் செய்தல் வேண்டும். அரசாங்க நிலங்கள் மான்யமாய் விடப்பட்டன. நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன. கைக்கோளர், சேணியர்களுக்குயாதொரு கட்டுப்பாடுமி;ல்லை. கன்னார், தட்டார், கற்சிப்பியர் முதலானோர்! இராச அரண்மனையிலும், கோயில்களிலும் வருஷத்தில் பதினைந்து நாட்கள் வேலை செய்யக் கடமைப்பட்டவராவர். வண்ணார் முறைமுறையாக அரசன் சென்று தங்குமிடங்களுக்கு வெள்ளை கட்டுங்கடனுடையார். பறையர் யுத்தகாலங்களில் முற்பறை கொட்டுங் கடனுடையர். இவ்வண்ணம் ஒவ்வொரு சாதியாரும் வருஷந்தோறும் சில சில தினங்களுக்கு இராசகாரியங்கள் செய்து வந்தனர். இவ்வழக்கம் பரங்கியர், ஒல்லாந்தர் காலங்களிலும் நீடித்து இருந்து பின் ஆங்கிலேயர் காலத்தில் 1810ம் வருடம் இவைகள் நீக்கப்பட்டன.

மறவரின் - யாழ்ப்பாண அரசாங்கத்தின் அலுவள்கள்:

மேலே கூறப்பட்ட சாதியரைப் போலவே மறவரும் பதினாறு முதல் இருபத்துநான்கு வயது வரையும் போர்ப்பயிற்சி கற்றுப் பின்பு கிராமக் காவலராகி படைத்தொழிலுக்கு வேண்டிய காலத்தில் தொண்டாற்றவும் கடமைப்பட்ட வராயினர். மற்றவர்கள் பதினாறு வயது முதல் இருபத்துநான்கு வயதுவரை யுத்தப்பயி ற்சிபயின்று கிராமக் காவலராக கடமையாற்றி, போர்ப்பறை முழங்கும்போது படையில் சேர்ந்தும் சேவைசெய்ய வேண்டும். இவர்களுக்கு அரசாங்க நிலங்கள் மான்யமாக வழங்கப்பட்டன. யுத்தமில்லாக் காலங்களில் கிராமக்காவல் செய்து வாழுதல் வேண்டும்.

இவர்களைப் போலவே அரசனையும் நாட்டையுங், காப்பதற்கும், பயமின்றி வாழ்வதற்கும், பகைவரை அழித்தொழிப்பதற்கும் தம் சொந்தக் குலத் தொழிலாய்க் கொண்ட மறவர்களையும் தம் நாற்படைகளிலும் பணிபுரிவதற்கும் வரவழைத்து அமர்;;த்திக் கொண்டனர்.

குடியேற்றப்பட்ட சாதியார்கள் அனைவரும் வேளாண் முதலிமார்களின் துணைகொண்டே, தருவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் மறவர்கள் படைவீரர்களா கவும் மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாகவும் இலங்கைக்கு வந்தார்களேயொழிய ஏனைய சாதியர்களைப் போல் வேளாண் பிரபுக்களால் குடியேற்றப்பட்டார்களென நம்ப இடமில்லை. இவ்விதிகளுக்கமையவே பண்டைக் காலத்தில் சகலசாதியரும் வருடத்தில் சில நாட்களுக்கு இராசபணிகள் செய்து வந்தனர். இவ்வழக்கம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலம் வரைக்கும் நீடித்திருந்து பின்பு 1810ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. (யாழ்ப்பாணச் சரித்திரம் ஆ. மு. பி.)

கைலாயமாலைப் பாடலிலும் யாழ்ப்பாண வைபவமாலையிலும் கூறப்பட்ட தனிநாயகமுதலியும் அவன் பரிவாரங்களும் நெடுந்தீவில் குடியேறுவதற்கு முன்னும், முஸ்லிம்கள் சங்கு குளிப்பதற்கு இங்கு வந்து தங்குவதற்கு முன்னும், படைவீரர்களே ஆதியில் நெடுந்தீவில் குடியேறினர் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.

நெடுந்தீவின் பூர்வகுடியினர் மறவரே

இவர்கள் தமிழ் நாடான பாண்டி நாட்டிலிருந்தே வந்தவர்களாவர். பாண்டிநாட்டில் போர்வீரர்கள் யாவரும் மறவர் குலத்தார் என்பது சங்க இலக்கியங்களாலும் மற்றும் இந்தியநாட்டுச் சரித்திரங்களாலும் சந்தேகமறத்தெளிந்த உண்மையாகும். இவ்வுண்மையின் படியும், முன் அத்தியாயங்களில் கூறிய சரித்திர ஆதாரங்களின் படியும் நெடுந்தீவின் பூர்வ குடிகள் மறவரே மறவரென்பது யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய தொன்றாகும். நெடுந்தீவில் இவர்கள் குடியேறிய காலத்தில் தாம் இந்தியாவில் வசித்த கிராமத்தின் பெயரான வல்லையை இங்குஞ் சூட்டியுள்ளார்கள். தற்போது வல்லையெனப்பட்ட பெயரால் வெல்லையாக மாறப்பட்டு வந்துள்ளது. யுத்தத்தில் பணிபுரியாத மறவர்கள் வெல்லையில் குடியேறியிருக்கலாம். போர்வீரர்கள் மாத்திரம் துறைமுகத்துக் கருகாமையில் பாடி அமைத்து வாழ்ந்து பின்பு குடும்பமாய் வாழ்வதற்கும் இவ்விடத்தையே வளமாக்கிக் கொண்டிருக்கலாம். காலகதியில் தமிழ் மன்னர்களின் செல்வாக்கும், யுத்தங்களும் குறைந்து குறைந்து போக, யுத்தத் தொழிலையே நம்பியிருந்த மறவர்கள் தம் சீவனத்திற்காக வௌ;வேறு தொழில்களைப் புரியவுந் தலைப்பட்டனர். வெல்லையில் குடியிருந்தோரும் மெல்ல மெல்லத் துறைமுகத்தை நாடிவரலாயினர். துறைமுகத்தில் போர் வீரராகக் கடமையாற்றியோரும், வெல்லையிலிருந்து மெல்ல மெல்ல வந்தோருமான இக்குலத்தவர்கள் தம் தாயகமான இந்தியாவை நாடாமல், நெடுந்தீவு நடுக்குறிஞ்சியையே தம் சொந்த நடாக்கிக் கொண்டு வாழலானார்கள். இவர்களின் குலப்பெயர்களைக் கொண்ட மறவன்புலம் என்னும் ஒரு பரந்த வெளியும், மறவனோடையும் நெடுந்தீவிலிருப்பது கண்கூடு.

மறவரின் பெயர்கொண்ட காணிகளும் குறிச்சிகளும்

இருபெரும் பகுதிகள். ஒன்று வடமராட்சி (வட + மறவர் + ஆட்சி) மற்றது தென்மராட்சி (தென் + மறவர் + ஆட்சி) இன்னும் மறவன்புலம் (சாவகச்சேரியிலுள்ளது) மறத்திகன்னாட்டி (அடம்பனுக்கும் நெடுங்கண்டலுக்கு மிடையிலிருக்கிறது) தற்போதும் மறவர்கள் இங்கு பெருந்தொகையாக வாழ்கிறார்கள். இன்னும் மறவன்பிட்டி, மறவன்திடல். மறவன்காடு, மறவன் ஓடை முதலாம் பெயர் கொண்ட இடங்களெல்லாம் இவர்களின் பூர்வதலங்களாம். நெடுந்தீவு, புங்குடுதீவு முதலிய தீவுகளிலும் மேற்கூறிய நாமங்கள் கொண்ட காணிகளும் குறிச்சிகளும் இருக்கின்றன. வேலணையில் பழைய பஸ்நிலையத்திற் கருகாமையிலிருக்கும் ஒருகாணியின் பெயர் வலதேவன் சீமாவென்று அழைக்கப்படுகிறது. இது மாத்திரமல்ல தமிழ்மன்னர்காலத்தில் மறவர்களுக்குக் காணிகள் குறிச்சிகள் கொடுத்தவிதமும் ஒரு நூதனமுறையாகும். அது எப்படியெனில். காணிகளோ, குறிச்சிகளோ விரும்புகின்ற மறவனைத் தமிழ் மன்னன் அழைத்து, மூச்சுப்பிடிக்கும்வரைக்கும் நீளத்துக்கும் அகலத்துக்கும் ஓடச்சொல்லி, ஓடுமட்டும் ஒடி எங்கே களைத்து நிற்கிறானோ அங்கிருந்து ஒடியதூரம் வரைக்கும் உள்ளநிலத்தைச் சதுரப்பட அளந்து மான்யமாகக் கொடுக்கப்பட்டதாம். கொடுக்கப்பட்ட குறிச்சிகளுக்கு அந்தந்த மறவர்களின் நாமமே வழங்கப்பட்டதாம். இவ்வண்ணம் மறவர்களுக்கு மான்மமாக வழங்கப்பட்ட குறிச்சிகள் பருத்தித்துறை சிவன்கோயிலுக்கருகாமையிலுள்ள சிங்கபாகுதேவன் குறிச்சி, வதிரியிலே வதிரிபாகுதேவன் குறிச்சி, உடு;ப்பிட்டிப்பகுதிகளிலே சமரபாகு தேவன்குறிச்சி, செயக்கொடி பாகுதேவன் குறிச்சி, குறுளிபாகுதேவன் குறிச்சி முதலியன இன்றைக்கும் உறுதிச்சாசனங்களில் எழுதப்பட்டு வருகின்றன. அன்றியும் மறவருள்ளே தலைசிறந்த அதிகாரிகளாக விளங்கிய வீரமாணிக்கத் தேவனும், நராங்குபாகுதேவனும் பலாலியிலும், நரசிங்க தேவனும், சி;ன்னநாட்டான் தேவனும் மயிலிட்டியிலும் சிற்றரசர்களைப் போன்றவலிமையோடு வாழ்ந்தார்கள்

மறவரின் பட்டங்களும் விருது பெயர்களூம்

இவர்களுக்கு வழங்கியுள்ள பழங்கால நாமங்களைக் கொண்டும் ருசுப்படுத்தலாம். வல்லைத் தேவன், வலங்கை மறான், புலிமாறன், விலங்குத் தேவன், கோரமாறன், கொம்புத்தேவன், நீலமாறன் முதலாம் பெயர்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தேவன் மாறன் என்ற நாமங்கள் மறவருக்கு உரித்தான பெயர்களாகும். இன்னும் இவர்கள் கத்தோலிக்கரான பின் ஞானஸ்நானப் பெயரோடும் இவர்களின் குலப்பெயர்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஞானஸ்நானப் பதிவு நூலில் பரக்கக் காணலாம். விலங்குப் பாவுலு (இவர் விலங்குத் தேவன் சந்ததி) கொம்பன் அந்தோனி (இவர் கொம்புத் தேவன் சந்ததி) நீலன் குருசான் (இவர் நீலமாறன் சந்ததி) இவ்வண்ணம் எத்தனையோ பெயர்களுண்டு. இன்னும் இக் குலத்தவர்கள் வணங்கிய சூலியம்மாள் என்னும் தேவதையின் பெயரைக் கொண்டும் ஒரு பெண்மணிக்கு சூலாயி ஆனாள் என்ற பெயரும் ஞானஸ்நான டாப்பில் இருப்பதையும் அறியலாம்.

இன்னும் இக்குலத்தவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால் அதிலும் ஆண் குழவி வந்தால் பிள்ளை பிறந்த முப்பத்தொராம் நாளை வெகு சிறப்பொடு கொண்டாடுவார்கள். உற்றார் உறவோர் நண்பர் முதலானோருக்குத் திருமுகம் போக்கி யாவரும் வரவழைக்கப்பட்டு அக் கொண்டாட்டம் நடைபெறும். இவ் வைபவத்தின் போது நடுவீட்டில் இதற்கென சாணத்தால் மெழுகிடப்பட்ட இடத்தில் மஞ்சள் மாவினால் ஒருசிங்க உருவம் கீறுப்பட்டிருக்கும். அதன்மேல் வயதுமுதிர்ந்த மூதாட்டி ஒருத்தி பிறந்த சிசுவை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாடல் படிப்பாள். அப்பாட்டில் குறிப்பிடும் சாமான்களெல்லாம் பிள்ளைக்கு அன்பளிப்பாக இனசனங்கள் கொண்டுவந்து வைப்பார்கள். இவ்வுண்மையின் படியும், முன் அத்தியாயங்களில் கூறிய சரித்திர ஆதாரங்களின் படியும் நெடுந்தீவின் பூர்வ குடிகள் மறவரே மறவரென்பது யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய தொன்றாகும்.மேலே சுட்டிக்காட்டிய ஒரு சில சரித்திரக்குறிப்புக்களும், கட்டுரைகளும் நெடுந்தீவில் மறவர்கள் வாழ்ந்தனர் என்ற உண்மையையும் இந்தீவின் பண்டைக்காலப் பெருமையையும் தெளிவாக்கிறது.

செய்தி விபரம்: Part 4: Militarism and Caste in Jaffna
by D.P. Sivaram
[courtesy: Lanka Guardian, July 1, 1992, pp.9-10 and 14; prepared by Sachi Sri Kantha, for the electronic record]


THE SRILANAKAN READER-JOHN CLIFFORD HOLD
1. தேர்த் திருப்பணிச் சபை மலர்(1957)- முதலியார் குல.சபாநாதன்
2. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்(1928)- நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
3. நயினாதீவு நாகம்மாள்(2003)- நாகேசு சிவராச சிங்கம்
4. குடமுழுக்குவிழா மலர்(2005)- கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில்
5. யாழ்ப்பாண சரித்திரம்(1933)- முதலியார் செ.இராசநாயகம்
6. Sketches of Ceylon History (1906)- Sir Pon Arunachalam
7. Ancient Jaffna (1926)- Mudaliyar C. Rasanayagam

மகாபாரதப் போரை நினைவு கூரும் உடப்பு திரௌபதை அம்மன் திருவிழா

உடப்பூர் க. மகாதேவன்
http://archives.thinakaran.lk/2013/07/20/?fn=f1307201
 
 
இலங்கையின் கிழக்கு, வடமேற்கு, மத்திய பிரதேசங்களில் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் சக்தி வழிபாடு காணப்படினும் இப்பிரதேசங்களில் சக்தி வழிபாடு குலதெய்வ வழிபாடாகக் காணப் படுகின்றது.
மஹா பத்திரகாளி மாரியம்மன், கண்ணகியம்மன் காளியம்மன் நாச்சியம்மன், இராக்குருசியம்மன், திரெளபதையம்மன் போன்ற தெய்வங்களுக்கான ஆலயங்கள் சக்தி வழிபாட்டிற்கு சான்று பகிர்கின்றன. அவ்வகையில் இந்து மதத்தின் தர்ம போதனை நூலான பகவத்கீதை தோற்றம் பெற்ற மகா பாரதக்கதையை சித்தரிக்கும் முகமாக ஆலயங்களும், வழிபாடுகளும், திருவிழாக்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
மகாபாரதக் கதாநாயகியான தர்ம தேவதை திரெளபதியம்மன் வழிபாடு மட்டக்களப்பு, புத்தளம், பகுதிகளில் சிறப்பாக விளங்குகின்றது. மட்டக்களப்பு, பாண்டிருப்பு திரெளபதையம்மன் ஆலயம் இவற்றுக்கு சான்றாகின்றது. அத்துடன் மத்தியமலை நாட்டில் ஓரிரு இடங்களிலும் வழிபாடுகள் நிகழ்கின்றன. பக்தி சிரத்தையோடு பாரதக்கதையை ஒட்டிய உற்சவங்களும் பூஜைகளும், விசேட தீமிதிப்பு உற்சவமும் இங்கு இடம்பெறுகின்றன.
இலங்கையில் அமைந்திருக்கும் திரெளபதை தேவியின் ஆலயங்களில் தேவியின் புகழ் கூறும் ஆலயமாகவும் இற்றைக்கு 400 ஆண்டுகள் தொன்மைமிக்க ஆலயமாகவும் உடப்பு ஸ்ரீதிரெளபதை அம்மன் ஆலயம் விளங்குகின்றது.
புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகரிலிருந்து 16 மைல்கள் வடமேற்கில் உடப்புக் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள திரெளபதை அம்மன் ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீபார்த்த சாரதி சமேத ஸ்ரீ திரெளபதாதேவி ஆலயம் என மிக நீண்ட பெயரைக் கொண்டுள்ளது. இவ்வால யத்தில் 1917ம் ஆண்டு காலத்தில் அம்மனை மடாலயத்தில் வைத்துத்தான் பூஜித்து வந்தார்கள். 1917ம் ஆண்டுக்குப் பின்னர் அம்மனை பிரதிஷ்டை செய்து மகா மண்டபத்துடன் பூரணமிக்க ஆலயமாகக் கட்டி முடித்தார்கள். 1929ம் ஆண்டளவிலேயே ஸ்ரீ ருக்குமணி சத்தியபாமா சமேத பார்த்தசாரதிப் பெருமாளின் சிலை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கிருந்த அம்மனின் சிலை கோயிலின் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டது.
அதன் பின்னர் 1974, 1994 களில் சுவாமி விஸ்வநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்ற மையும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வானுயர்ந்த 108 அடி நவதள நவகலச நலகுண்டபக்ஷ நூதன இராஜகோபுர மகா கும்பாபிஷேக நிகழ்வு வெகு கோலாகலமாக 2011-01-24ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
புத்தளம் மாவட்டத்திலே எழுபத்தைந்து வீதமான தமிழ் சைவ மக்கள் வாழும் கிராமம் உடப்பூராகும். நீர்வளமும் நிலவளமும் மிக்க உடப்பூருக்கென்று தனித்துவமான வரலாற்றுச் சிறப்புண்டு. அக்காலத்து அந்நியப்படையெடுப்புக்கள், போர்கள், மதமாற்றங்கள் எதற்குமே அசையாது தமக்கே உரித்தான அஞ்சா நெஞ்சுடன் வாழ்த்து வரும் குடிகளின் கோட்டையாக உடப்பூர் கடந்த பல நூற்றாண்டுகளாக விளங்குகின்றது.
தெய்வ பக்தியும் குலபக்தியும் மிக்க இவர்கள்இராமநாதபுரத்தில் இருந்து வந்து குடியேறிய மறவர் பெருங்குடிகளின் வழித்தோன்றல்களாவர். தங்களது குல தெய்வங்களான காளியம்மன், மாரியம்மன், திரெளபதை அம்மன் போன்றோருக்கு ஆலயங்கள் அமைத்து வருடாந்த உற்சவங்களை பக்தி சிரத்தையுடன் கொண்டாடியும் வருகின்றார்கள். உடப்பூரில் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீ காளியம்மன் ஆலயத்துக்கு வடக்கே அரை மைல் தொலைவில் ஸ்ரீ மாரி யன்மன் ஆலயமும், தெற்கே கால் மைல் தொலைவில் ஸ்ரீ திரெளபதையம்மன் ஆலயமும் அமைந்துள்ளன.
ஆடி மாதத்தில் அன்னை ஸ்ரீ திரெளபதா தேவிக்கு ஆடித் திருவிழா பெருமை சேர்க்கும் விதமாக வெகு விமரிசையாகவும் சிறப்பாகவும் நடை பெற்று வருகின்றது. பல நூற்றாண்டு காலமாக எவ்வித விக்கினமுமின்றி இந்த விழா இடம்பெற்று வருவது இவ்வூர் மக்களின் பக்தியைப் புலப்படுத்துகின்றது. கால மாற்றத்திற்கேற்ப ஆலயக் கிரி யைகள், மரபுகள் அருகிவரும் இக் காலகட்டத்தில் தம் மூதாதையர்கள் காட்டிய வழியில் அதே பழைமைச் சிறப்புடன் உடப்பு ஸ்ரீ திரெளபதாதேவி ஆலய உற்சவத்தையும், தீமிதிப்பு விழாவையும் இன்றைய சந்ததியினர் நடாத்தி வருவது குறித்து பெருமிதம் அடைய வேண்டியுள்ளது.
இதிகாசங்களில் ஒன்றான மகா பாரதக்கதையின் ஓட்டமே இவ்வால யத்தில் நடைபெற்றுவரும் உற்சவங்களுக்கு உயிரூட்டுவனவாக அமைகின்றது. இக்கதை யைக் கொண்ட இவ்வுற் சவங்கள் மரபு ரீதியாகவும் சம்பிரதாய பூர்வமாகவும் காட்சிகள் செய்கைகள், நடிப்புகள் மூலமாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
திருவிழாக் காலங்களில் மகா பாரதக்கதையைப் பாட்டாகவும், இசையாகவும் தெம்மாங்கு மெட்டுக ளுடனும் கிராமிய சந்தங் களுடனும் பக்கம் கூறுப வருடன் கதையாகப் படிப் பார்கள். இது அன்று தொட்டு இன்று வரை வழக்கமாக இருந்து வருகின் றது. உடப்பு திரெளபதை அம்மனின் கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் பதினெட்டுத் தினங்கள் நடைபெற்று, விசேட வைபவங்களாக திருக்கரகம் பாலித்தல், கொடியேற்றல், சுயம்வரக் கொண்டாட்டம், வனம்புகும் காட்சி, அருச் சணன் தவ நிலைக்காட்சி, அக்கினிக்குண்டக்காவல், தேத்தரசன் கோட்டை பிடித்தல் கர்ணன் படுகளம், தீமூட்டும் வைபவம், துரி யோதனன் படுகளம், தீக்குளிப்பு, அன் னையின் ஆனந்தநடனம், சுவாமி ஊர் வலம் உட்கொடி இறக்கம் பால்குடபவனி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
திருக் கரகம் பாலித்தல்
இவ்வாலய உற்சவங்களில் பிரதான ஓர் இடத்தை கரகம் வகிக்கின்றது. கரகம் எடுப்பவரே அன்னை ஸ்ரீ திரெளபதை தேவியாக அருள் பாலிப்பார். முதல் நாள் மாலை ஆலயத்தில் விரார்த்தசாந்தி கிராமசாந்தி முடிந்து திருவிழா நாயகியாக கரகம் பாலிக்கின்ற பூ சகருக்கு ஸ்ரீதிரெளபதை தேவியின் தத்துவத்துக்குரிய காப்புக்கட்டும் கரியையைத் தொட்ந்து கரகம் பாலிப்பது சிறப்பு நிகழ்சியாக இடம்பெறும். ஸ்ரீதிரெளபதையம்மன் ஆலயத்திலிருந்து மாரியம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கரகத்திற்குப் பூசை நைவேத்தியங்கள் செய்யப்பட்டு பக்திபூர்வமாக அரோஹரா என பக்திப் பரவசமான ஒலியை எழுப்புவர்.
கரகம் மத்தள வாத்தியங்கள், மெய் யடியார்கள் சகிதம் இக்கிராமத்துக்குரிய பாரம்பரிய கும்மிமெட்டு மரபுப் பாடல்களை மத்தள பாட்டுக்காரர்கள் பாடிய வண்ணம் உலாவரும், அதே வேளை கரகம் வரும் வீதியில் ஒவ் வொரு இல்லத்திலும் தலைவாசல்களில் நிறைகுடம் வைத்து கரகம் தத்தம் இல்லங்களை அண்மித்ததும் கும்பநீரை கரகபாத மலர்களில் வார்ப்பார்கள். அத்துடன் கரகம் கும்மியடிக்கும்காட்சி மெய்யடியார்களுக்கு அருள் பாலிக்கும் காட்சியாக அமைகின்றது.
இவ்வாறு ஸ்ரீ திரெளபதை தேவியின் ஆலயத்தை அடைந்த திருக்கரகம் ஆனந்த நடனம் புரிந்து அர்த்த மண்ட பத்தை அடைந்ததும் திருக்கதவு மூடப் படும். பூசகர் கரகத்தை அம்பாளின் சந்நிதா னத்தில் வைத்து அம்பாளின் பக்கத்திலுள்ள அவளின் அருளாக விளங்குவதுமாகிய 3 அடி நீளமான வெள்ளி வாளை தலைகீழ் பாவனையில் திருக்கரகத்தின் செம்பு விளிம்பின் மேல் செங்குத்தாக நிறுத்தி வைத்திருக்கும் அற்புதக்காட்சியை திருக்கதவு திறந்ததும் மெய்யன்புமிக்க பக்திசாரத்துடன் ஜெகஜோதியாக பிரகாசிக்கும் பஞ்சாரத்தின் ஒளியில் காணலாம்.
இக்கரக உற்சவம் முதல் நாளை அடுத்து வெளிக்கொடியேற்றிய 5ம் நாளிலிருந்து ஒருநாள் விட்டு தீமிதிப்பு வரையும் நடைபெறும். கரகத்தின் பின் கொழுந்தன் கொடியும் கொண்டு வரப்படும். கொழு ந்தன்கொடி என்பது ஐந்து தலையுடைய சூலாயுதம் போல் இருக்கும். ஐந்து எலுமிச்சம்பழங்கள் அதில் குத்தப் பட்டிருக்கும். இவை பஞ்சபாண்ட வர்களைக் குறிப்பதாக பாவனை செய்யப்படுகின்றது.
கொடியேற்றம்
உற்சவங்கள் ஆகம முறைப்படி அமையாவிட்டாலும் கொடியேற்றத்துடன் கூடிய உற்சவமாகவே தீமிதப்பு உற்சவம் காணப்படுகின்றது. அத்திருவிழாவில் இரண்டு கொடிகள் ஏற்றப்படும். முதலாவது ஏற்றப்படும் கொடி துரியோதனனுக்கு உரியதான சர்ப்பக் (நாகம்) கொடியாகும். இரண்டாவது கொடி பாண்டவர்களுக்காக ஏற்றி வைக்கப்படும். இது அனுமான் கொடியாகும். பஞ்ச சூலங்கள் போல் அமைந்த பஞ்ச தலையைக் கொண்ட சூலத்தில் ஐந்து எலுமிச்சம் பழங்கள் ஏற்றி அதற்கு பட்டுத்துணி கட்டி ஏற் றப்படுகின்றது. இக் கொடிக்கம்பத்தில் அனுமானுடைய உருவம் வரையப்பட்ட கொடிச்சீலை பறக்கவிடப்பட்டிருப்பதுடன் கரகம் பாலிக்கின்ற நாட்களில் அனுமன் கொடிச்சீலை ஏற்றப்படுகின்றது. இக் கொடியேற்றிய நாளில் இருந்தே மகாபாரதக் கதை படிக்கப்படும். இதனை வெளிக்கொடி என அழைப்பர்.
சுயம்வரக் கொண்டாட்டம்-
மகாபாரதக் கதையில் ஸ்ரீ திரெளபதா தேவியின் சுயம்பரத்தை நினைவு கூடும் வகையில் வெகு விமரிசையாக அது 12ம் நாள் உற்சவமாகக் கொண் டாடப்படுகின்றது. 11ம் நாள் கரக உற்சவத்தைத் தொடர்ந்து இரவு விக்னேஸ்வர மூர்த்தி ஊர்வலம் வருவார் 13ம் நாள் விக்னேஸ்வர மூர்த்தியுடன், ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் ஸ்ரீ ருக்மணி சத்தியபாலா சமேதரராக எழுந்தருளி மெய்யடியார்க்கு காட்சி நல்க வீதியுலா வருவதுடன் பாரதக் கதையை தொடர்ந்து சுயம்வரக் கொண்டாட்டத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
வனவாசக் காட்சி
துரியோதனதும் அவன் மாமன் சகுனியினதும் வஞ்கச் சூழ்ச்சியினால் பாண்டவர்கள் நாடு நகர் இழந்து வனவாசம் மேற்கொள்ளும் காட்சியை சித்தரிக்கும் வகையில் அது இடம்பெறு கின்றது. 15ம் நாள் உற்சவமாக இது இடம்பெறும் இவ் வனம் புகம் காட்சி உடப்பு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பமாகும். பஞ்சபாண்டவர்கள் ஐவரும் தெளமிய முனிவரும் அன்னை ஸ்ரீ திரெளபதா தேவி கிருஷ்ணர் சகிதம் வனம் புகும் காட்சி இடம்பெறும்.
அருச்சனன் தவநிலை
அருச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறு வதற்கும் கெளரவர்களை அழிப்பதற்கும் சிவனை நினைத்து தவம் செய்து வேண்டி நிற்கும் நிலையையே இந்த தவநிலைக் காட்சியாகக் கொண்டாடப் படுகின்றது. இது 16ம் நாள் திரு விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
தேத்தரசன் கோட்டை பிடித்தல்
சயந்தவன் (தேத்தரசன்) என்ற அரசன் ஈசனை வேண்டி சகல வல்லமையுடனும் நிரம்பிய ஆயுதங்கள் வரங்களைப் பெற்று தனது கோட்டையை காவல் தெய்வங்கள் மூலம் பலப்படுத்தி இருந்தார்.
இக்கோட்டையை நகுலன், சகாதேவர்கள் விஷ்ணுவின் உதவியுடன் பிடித்து தேத்தரசனை தேர்க்காலில் கட்டி இழுத்து தர்மருடைய பாதத்தில் மண்டியிடச் செய்யும் கதையைச் சித் தரிக்கும் வகையில் 17ம் நாள் உற்சவமாக இது நடைபெறுகிறது. நான்கு பேர் குதிரையில் ஆடிவரும் காட்சி இதுவாகும். தீக்கிடங்கின் வடக்கே பத்திரகாளியாகவும் கிழக்கே ஐயனாராகவும் தெற்கே வைரவராகவும், மேற்கே வீரபத்திரராகவும் உருவேற்றி பலி கொடுக்கின்ற பாவனையாக இடம்பெறும் காட்சி காண்போர் உள்ளங்களை மெய்மறக்கச் செய்யும் உற்சவமாக அமைந்து விடும்.
தீமிதிப்பு
மகாபாரதத்தின் திரெளபதா தேவியின் சபதம் முற்றுப் பெறுவதை முன்னிட்டு இவ்வுற்சவம் கொண்டாடப் படுகின்றது. 18ம் நாள் உற்சவமாக நிகழ்வுறும் இது அதிமுக்கிய வைபவமா கும். இனமத பேதமின்றி இவ்வுற்சவத்தைக் கண்டு களிக்க நாட்டின் பல பகுதி களிலிருந்தும் மெய்யடியா ர்கள் கூடுவர். அவ்வாலயத் தில் கொடியேறிய முதல் நாளிலிருந்து அம்மன் திரெளபதா தேவிக்கு முன்ன தாக ஒளிர்ந்து கொண்டி ருக்கும் தூண்டாமணி விளக்கிலிருந்து அத் தீமிதிப் புக்கான தீ எடுக்கப்படுகிறது.
அத் தீயைக் கொண்டு ஹோம அக்கினியை கோயில் குருக்கள் வளர்ப்பார். கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்து திரெளபதையம் மனாக உருக்கொண்ட பூசகர் ஹோமம் வளர்க்கப்பட்ட அக்கினிக் குண்டலத்தை அண்மித்ததும் இவ்வூரைச் சேர்ந்த வயதில் முதிர்ந்த பெரியோர் வந்து ‘தாயே இவ்வூரை வழமை போல் காப்பாற்றுவேன் என அருள் தாருமம்மா என வேண்ட அவ்வூரைக் காப்பாற்றுவேன் என அருள் வாக்கு கொடுத்துவிட்டு அங்கே ஜெகஜோதிமயமாக வளர்க்கப்பட்ட அக்கினியை இரு கரத்தாலும் அள்ளி எடுத்து அக்கினிச் சட்டியில் வைக்கும் காட்சி பத்தர்களின் பக்தியை பறை சாற்றுகின்றது.
சுடர்விட்டு எரியும் அக்கினிச் சட்டியை பூசகர் இரு கரத்தாலும் சுமந்து கொண்டு பக்தர்கள் புடைசூழ ” கோவிந்தா கோவிந்தா” என்ற நாமம் பக்தியினை பறைசாற்ற ஆலயம் வலம் வந்து தாமரைப் புஷ்பங்களால் அலங்கரி க்கப்பட்டு தீக்கிடங்கிற்குள் வைப்பார். பூஜை நைவேத்தியங்களுடன் பெருமளவு புளியங்கட்டைகள் அடுக்கப்பட்டு தீமிதிப்புக்கு வேண்டிய அனல் வளர்க்கப்படும்.
அன்றே பகல் முழுவதும் ஆலயப் பந்தலில் மகா பாரதத்தின் 18ம் நாள் போர்ச்சுருக்கம் படிக்கப்பட்டு பொருளுரைக்கப்படும். அத்துடன் துரியோதனனின் மார்பை பிளந்து திரெளபதை அம்மன் சபதம் நிறைவேற்றும் வைபவம் இடம்பெறும். அன்று மாலை அக்கினிக் கரக ஆரம்பித் துடன், மேளதாளத்தோடு பக்தர்கள் புடைசூழ சுவாமி முத்தையா பரந்தாமன். ஆண்டிமுனையில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடைவார். திரெளபதை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்புக்கான அனல் தயார் செய்யப்பட்டு சமிக்ஞை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அறிவிக்கப்படும்.
அத்துடன் சுவாமி அக்கினி கரகத்துடன் திரெளப தையம்மன் ஆலயத்தை வந்தடைவார். அதனைத் தொடர்ந்து பக்த கோடிகள் பின் தொடர்ந்து வருவர். ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தை அக்கினிக் கரகம் ஏந்திய சுவாமி அண்மித்து, தீக்கிடங்கில் தனது முதற்பாதத்தை வைத்து இறங்கியதும் பக்கதர்கள் ஒருவர் பின் ஒருவராக தீமிதிப்பார்கள். இந்த நிகழ்வு சுமார் 50 நிமிடங்கள் வரை நடைபெறும். அதில் சுமார் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். இவை மகாபாரதப் போரை நினைவு கூருவதுடன் குலதெய்வத்தின் மீதான தீராத பக்தியை வெளிக்காட்டுகின்றது.

The Story of Udappuwa: The Maravar Suitor

http://udappu.org/1.htm
நன்றி:
திரு.முனிராஜ் வாணாதிராயர் அவர்கள் 
தினகரன்  பத்திரிகை 
தமிழ் வின் வலைத்தளம் 

8. ஈழநாடு, யாழ்ப்பாணம் - 05.03.1986 அன்று வெளியான இதழ்
முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்

ஈழத்தமிழ் வேந்தன் வெடியரசன்

மட்டகளப்பு முற்குகர் வரலாறு பற்றிய இன்நூல் தமிழர்களின் பண்டைய கால குடியேற்றத்தை பற்றிய விபரங்களை எழுதபட்ட ஒன்றாகும்.




ஏழுகடல் ராசாக்கள் என்னும் கதை இந்தியா முழுதும் வழங்குகிறது. கடல் அரசர்களாக கடலில் மாட்சி செய்து கடல் கரைகளில் தங்கள் தலைநகரங்களை அமைத்து பல நாடுகளில் பல அரசுகளை ஸ்தாபித்தவர்கள் இவர்களே என்று நான் கூறினால் அது மிகையாகவும் நம்பமுடியாத விஷயமகவும் இருக்கும். தலைக்கணமாக கூட தோனலாம் பரவாயில்லை. ஆனால் உண்மை அதுவே. வஞ்சி,கொற்கை,புகார்,கலிங்கம்,வங்கம்,அங்கம்,சீனம்,சாவகம்,சுவர்ணம்(மலயா) முதல் மேற்கே எகிப்து,கீரீட் முதல் மீசோ அமெரிக்க வரை சென்று பெண் தெய்வ வழியை உலகுக்கே ஒரு காலத்தில் பரப்பியவர்கள் இவர்களேயாவர்.

மட்டக்களப்பில் முற்குகர்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே குடியேறி இங்கு வாழ்ந்தார்கள் என்று சில கல்வெட்டு பாடல்களின் மூலம் அறியக்கூடியதாய் இருக்கிரது. மட்டகளப்பு முற்குகர்கள் பற்றி சில மேல் நாட்டு,உள்நாட்டு சரித்திர ஆசிரியர்கள் அவர்கள் இந்தியாவின் மலபார் பிரதேசத்திலிருந்துதான் வந்தார்கள் என கூறுவதை அப்படியே ஏற்று கொள்ள முடியாததாக உள்ளது. முற்குகர்கள் குகன் குலத்தினைச் சார்ந்தவர்களென்றும் அயோத்தி,கலிங்கம் ஆகிய இடங்களிலிருந்து இவர்கள் வந்தவர்களென்றும் கல்வெட்டு,பாடல்களிலே தெரிவிக்க படுகின்றது. மட்டகளப்பு ஆட்சி செலுத்திய கலிங்க மன்னர்களுக்கும்,இவர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினையிட்டு மட்டகளப்பு பூர்வீக சரித்திரத்தினை ஆழமாக படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.(இது எனது கருத்தேயாகும்)

முற்குகர்கள்,புதுப்புது இடங்களிற்சென்ரு குடியேறி வாழும்,ஒரு வீர மறவர் குழுவை சேர்ந்தவர்களென்று கூறுவதும் பொருத்துமுடியதாகும். இவர்கள் மறவர் குலத்தையே சார்ந்தவர்கள் என்பதே உண்மையும் கூட.மட்டகளப்பு நாட்டிலே மிக நீண்ட காலத்திற்கு முன் குடியேறி இந்நாட்டின் இங்குள்ள நிலபுலன்களுக்கெள்ளாம். சொந்தகாரர்களாக் இருந்தவர்களும் இவர்களேயாகும்.மட்டகளப்பு நாட்டின் திருப்படைக் கோவில்களின் பாதுகாவலர்களாக,வண்ணக்கர்களாக இருந்து இங்கு வீரசைவமும்,தமிழும் சிறதோங்க வழிவகுத்தவர்களும் இவர்களே யாவர்.

ஆயினும் கல்வெட்டு என்று அழைக்கபடும் மட்டகளப்பு பூர்வீக சரித்திரமான ஏட்டு பிரதிகளில் கூறப்பட்டுள்ள கலிங்க மன்னர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பினை பற்றி இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை. இதற்குரிய காரணம் தமிழறிஞர்களின் அசிரத்தையான மனப்போக்கே காரணமாகும். கிராமபுரங்களில் முடங்கிக் கிடக்கும் இந்த ஏட்டுப் பிரதிகளைப் பெறுவதிலுள்ள சிரம்முமே என்று கூறுதல் பொருத்தமானதாகும். பிற்காலத்தில் ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்ட அவர்களின் அடிவருடிகள் வரலாற்றில் முற்குகர்களை பற்றி தவராக எழுதினர் என்பதும் இங்கு நோக்கதக்கது. 
மகாவம்சம் கூறும் பண்டைய் சிங்கள சரித்திர ஆசிரியர்கள் கூறுவது போல் கிழக்கு மாகாணத்தின் தெற்கு பகுதியாகிய மட்டகளப்பில் தமிழர்கள் பிற்காலத்தில் வந்து குடியேறியவர்கள் என்ற கூற்று ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதில்லை. மட்டகளப்பின் பல பகுதிகளிலும் ஆட்சி செலுத்திய முற்குகச் சிற்றரசர்களான வன்னியர்களை "அரசர்கள்"(KINGS OF BATTICALOA) என்றே சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்ரனர். இவர்கள் மற்றவர்களின் தலையீடின்றி சுயமாக ஆட்சி செலுத்தியதாலேயே,மன்னர்கள் என்று அழைக்கபட்டனர். இலங்கையில் மட்டகளப்பு நாட்டிலும் புத்தள பிரதேசத்திலும் மட்டுமே முற்குக வன்னியர்கள் நீண்ட காலமாக ஆட்சி செலுத்தினர். 

முற்குக வன்னியர்களின் மறைவிற்குப் பிறகு இங்கு செல்வாக்கு செலுத்திய இருபெரும் போடிகளான அறுமக்குட்டிப் போடி,கந்த போடி ஆகியோர் பற்றி மட்டகளப்பு மான்மியத்தின் மூலம் பலர் அறிந்திருப்பார்கள் மட்டகளப்பு நாடு முற்குக தேசம் என அழைக்கபட்டது. டச்சுக்காரரின் "லாண்டி றாட்" என்னும் சபை அழைக்கபடும் வரை இது செயலில் இருந்தது.

அன்னியரான போர்த்துகீசியர்,ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் போன்றோர் மட்டகளப்பின் முற்குகர் குலத்தவர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்த போதெல்லாம்,அவர்கள் தங்கள் சுகந்திரத்தினை காப்பற்ற அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வீரமறவர்களாக வாழ்ந்தனர்,யாழ்பாண,கோட்டை அரசர்கலைப் போல் வன்னிய அரசர்களும் அன்னியருக்குகெதிராகப் போராட்டம் நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர்களாகவே இருந்தனர். (நமது இரத்தமாண எங்கள் மறவர்களான முற்குகர்களும் ஒன்றுதான் எவனுக்கு அடிபணிந்ததில்லை) 

கடைசியில் ஆங்கிலேயருடனான சண்டையிலேயே 1803-இல் தமது சுதந்திரத்தினை முற்குகர் இழந்தனர்.இலங்கை மாகான முற்குகர் சட்டம் பற்றியும் கூறப்பட்ட விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடமாகணப் பிரதேசமான யாழ்ப்பாணம்,வன்னி ஆகிய பிரதேசங்களில் தேசவழுவாமை சட்டம் அமுலில் இருந்தது,போன்று,மட்டகளப்பு நாட்டிலும் முற்குக சட்டமே நீண்ட காலமாக அமுலில் இருந்தது. 1867ல் பின்னால் இலங்கை சட்டவாக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. வெளியிலி இருந்து வந்த ஆங்கிலேயரின் அடிவருடிகலே,இதனை சட்டவாக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படாமல் செய்தவர்களாவர். ஆனாலும் முற்குக சட்டத்தின் சிறப்புகளைப் பற்றி தெளிவாக குறிப்பிடபட்டுள்ளனர். மட்டகளப்பு நாட்டிலே செல்வாக்குடன் திகழ்ந்து வந்த முற்குக குலத்தினருக்கு,சைவசமத்தோடு உள்ள தொடர்புகள் மற்றும் கலை,க்லாசாரத்தோடு அவர்களுக்கிருந்த பங்களிப்பினையும் பற்றி தமிழ் மதமான சைவசமத்தினைப் பற்றி நின்ரு வாழ்ந்தவர்கள் முற்குககுலத்தினர் நில உடைமையாளர்களான அரசர்களானவர்களாக இருந்தனர்.

மட்டகளப்புக்கேயுரிய திருமண சம்பிரதாயங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் தனித்துவமானவை. இவை இன்று மறைந்து விடுமோ என்று அஞ்சவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வெகு நீண்ட கால்த்திற்கு முன்பிருந்தே,தமிழ்மன் முற்குக வன்னியரால் ஆளபட்டு தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த தமிழர் தாயகமாக இருந்த இடமே மட்டகளப்பு நாடாகும். மேலும் இந்நூலில் பல ஊழியக் குடியினரை கூறும்போது மட்டுமே சாதிப்பிரிவில் உள்ளவரே கூறியுள்ளேன்.

இராமணனின் "நான்கு சகோதரருடன் ஐவரான" குகன் குலம் என்ற பெயரில் கார்த்திகை மைந்தனான முருகப்பெருமானின் திருப்பெயரில் உள்ள குலமான குகன். முற்குகர் என்று திரிபுபட்டு முக்குவர் என வழங்கியது.

"சீர்வருதுளுவச் சீதரன் மார்பினில் மருவளர் புவில் மனுவாய் உதித்து குகனென குலமும் குவலயத்தமைத்து மிக மகிழ்வோடு வேண்டிய வரமும் சங்கு,சக்கரமும்,தண்டாயுதமும் சூலமும் கெருடத் துவசமும் பெற்று ஞாலத்துயர்ந்த நறும் புனை மாலையும் சங்கினால்.....

காரர் குழலி கணவனை வனங்கி பட்டப் பரிசு பஞ்சாயுதமும் திட்டமாய் எடுத்து சிரசில் முடித்து பதினென் வரிசை பவிகடன் நடக்க அதிர் முரசறைய அரிவையர் ஆட ஆனை சேனை அணி அணி சூழத்தானை சூழ் தலைவர் தான் திறையளிக்க கொங்கு,வங்காளம்,கோசலம்,தத்தை மங்குறாச் சீனம்,மயிலை,புன்னலை,அயோத்தியா தேசம் ஐம்பத்தாறும் துய்யதோர் குடைக்கீழ் துரைத்தனம் இயற்றி இருக்கும் நாளில் இடருதல் போலை கண்ணகை அம்மன் காற்சிலம்பிற்காய் வண்ணமாய் நாகமனி எடுக்க வந்த மீகமான் வழிதனை மரித்து

............ நீடிய இராசதர் நிறைந்திடும் இலங்கையில் மட்டுமானகரில் வந்தே இறங்கி பாட்டாணிகளைப் பரிவுடன் சேர்த்து கந்த பாணத்துறைக் கந்தமூர்த்திக்கும் கொக்காட்டிசோலை குருபரனார்க்கும் பண்டகானிக்கை பரிவுடன் கட்டி........வண்டிரல் குகன் குல முறை இதுவே மேற்குறிய பாடலில் முற்குகர்கள் குகன் குலத்தில் இருந்தே வந்தவர்கள் என குறிப்பிடபடுகிறது. 2-ஆம் நூற்றாண்டிற்கு முன்னே இவர்கள் குடியேறியதாக ஹெச்.வ.தம்பையா அவர்களும் கூறுகிறார்.

மட்டகளப்பு பூர்வ சர்த்திரம் கல்வெட்டுபாடல்களும்: 

மட்டகளப்பு பூர்வீக சரித்திரத்தை முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று என தள்ளபடவில்லை ஏனெனில் இதில் குறிப்பிடும் மன்னர்கள் மகாவம்சத்திலும் சூளவம்சத்திலும் குறிப்பிடபடுகின்றனர். முற்குகர்கள் முதன் முதலில் கடலில் வந்து குடியேறிய இடம் "மன்முனை" ஆகும். இவர்கள் அயோத்தியிலிருந்து வந்தார்கள் என்பது இந்தியாவில் உள்ள அயோத்தியாவா என்பது ஆய்வுக்குரியது.

முற்குகர் வருகை பற்றிய கல்வெட்டு பாடலை இங்கு நோக்கலாம். 

"கலியாப்தம் 2808 வலிடமையுடன் வந்திறங்கி புலி புகுந்த பசுநிரல் போல் திமிழர் யாவும் கொன்று புகழே ஒரு ஏழு முற்குகர் நாடிவந்து நகர்தனை கண்டதும்.. பாலகனின் ஆறெழுத்தை பரிவாய் என்னி, எந்நாடும் தாய்நாடாய் ஏற்கும் நாடு இந்தியா எனும் நகருக்கேகி, அந்த பொன்னாச்சி வளவனுடன் வைகை மாறன் புகழ் சேரபூபதி வாழ் புகன்றான் யாவும்............ மாழவர் கலிங்கர்.............தமிழாரச சுபனிலங்கள் தலைத்தோங்க தாங்கள் சிவமுறைகள் மூவேந்தர் செப்பு நூல் பட்டயத்தில் பன மணுகா பெருமை பகரப்போமோ?

மேற்குரிய பாடலின் படி (கி.மு.261)-இல் முற்குகர் மட்டகளப்பு ஆட்டில் குடிபுகுந்தனர் எனவும். மட்டகளப்பு நாட்டிற்கு முதன் முதல் குடியேறிய தமிழர்கள் முற்குகர்களாக இருப்பதால் அவர்கலே திருக்கோவில் பதிக்கு ஊழியம் செய்யும் ஆட்களை கொண்டு வந்து குடியேற்றினர்.ஆலய ஊழியர்களை குடியேற்றி சைவம் தழைத்தோங்க செய்தனர்.

திருப்படைக்கோயில்களின் பரிபாலர்களாக முற்குகர்குல வன்னிமகளும் பின்பு போடிகலுமே இருந்தார்கள் என்பதே மிக தெளிவான ஒன்றாகும்.

இக்கோவில்கள் போர்த்துகேயர்களால் இடிக்கப்பட்டன என்றும் பின்பு இதே சைவகோவில்கள் டச்சுக்காரகள் காலத்தில் முற்குகர்களால் கட்டப்பட்டன என தெரிகின்றது.

நாம் மேலே கூறியுள்ள கல்வெட்டு பாடலின்படி முற்குகர்கள் கி.மு.261 முதல் இங்கு குடியேறினர் என்பதாகும். 

இதற்க்குமுன் மட்டகளப்பு பகுதியில் வேட்டுவரும்,திமிழரும் குடியிருந்தனர். அவர்களை விரட்டி கொன்ற இடமே "சத்ருகொன்றான்" என வழங்குகிறது.

முற்குகர்கள் மட்டகளப்பில் மட்டும் குடியேறவில்லை யாழ்பானம்,புத்தளம்,கற்பிட்டி,புத்தளம்,கதரமலை போன்ற துரைமுகங்களிலும்

உலகநாச்சி வருகையும்,மண்முனைக் குடியேற்றமும்: 

முற்குகர்களின் ஏழு குடிகளும் கலிங்க மன்னன் குகசேணனின் புத்திரி உலகநாச்சியின் வம்சாவளியினர் என கூறப்படுகின்றது. 
கி.பி.399ல் குணசிங்கண் என்னும் மன்னன் மட்டகளப்பை ஆளும் போதுகலிங்க ஓரிசா தேசத்தை அரசுபுரியும் குகசேனனுடைய புத்திரி உலகநாச்சி என்பவள் கௌதமபுத்தருடைய தசனத்தை எடுத்து நெடுங்கூந்தலுள் மறைவாய் வைத்துக் கைலயங்கிரியில் குகவம்சத்தார் முன் காலத்தில் எடுத்துக் கொண்டுவைத்த சிவலிங்கத்தையும் எடுத்துக்கொண்டு தனது சகோதரன் உலகநாதனுடன் தனது தந்தை குகசேனனிடம் விடைபெற்று வர்த்தகருடைய படகிலேறி மணிபுரத்திலிறங்கி விசயதுவீபத்தில் வந்து மேகவண்ணனைக்கண்டு குலங்கோத்திரமெல்லாம் விளங்கப்படுத்திப் புத்தருடைய தசனத்தைக் கொடுத்தாள். மேகவர்ணனும், புத்தமதத்துக்கு இனி அபாயமில்லையென்று அதிக சந்தோஷங் கொண்டு உலகநாச்சியை நோக்கி உமக்கு வேண்டியதைக் கேளுமென்ன உலகநாச்சியும் அரசனே! இந்த இலங்கையில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத கிராமமொன்றீயும்படி வேண்டினள். அதைக்கேட்ட மேகவர்ணன் மட்டக்களப்பை அரசுபுரியும் குணசிங்கன் தனது சிநேகிதனாதலால் ஒரு திருமுகம் வரைந்து அதில் உமது மட்டக்களப்பு, உன்னரசுகிரி இவைகளில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத பதி ஒன்று இந்த உலகநாச்சிக்குக் கைலஞ்சமாய் ஈய்ந்து கொடுக்கும்படி வேண்டி உலக நாச்சிக்குக் கொடுக்கும் உபகாரங்களையும், இரத்தினமாலையையும் கொடுத்து மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்தான். அவர்கள் கொங்கு காசி அப்பன்புட்டி வழியாய் வந்து திருமுகத்தைக் குணசிங்கன் கையில் கொடுத்தனர். குணசிங்கனும் திருமுகத்தை வாசித்து சந்ததியுரிமை கொண்டாடி மட்டக்களப்புக்கு வடபாகமாயுள்ள அம்பிலாந்துறைக்கப்பால் மன்னேறிமுனை வளர்ந்து காடுசெறிந்து குடிவாழ்வற்ற பகுதியை நிந்தமாயீந்து ஒரு இடத்தில் குடிகளை அனுப்பி வெட்டித்தூர்த்து மாளிகை உண்டாக்கி உலகநாச்சிக்கீய உலகநாச்சியும் குடிவாழ்ந்து சில காலம் சென்றபின், தனது தம்பி சிவநாதனைத் தந்தையிலிடத்திலனுப்பிக் குகன் குடும்பம் நூற்றாறும், சிறைக் குடும்பம் முப்பதும் எடுப்பித்துக் குகக்குடு;ம்பங்களைத் தன் அருகாயிருத்தி அந்த இடத்தில் ஆலயமியற்றிச் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிவந்தனர். பின்பு இன்னும் ஒரிசாநகரமிருந்து அநேக குகக்குடும்பங்களை அழைத்து காப்புமுனைக் காட்டை அழித்துச் செப்பனிட்டுக் குடியேற்றி அப்பகுதிக்கு அரசியாகி மண்முனையென நாமஞ்சூட்டி வாழுங்காலம் களப்புமுனைக்குத் தென்பாகமாயுள்ள காட்டை அழிப்பிக்கும் போது திடகனென்பவன் கொக்குநெட்டி மரத்தை வெட்ட உதிரம் பாய்ந்தது.

தொன்றுதொட்டே முற்குகர்கள் குடியேறி மட்டக்களப்பு நாட்டின் வன்னிய சிற்றரசர்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தமையாலும் அவர்களே இங்கு மட்டகளப்பை "முற்குகர் தேசம்" என்று அழைக்கப்பட்டது.

இலங்கையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கிழக்கு பிரதேசம் "முற்குகர் தேசம்" என அழைக்கப்பட்டது. வேறு எந்த தமிழ் சாதியினரின் பெயரிலும் அச்சாதியினரின் நாடு என்று எப்பிரதேசமும் வடக்கு-கிழக்குப் பகுதியில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சைமன் காசிச்செட்டி மேலும் கூறுகையில் முற்குகர்கள் ஆரம்பத்தில் அயோத்தியில் அல்லது இந்துஸ்தானத்தில் அவுடே என கூறுகின்றனர்.

கி.பி.1215-55 இல் கலிங்கமாகன் என்னும் மன்னன் கேரள வீரர்கள் 30000 பேருடன் வந்தான் என சரித்திரம் கூறுகிறது அவனாலும் அங்கு வீர மறவர்களான முற்குகர்கள் பலர் குடியேற்றப்பட்டனர். Neville Jayaweera’s autobiographical Reflections

Some comments on Neville Jayaweera’s autobiographical Reflections N.Q. Dias by R. M. B Senanayake

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=108990#

Marauders from Kalinga

Jayaweera refers to the marauding Kalinga King, Kalinga Magha, who invaded Sri Lanka and laid it waste, desecrating temples and dagabos in the Rajarata not sparing even the Ruwanvelisaya or the irrigation systems on which the ancient Sinhala civilization of Anuradhapura and Polonnaruwa was built. He displayed callous brutality in blinding and executing the incumbent ruler Parakrama Pandya. Jayaweera says the memory of such brutality is deeply ingrained in the collective subconscious of the Sinhala people and probably accounts for the prejudice they feel to the Tamils even today. The brutality of the Maravar invaders has bequeathed the word "maravara balaya" to the Sinhala language to denote the power of brutality, extreme cruelty and intimidation displayed first by the Maravar warriors of Kalinga Magha. NJ cites several comparable cases from diverse cultures across the globe. Without condoning it, Jayaweera says that the brutality of the modern LTTE is only a manifestation of this historical barbarism of the Maravars

முற்குகர்கள் தமிழ் பேசுபவர்களாக இருப்பதனாலும் மலபார் பிரதேசத்தில் முக்குவர் என்ற பெயரோடு மீன் பிடிக்கும் மக்கள் இருப்பதாலும் முற்குகர்கள் மலபாரிலிருந்து வந்தனர் என்று கூறுகின்ரனர். ஆனால் மட்டக்களப்பில் குடியேறிய முற்குகர்கள் எந்த கால கட்டத்திலும் மீண்பிடித்தலைத் தொழிலாகக் கொண்டு இருக்க வில்லை இங்கு நோக்க வேண்டும். இங்கு ஆட்சி செலுத்தும் வன்னியச் சிற்றரசர்களாகவே தமது குலமக்களுடன் ஊழியக்குடிகலுடன் குடியேறியுள்ளனர் என்பதையும் நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டியதாக உள்ளது. 

முற்குகர்கள் இந்தியாவில் அயோத்தி,கலிங்கம் ஆகியவற்றிலிருந்து வந்தார்கள் என கல்வெட்டு பாடல்களில் குறிக்கபடுவதை புரம் தள்ள முடியாது. மட்டகளப்பில் முன்பு ஆட்சி செலுத்திய கலிங்க் அம்மன்னர்களின் பரம்பரையினரே முற்குககுல மன்னர்கள் என்று கூறப் பல சான்றுகள் உள்ளன.

மறவர்களில் நெடுநாள் முன்னேயே கடல் கடந்து சென்று பிறநாடுகளில் குடியேற்றங்களை ஏற்படுத்தி அப்படி அங்கே வாழும் ஒருவகை வீர மரபினரே முற்குகர்கள்

பிரித்தானியர் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்:

மட்டகளப்பு நாட்டின் வன்னியர்களாகவும் போடிகளாகவும் இருந்து செல்வாக்கு பெற்ற இருந்த முற்குகர் வம்சத்தினர் போர்த்துகேயர்,ஒல்லாந்தர் ஆகியோரால் படிப்படியாக அழித்தொழிக்கபட்டு அவர்களின் அதிகாரம் பிரித்தானியர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டது

இலங்கை பிரித்தானியரின் 1802ல் மட்டகளப்பின் போடிகளின் அதிகாரத்தை வேறு இடங்கலிருந்து வந்த தமது மதத்தை விட்டு மாறி அன்னிய மதமான கிகிறிஸ்தவ மதத்துக்கு சென்றவர்களிடம் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

வெள்ளைக்காரகளின் ஆட்சி காலத்தில் "முற்குகரின் சட்டம்" அடியோடு அழித்தொழிக்கப்பட்டது. இவர்களால் குடியேற்றப்பட்ட புதுக்குடியேற்ற அடிவருடிகளால் முற்குகர் ஆதி மதமான சைவ மத்திலிருந்து மாறமாட்டோம் மதமாற்றும் வேலையை முற்குகர் மக்களிடே பரப்பினர்

வெள்ளாளர்:

முற்குகர் சாதியமைப்பில் போட்டி நியலைக்கு வெள்ளாளர் யாழ்பானத்திலும் வாழ்பவர்கள். கடந்த காலத்தில் வெள்ளாளர்கள் முற்குக தலைவர்களின் ஆட்சியின் கீழ் இருக்கவில்லையென்று கூறினாலும் உண்மைனிலை அப்படியல்லவென்பது தான் சரியானது.(அவர்கள் முற்குகத்தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தார்கள் என்பதே சரியானது.) 
வெள்ளாளர் அரசியல் நிலைக்கு முன்பு முற்குகரின் கீழ் இருந்தவர்கள்.

முற்குக வன்னியரும் சிற்றரசர்களும்:

டச்சு பாதிரியார் குறிப்பில் எறாவூர்,பழுகாமம்,சம்மாதுரை இங்கு முற்குக வன்னிய (பிரதேச) சிற்றரசர்களும் மன்முனையில் வன்னிய அரசி ஆட்சி செய்தனர் என கூறுகிறார்


மட்டகளப்பு மான்மியம்:

வன்னிபங்கன் குலவரிசை முட்டிகூற மகிழ்ச்சிகொண்டு எழுந்திடுன் மரபும் நாடுமெந்த மன்னருன்னை வன்னிபமாய் வகுத்ததென்றும் மானிலத்திலுங்கள் முன்னோர் வாழ்ந்தவூரும் துன்னுபுகழ் கோத்திரமும் தொன்று தொட்டுத் துணையரசன் பேரூருஞ் சொன்னாலிந்த பன்னுபுகழ் சபையோர்கள் மகிழக்கூறிப் பங்குபெறு மறியாயானாற் பாவமாமே.

அறமியாதா னிச்சபைக்கு அகலநிற்பான் னெங்கள் பரன்றோழும்பேர் பழிப்புரைப்பாரறைவே நெறிதவறார் சுயநாடு காளிகட்டம் நீர்குலமே படையாட்சி யுழுதூ ணுண்டோர் வெறிகமழு மகாலிங்க வாசனெங்கள் திறத்தோரைப் படைத்துணைக்குத் தலைவனாக்கி குறியறிந்து வன்னிபங்கள் குலமே என்றும் குகப்பட்டத்தரசு கொண்டோனானே. 

தாந்தோன்றீர்ஸ்வரர் கோவில் தேரோட்டம் திருவேட்டை ஆடுவதும் அதன்பின் மட்டகளப்பு நாட்டிலுள்ள பல்வேறு தமிழ் சாதிப் பிரிவுகள் மரியாதைகள் பெற்றுகொள்கின்றன. அப்போது மரியாதை கூற எழுந்தபோது.

சூத்திரசாதிகள் அனைவரும் எழுந்து கலிங்கராசனை வணங்கி அவன் கையால் வாங்கமாடோம் என்று வெள்ளாளர் முதலான பதினெட்டு சிறைகளும்(சூத்திரர்)கூறி வெள்ளாளரே பதினெட்டு சிறைகளின் அதிபதியாய் முதல் மரியாதையாக மன்னன் கையில் வாங்க மாட்டோம் முட்டியிலே வாங்குவோம். என சூத்திரர் அரசரிடம் கைகளில் வாங்கமாட்டார்கள் என வெள்ளாளர் முதலான பதினெட்டு சிறைகலும் கூறி அனுமதிக்குமாறு கூறினர்.ஆனால் முட்டியின்மேலே பட்டுப் போட்டு எக்காலமும் வரிசைமுட்டி கூறவேண்டுமென்றும் சூத்திரசாதி முதற்குலம்- வெள்ளாளனுக்கும் உங்கள் பதினெட்டுச் சிறைகளுக்கும் பட்டுப்போடப்படாதென்றும் கட்டளையிட்டு வரிசை முட்டி கூறும்படி பண்ணி வணிகனை அவிழ்த்துவிட்டுப்பின்பு வெள்ளாளர்களை அவிழ்த்து மஞ்சள் தண்ணீர் தெளித்து வரிசை கூறும்படி செய்தனர்.

(பதினெட்டு சிறை சாதிகள் பதினென் சாதிகள் என சிறைகள் எனவும் சூத்திரர் எனவும் கூறுவர்).

அப்படி செய்தால் எக்காலமும் சிவமதத்திலேயேயிருந்து குகன் குலத்து வன்னிபங்கன் சொற்படி அரசனிட்ட கட்டளை தவறாமல் தேவாலய ஊழியஞ் செய்வோமென்று பதி கூற அரசன் கேட்டு சூத்திர மரியாதை பெற்றனர்.

இப்படி பதினெட்டு சிறையினர்கள் குகன் குலத்துக்கு ஊழியம் செய்வதை பெரும் பேறாக கருதினர்.

டச்சுகாரகள் காலத்தில் முற்குக வன்னியர்கள்:

டச்சுக்காரகள் காலத்தில் முற்குக வன்னியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு முத்திரக்கூடம் எனும் 18 அங்க வன்னியர்களும் சிங்களர் கூட்டில் டச்சுப்படைகள் அழித்தனர். இதை பரக்கிரமபாகு "முக்கரஹட்டன்" என விளக்குகிறது. இதுவே 18 வன்னியர் அழித்தல் என வரலாற்றில் குறிப்பிடபடுகின்றது. இதன் பின்பே வன்னியர் என்னும் சிற்றரசர்கள் பதிவியிலிருந்து விலக்கப்பட்டு போடிகள் எனும் ஏழு பிரிவினர் டச்சுக்காரகளால் நியமிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் கால்த்தில் முற்குகர்கள் நிலை:

டச்சுகாரர்களால் அழிக்கப்பட்டும் முற்குகர் சட்டம் மட்டும் மட்டகளப்பு பகுதியில் எஞ்சியிருந்த நிலையில் ஆங்கிலேயர் 1803ல் பெற்ற வெற்றியினால் முற்றும் பரிபோனது. இன்னும் மதமாற்ற பிரசிங்கிகள் நிறைய இறக்குமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறைமக்கள் பலரால் இவர்கள் நிலமும் அபகரிக்கபட்டது. அக்காலக்கட்டத்தில் தங்கள் நிலத்தையே ஏலம் எடுத்து விவசாயம் செய்தனர் முற்குகர்கள்.

முற்குகர்களை தாழ்வானவர்கள் என்னும் செய்தி பரப்ப முற்குகர்களை பற்றி தவறான கருத்துக்களை அவர்களின் தமிழ் ஊழியக்காரகளின் மூலம் பரப்புரை செய்தனர்.
சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:
சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:
குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.



முற்குகக் குடிகள்:

தொன்று தொட்டே முற்குகர் தம்மிடையே ஏழு குடிகளாக வகுத்து செயல்பட்டனர். கல்வெட்டு பாடலில் வரும் "ஓரேழு முற்குகர்" என்னும் வரியிலிருந்து அறியலாம்"

"சீர்தங்கும் வில்லவராம் பனிக்கனாரும் சிறந்த படையாண்டானே உலகிப்போடி கார்தங்கு மழவராசன் தஞ்சயன் கலிங்கன் என் ஏழுகுடி" 



1)வில்லவர்2)பணிக்கனார்3)உலகிப்போடி4)மழவராசன் 5)கலிங்கர் 6)தனஞ்சயன் 7) கச்சிலான்

என பிரித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் அந்த அந்த மன்னர்கள் வழியை கொண்டவர்கள்.


ஆலயம் தோறும் வன்னாக்கர்களாக கொண்ட முற்குகர்கள் பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில்

"மதிவேவு உலகுபுகழ் தசராதன் வரும் ராச மரபில்
உயர் குகசேனன் வம்சமுடி சிரசில் அனியும்
மலர்வேவும் கழி சூழ் ராமனாடரசாண்ட மறவர் குல
மாதரெழுவர்
வடநாடு விட்டு இலங்காபுரியில் வருவேளை-மனமகன் சிறைகளும் உறவினர்கள்
ஆறுகுடிகள்-மணிமேவு இராமேஸ்வரத்துதிகள் செய்தபின்
மாலோட மீதேறியே வள்ராழி தாண்டி வெகு அநுரதன் அடலோடு வளர்
நகரமேவி வரவே வசைபட்ட மாது.... மறவர் குலமாதொரொடு
வன்னியரில் ஐந்துகுடி வந்தமுறைவந்தம்மா பதிமேவுமுங்கள் மரபே.....
ஓதமொழி பரராசர் மரபிலுயரும்,படர் நாகக்கொடி உயர்
அத்தினாபுரம் பாண்டு மகராசர் மரபாம் 

பண்டு கமத்தொழில் என்றுஞ்ச செய்துண்டு வந்தகுலம்........... அவரவர் கனவருடனே கலைதங்கு ஏழு பெண்கள் நாமமாவது
கலைவஞ்சி,வீரம்மை,மங்கியம்மை,களபமுலை
செட்டிச்சி,மகிழம்மை,நாச்சியம்மை,வீரம்மை,பாலம்மை
....
...வாழவைத்தும் நரபால ஸ்ரீ சங்க போதி குகன் என அவரவர்கள் போடிகளெனவும் சுபபோசந்த்துயர் ராம நாட்டிலுயர் நங்கை ஏழு பெண்கள் வரவால் நதி மட்ட நகரம் ஆண்ட முக்குவரிலே ஏழுகுடி நவில்வதுவே.

மேலே கூறப்பட்ட பாடலில் மறவர் குலத்தை சேர்ந்த மாதர்கள் மட்டகளப்பு நாட்டிற்கு வந்து ஏழு இடங்களில் குடியேறினர். இவர்களே முற்குகர்களின் மூதாதயர்கள். 

முற்குகர்குடிகள் தாய்வழி மூலமே ஏற்பட்டு இன்றும் அவ்வாரே நடைமுறியில் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிரித்து பெருகியவர்களின் சந்ததிகளே இன்றும் ஒவ்வோரு குடியினராக இருக்கின்றனர். இவ்வாறு ஒரே குடியாய் இருப்பவர்கள் தங்களைச் சகோதரர்களாக எண்ணி அவ்வாரே நடைமுறியிலும் செயற்பட்டு வருகின்றனர். இதனால் ஒரே குடியினருக்குள் திருமன உறவுகள் நடப்பதில்லை. 

முற்குகர் சட்டம்:

இலங்கையில் வாழ்ந்த சட்டங்கலில் இதுவே பிரதானமானது. டச்சுக்காரகள் இதை ஆராய்ந்து ரோம்,கிரேக்கம்,ஹாலந்து,கெல்டுகள் பழக்கங்களில் இதே போன்ற தாய்வழி உரிமை சட்டம் பின்பற்றப்பட்ட உன்மையை டச்சுக்காரர்கள் குறித்துள்ளனர்.

சேர நாட்டின் சட்டங்கள் இதைப்போன்றவே. முற்குகர் சட்டங்களே வேளாளர்களும் பின் பற்றினர்.

இதை பற்றி இன்நூலில் விரிவாக குறிப்பிடபடுகின்றது. இது மிக விரிவான ஒன்று நூலில் அதிகம் இது வருகின்றது.

முற்குகர்கள் தமிழக இராமநாதபுரம் மறவர்களே என்னும் ஆதாரம் இந்த நூலின் 78 ஆம் பக்கத்திலே ஆசிரியர் தெளிவாக எடுத்து சொல்லியுள்ளார். அதில்.


02 மாதாக்கள்:
மாதாக்கள் என்பது ஒரு முற்குகரின் மாதாவினும் அவரின் முன் கிளைவழியினரையும் மட்டுமன்றி அவரின் தந்தையின் கிளைவழியினரையும் குறிக்கும். 

04.மூதாக்கள்:
மூதாக்கள் என்பது ஒருவரின் முன்னோர்கள் தாய்,தந்தையின் முன்னோர்களையும் அம்முன்னோர்களின் முற்கிளைவழியினரையுங் குறிக்கும்.

ஒருதாயின் வழியில் வருபவர்களே ஒரே குடியினர்களாவர் ஒரு குடியைசேர்ந்தவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தார்கலும் சகோதரர்களாகவே கருதப்படுவர்.
-சிவ.சண்முகம்

மேலே சொன்ன கிளை முறைகள் மற்றும் தாய் கிளையினர் என சொல்லும் வார்த்தை தமிழ் நாட்டில் யாரை குறிக்கும் என நன்றாக விசாரித்தால் தெரியும்.

இவர்கள் மறவர்களே.

மேலும் இந்த முற்குகர் சட்டம் பல பக்கங்கள் கொண்ட மிக நேர்த்தியான கட்டமைப்பு என தெரிகின்றது. முற்குகர்களின் சமயம் "சிவமதம்" சைவ சமயத்தவர் தாந்தோன்றீஸ்வரர்,கந்தசாமிகோவில்,கன்னகை அம்மன் போன்று சைவ சமயத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் திருமணமுறை அப்படியே மறவர்களின் அழிமுறைதான். காணாத்தாலி கட்டுத்தாலி போன்று அப்படியே சம்பிரதாயங்கள் உள்ளன. இவைகளும் பல பக்கங்களுக்கு நீள்கின்றனர்.

முற்குகர்கள் விவசாய முறை:

இவர்கள் தங்கள் ஊழியக்குடிகளை வைத்து விவசாயம் தழைக்கவும் இவர்கள் ஆதரவு அபரிமானது. இதை இப்புத்தகத்தை படிக்கும் போது தெரிகின்றது. இவையும் பல பக்கங்களுக்கு நீள்கின்றது.

போடிகள் கல்வெட்டு,மகாவம்ச,ஆங்கில,போர்த்துகேய,டச்சு மற்றும் கல்வெட்டுகள் மூலம் அருமையானதொரு வரலாறை வழங்கியுள்ளார் ஆசிரியர்.

முற்குகர்களே மறவர்கள் நமது இலங்கையின் நமது உறவுகளின் எச்சம் எத்தனை எத்தனை அன்னியர்களால் அழிக்கப்பட்டு இவர்கள் வீழ்ந்த போதும் வீர மறவர்களாகவே வாழ்ந்தனர். இன்று இலங்கையில் நடந்த படுகொலையில் எத்தனை பேர் அழிக்கப்பட்டனரோ தெரியவில்லை.

இதில் குறிப்பிடப்படும் போடிகள் என்னும் அமைப்பு அப்படியே ஒரு உள்ளாட்சி அரசாங்கம் அதைப்போல் தலைமையை இழந்து நம் மறவர்களும்,கள்ளர்களும்,அகமுடையோர்களுமான முக்குலத்தோர்கள் இழந்து இன்று மோசமான நிலைக்கு சென்றுள்ளோம். இந்த அமைப்பை அப்படியே இழந்துள்ளோம்.

இந்த நூலை எழுதியவர் மட்டகளப்பு போடிகள் தலைமை குடும்பத்தை சேர்ந்த ஒருவரே என்பது இங்கு கண்கூடு. அவர்களை எங்கள் உறவிணராகவும் முன்னோடியாகவும் கருதி அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். இந்த நூல் முற்குகர்களுக்கு மட்டுமல்ல முக்குலத்தோரான நமக்கும் ஒர் பழங்கால வழிமுறைகளின் பெட்டகமாக இருக்கும் என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன்.


நன்றி:
www.noolagam.org
மட்டக்களப்பு முற்குகர்கள் வரலாறும் மரபுகளும்-சிவ சண்முகம்


விஷ்ணு புத்திர வம்சமும் வெடியரசன் கோட்டையும் 


இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களை எல்லாம் பல தமிழ் மன்னர்களும் வன்னிமைகளும் ஆண்ட அதேநேரம் அவற்றுக்கெல்லாம் தலைமை அரசாக விளங்கியது யாழ்ப்பாண இராசதானிதான். உண்மையில் யாழ்பாண அரசை பேரரரசாக கொண்டு பிற தமிழர் வாழ் பகுதிகளில் சிற்றரசுகளே நடந்து கொண்டிருந்தன. இது குறித்து நாம் யாழ்பாண இராஜ்ஜியம் எனும் தொடரில் வரும் பகுதிகளில் விரிவாக பார்க்கலாம்.


                                                                 
மேலும் இலங்கை தென்னிந்தியாவின் கீழாக அமைந்திருப்பதால் தென்னிந்திய அரசுகளின் படைஎடுப்புக்களுக்கும் ஆட்சிக்கும் அடிக்கடி உட்பட்டு வந்திருக்கிறது என்பது தெளிவு. இதனால் சோழப்பேரரசின் படை எடுப்புக்கள் இங்கு நிகழ்ந்த போது அவர்களுடன் வந்த வெவ்வேறு படைபிரிவுகளும் இங்கு தங்கிவிட நேர்ந்தது. [ கவனிக்க சோழர் படையெடுப்புக்கள் காலத்தால் பிற்பட்டது என்பது அல்ல முற்காலச் சோழர்களின் காலத்திலிருந்து இலங்கை மீதான படையெடுப்புக்கள் நிகழ்ந்ததுடன் அவர்களுக்கும் முந்திய வரலாறையுடைய பாண்டியர்கள் காலத்திலும் இலங்கை மீதான படையெடுப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன ] அவ்வாறு வந்த படைப்பிரிவுகளும் சிற்றரசர்களும் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் ஆட்சியை அமைத்து வழிநடத்தி வந்தனர்.



 அப்படி இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் கரையோரப்பிரதேசங்களில் குறிப்பாக காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை போன்ற தீவுப் பகுதிகளில் யாழ்பாண அரசின் கீழ் சிற்றரசாக கரையோரக் காவலை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட அரசுகளுக்கு தலைமை தாங்கியவர்களே விஷ்ணு புத்திரர் வம்சத்தை சார்ந்தவர்கள். [கவனிக்க இவ்வரச மரபினர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகின்ற போதிலும் இல்லை இவர்கள் பிறப்பிலேயே இலங்கையை சார்ந்தவர்கள் என்று கூறி அதற்கு பல புராணங்களில் இருந்து சான்றுகள் கூறப்பட்டுள்ளன மேலும் நாகதீவு, ஏழ்பாலைநாடு எனும் தீவுநாடுகளையும் இலங்கையையும் கருத்தில் கொண்டால் இதுவும் உண்மை எனக்கருத இடமுண்டு.] கரையோரப் பாதுகாப்பை இவர்கள் பொறுப்பேற்றிருந்தபடியால் யாழ்ப்பாண அரசின் பாதுகாப்பில் இவர்களின் பணி அளவற்றதாக இருந்தது. இதன் நிமித்தம் இவர்களால் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட கோட்டைகள் நெடுந்தீவு, காரைநகர், ஊர்காவற்றுரை மற்றும் சில தீவுப்பகுதிகளில் அமைந்திருந்தது. 
- See more at: http://venkkayam.blogspot.in/2012/09/blog-post_12.html#sthash.XcPdtz9S.dpuf
வீர நாராயணன் பற்றிய குறிப்பில் புங்குடுதீவு,அனலைதீவு,காரைதீவு மற்றும் கரம்பொன் பருத்தியடைப்பு அவன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாக உள்ளது. வீர நாராயணனின் சகோதரர்கள் விளங்குதேவன் நைனாதீவையும் ஏரிளங்குரவன் வேலனைத்தீவையும் ஆழ வெடியரசன் நெடுந்தீவை ஆண்டுள்ளான்.

இளம்பூரனார் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுகையில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதியின் செய்யுளை உவமிக்கின்றார் அதாவது நவகோடி நாராயணன் வணிகன் மகன் வீர வாணிபன் என்று.

எம்மவர் வீரமும்மிக்கவர்கள் அதுமட்டுமல்ல இரவின் நிலவில் வானத்தில் தோன்றும்56 விண் மீன்களைப் பயன்படுத்தி பாய் மரக்கலங்கள் செலுத்துவதிலும் வல்லவர்கள் அதுமட்டுமன்றி வைத்தியத்திலும்,இயல் இசையிலும் தங்களை வெளிக்காட்டியவர்கள், சிறந்த கல்விமான்களுமாவர்.

வாணிப நோக்கத்துடன் அமைக்கப் பட்ட பாய்மரக் கலங்கள் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலத்திலும் எமது ஊரில் நிமிர்ந்து நிற்கும். பிற ஊர்க் கலங்கள் நீரில் அடித்துச் செல்லாமல் பாதுகாப்புக்காக எமது ஊரிலேயே அடைத்து வைக்கப்பட்டது , அதுமட்டுமன்றி வடக்கில் இருந்து (தமிழ்நாடு) தெற்கு நோக்கி (தமிழீழம்) பயணம் செய்யும் கலன்கள் முதலில் எமது ஊரையே அடையும் என்பதில் எந்தவித ஐயமும் இன்றி தெளிவாக தற்பொழுது பண்டைய தமிழன் பயன் படுத்திய பாய் மரக்கலங்களின் பயணம் காற்றின் உந்துதலுடன் நீரோட்டத்தின் உதவியுடனும் எப்படி அமையும் என ஒரு பரிட்சார்த்தம் செய்யப்பட்டது அதற்காக வடிவமைக்கப் பட்ட பாய்மரக்கலன் ஐ என் எஸ் தரங்கணி எனப் பெயரிடப்பட்டு மும்பை Maritime History Society யின் ஆதரவுடனும் இந்தியக் கடற்படையின் மேற்கு தெற்கு பிரிவுகளின் உதவியுடனும் மும்பை பல்கழைக்கழகத்தின் இளைப்பாறிய பேராசிரயர் பா.அருணாச்சலத்தின் தலைமையில் நாகபட்டினத்தில் இருந்து பயணத்தைத் தொடர்ந்தபொழுது அது வட தமிழீழத்தில் அமைந்த எமது ஊரையே முதலில் அடைந்தது. இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி பருத்தி உற்பத்தி மிகப் பெருமளவில் நடைபெற்றதனாலும் எமது ஊர் பருத்தியடைப்பு எனும் பெயர் கொண்டது.


வீர நாராயணன் ஆட்சியில் இருந்த பொழுது பருத்தியடைப்பின் கரையில் ஒரு கோட்டையைக்கட்டி ஆட்சி நடத்தினான் பின்பு வந்த போர்த்துக்கேயர் அதனை ஆட்சி நடத்தியது மட்டுமன்றி கடலுக்குள் ஒரு கோட்டையையும் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேயத்தளபதியினால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஊர்காவற்றுறைக்கு போர்த்துக்கேயர் இட்ட பெயர் மயலவள இச் சொல் துறைமுகம் அல்லது துறைமுக மேடை எனப் பொருள்ப்படும். ஒல்லாந்தர் வசம் ஆட்சி மாறியதன்பின்பாக ஒல்லாந்தர் அதனை இன்றைய வடிவில் கட்டினார்கள் இக் கோட்டையானது பன்றியின் கால்வடிவில் அமைக்கப்பட்டுள்ளது ஒல்லாந்தர் அதற்க்கு இட்டபெயர் ஹீ மென்கில்.இக் கோட்டையானது எதிரி, நாட்டுக்குள் ஊடுருவாமல் கண்காணிக்கும் முக்கிய கேந்திர நிலையமாக ஒல்லாந்தர் பாவித்தனர்,இதனாலேயே காவலூர் என்றும் அழைத்தனர்.இவர்கள்தான் ஊர்காவற்றுறைக்கு லெய்டன் எனப்பெயர் இட்டனர்.ஆனாலும் நம்மவர் அதனை லைடன் தீவு என்று அழைத்தனர் அதுமட்டுமன்றி இக் கோட்டையைக் கட்டுவதற்காக ஒல்லாந்தர் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில் இருந்தே பூதத்தம்பி என்பவரின் தலைமையில் கற்களைக் கொண்டுவந்தனர்.இக்கோட்டையை எம்மவர்

பூதத்த்தம்பிக் கோட்டை என்றும் அழைத்தனர் பின்னாளில் வந்த பிரித்தானியர் 1795 இல் இக் கோட்டையை சிறைக்கூடமாகவும் மருத்துவ நிலையமாகவும் பாவித்தது மட்டுமன்றி சுங்கப் பரிசோதனை நிலைய

மாகவும் பாவித்தனர்.
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் என்பதற்க்கமைய எத்தனை எதிர்ப்புகளின் மத்தியிலும் சைவத்தைத் தளைத்தோங்க வைத்தவர்கள் நம் முன்னோர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்றும் எமது ஊரில் நிமிர்ந்து நிற்கின்றன சைவ ஆலயங்கள்.
யாழ்பாணத்தை பற்றியும் இராமேஸ்வரம்,சேதுபதியிலும் "குகன் வம்சம்" பற்றிய பல செய்திகள் பேசப்படுகின்றன. 

சேதுபதி குகன் குலத்தவர் "கருட,அணும கொடியுடையோர்" இதே சின்னம் போல ஈழத்து வெடியரசன் விஷ்னு குலத்தோன் சின்னமும் "கருட,அணும கொடிகளை கொண்டது". சேதுபதியின் மகளான நீலகேசினாவை மனம்புரிந்த விஷ்னு புத்திரன் வெடியரசன் பற்றிய செய்திகளும் கோட்டைகளும் ஈழத்தில் நிலவுகின்றன
இராமர் அருளிய முதற்சேதுபதி குகன்:
 சோழர்களின் பாண்டிய படையெடுப்பால் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து நிறைய முக்குலத்தோர் இராமேஸ்வரத்துக்கு இடம் பெயர்ந்தனர். அப்படி வந்தவன் "எல்லாளன்" இவனை "ஏழாரன்" என கூறுவர். ஏழு அரசர்களுக்கு தலைவன் என பொருள் படும். இவனே குகசேனை தலைவர்களுடன் வந்த குளக்கோட்டன் என கூறுவர். இவனது வம்சம் தான் சேதுபதி என வெடியரசன் நூலாசிரியர் கூறுகிறார்.


முகுளி நாகர்: 
இலங்கையையின் வடபகுதியை ஆண்ட தமிழரசர்களான நாகர்களே முகுளி நாகர் என முற்குகர்(குகன்) என பிற்காலத்தில் மாறினர் என்ற கருத்தும் உண்டு. 

யாழ்பாண வைபவமாலை ஒரு புரட்டு: 


யாழ்பாணத்தை பற்றிய பிற்காலத்தில் எழுதப்பட்டதில் ஒன்று யாழ்பாண வைபவமாலை என்னும் நூலில், இவை யாழ்பாணத்தில் ஏனைய சரித்திரத்தை பொய்யாக்கி தமக்கு தேவையான புது சரித்தரத்தை அவைக்கள புலவரை வைத்து எழுதி கொண்டுள்ளனர்.முதலிமார்கள் பலர் புலவர்கள் அமர்ந்தனர் என்பது குறிப்பிட தக்கது. 



ஆரிய்சேகரன் கட்டியதாக கோவில்கள் பலவும் புரட்டு(பழைய நாகர்வம்ச மன்னர்கள் ஆலயங்கள்) 



போர்த்துகேயரின் ஆளுகைக்கு பின் பல கோவில்களை புனரமைத்தது முற்குகரே இருந்தாலும் பல கோவில்களை குளக்கோட்டன் கட்டியதாகவும் ஆரியசேகரன் கட்டியதாகவும் கூறுவது சுத்த பொய்யாகும். அது பழைய நாகர் வம்சத்தின் சைவ தெய்வங்களாம். 




செந்தமிழ் நாட்டு பொருனர்:
 மகாகவி பாரதியார் முக்குலத்தோர்களை செந்தமிழ் நாட்டு பொருனர் என புகழ்ந்துள்ளார். 

கலிங்க வம்சமாகன்: 

கலிங்க வம்சத்தவன் மாகன் சேதுபதியில் இறங்கினான். இவனும் குகன் குலத்தோர். இவனது வம்சமும் சேதுகுலம் தான் இவனே யாழ்பாணத்திலும் சேதுவிலும் பிற்காலத்தில் இராஜ்ஜிய ஸ்தாபிதம் செய்து தமிழ்ராட்சியை நிறுவினான் என்பர்.
குகனை வேடுவன் என தவறாக சித்தரிக்கின்றனர்:

 குகனை இராமாயனத்தில் 5 லட்சம் படைவீரர்கள் தலைவன் என கூறுகின்றது. கலிங்கத்தின் மன்னனாகவும் குகன் இடம்பெறுகிறான். அசோகர் படையெடுப்பில் கலிங்கத்தை ஆண்ட காரவேலன் "திரமிள" சங்கமம் என்ற பழந்தமிழ் ஆட்சிப்பீடமாக கலிங்கம் இருந்துள்ளது. சோழரின் ஆளுகைக்குபின் அது தமிழ் தேசமாக மாறியது.குணசிங்கன் மட்டக்களப்பைக் கலிபிறந்து மூவாயிரத்து ஐந்நூறாம் வருஷம் பரபாலித்து வருங்காலம் கலிங்க ஓரிசா தேசத்தை அரசுபுரியும் குகசேனனுடைய புத்திரி உலகநாச்சி என்பவள் கௌதமபுத்தருடைய தசனத்தை எடுத்து நெடுங்கூந்தலுள் மறைவாய் வைத்துக் கைலயங்கிரியில் குகவம்சத்தார் முன் காலத்தில் எடுத்துக் கொண்டுவைத்த சிவலிங்கத்தையும் எடுத்துக்கொண்டு தனது சகோதரன் உலகநாதனுடன் தனது தந்தை குகசேனனிடம் விடைபெற்று வர்த்தகருடைய படகிலேறி மணிபுரத்திலிறங்கி விசயதுவீபத்தில் வந்து மேகவண்ணனைக்கண்டு குலங்கோத்திரமெல்லாம் விளங்கப்படுத்திப் புத்தருடைய தசனத்தைக் கொடுத்தாள். மேகவர்ணனும், புத்தமதத்துக்கு இனி அபாயமில்லையென்று அதிக சந்தோஷங் கொண்டு உலகநாச்சியை நோக்கி உமக்கு வேண்டியதைக் கேளுமென்ன உலகநாச்சியும் அரசனே! இந்த இலங்கையில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத கிராமமொன்றீயும்படி வேண்டினள். அதைக்கேட்ட மேகவர்ணன் மட்டக்களப்பை அரசுபுரியும் குணசிங்கன் தனது சிநேகிதனாதலால் ஒரு திருமுகம் வரைந்து அதில் உமது மட்டக்களப்பு, உன்னரசுகிரி இவைகளில் காடுசெறிந்து குடிவாழ்வில்லாத பதி ஒன்று இந்த உலகநாச்சிக்குக் கைலஞ்சமாய் ஈய்ந்து கொடுக்கும்படி வேண்டி உலக நாச்சிக்குக் கொடுக்கும் உபகாரங்களையும், இரத்தினமாலையையும் கொடுத்து மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்தான். அவர்கள் கொங்கு காசி அப்பன்புட்டி வழியாய் வந்து திருமுகத்தைக் குணசிங்கன் கையில் கொடுத்தனர். குணசிங்கனும் திருமுகத்தை வாசித்து சந்ததியுரிமை கொண்டாடி மட்டக்களப்புக்கு வடபாகமாயுள்ள அம்பிலாந்துறைக்கப்பால் மன்னேறிமுனை வளர்ந்து காடுசெறிந்து குடிவாழ்வற்ற பகுதியை நிந்தமாயீந்து ஒரு இடத்தில் குடிகளை அனுப்பி வெட்டித்தூர்த்து மாளிகை உண்டாக்கி உலகநாச்சிக்கீய உலகநாச்சியும் குடிவாழ்ந்து சில காலம் சென்றபின், தனது தம்பி சிவநாதனைத் தந்தையிலிடத்திலனுப்பிக் குகன் குடும்பம் நூற்றாறும், சிறைக் குடும்பம் முப்பதும் எடுப்பித்துக் குகக்குடு;ம்பங்களைத் தன் அருகாயிருத்தி அந்த இடத்தில் ஆலயமியற்றிச் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வணங்கிவந்தனர். இவர்களின் சந்ததிகள் மட்டக்களப்பு, மண்முனை இருபகுதிகளையும் இருநூறு வருஷங்களாக ஆண்டு வந்தனர். பின்பு கலிங்ககுலத்து வங்கலாடன் என்பவன் அரசுக்கு வந்தான்.









சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:
சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:
குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.









நன்றி:
நூல்:விஷ்னுபுத்திர வெடியரசன் வரலாறு
உயர் திரு.ஐயா. மு.சு.சிவப்பிரகாசம் அவர்கள்


முற்காலத்தில் ஈழத்தில் மறவர்கள் நெடுந்தீவூ பகுதியில் குடியிருந்தனர். இக்குலத்தவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால் அதிலும் ஆண் குழவி வந்தால் பிள்ளை பிறந்த முப்பத்தொராம் நாளை வெகு சிறப்பொடு கொண்டாடுவார்கள். உற்றார் உறவோர் நண்பர் முதலானோருக்குத் திருமுகம் போக்கி யாவரும் வரவழைக்கப்பட்டு அக் கொண்டாட்டம் நடைபெறும். இவ் வைபவத்தின் போது நடுவீட்டில் இதற்கென சாணத்தால் மெழுகிடப்பட்ட இடத்தில் மஞ்சள் மாவினால் ஒருசிங்க உருவம் கீறுப்பட்டிருக்கும். அதன்மேல் வயதுமுதிர்ந்த மூதாட்டி ஒருத்தி பிறந்த சிசுவை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாடல் படிப்பாள். அப்பாட்டில் குறிப்பிடும் சாமான்களெல்லாம் பிள்ளைக்கு அன்பளிப்பாக இனசனங்கள் கொண்டுவந்து வைப்பார்கள். அப்பாடல் வருமாறு:


“சோழநாடு கண்டு வந்தீரோ தம்பி
சோழப் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
சேரநாடு கண்டு வந்தீரோ தம்பி
செந்நெல் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
பாண்டிநாடு கண்டு வந்தீரோ தம்பி
பச்சை முத்துக்கொண்டு வந்தீரோ தம்பி
சென்னை நாடு கண்டு வந்தீரோ தம்பி
சீரகம் கொண்டு நீ வந்தீரோ தம்பி
மதுரைநாடு கண்ட வந்தீரோ தம்பி
மஞ்சள்பொடி கொண்டு வந்தீரோ தம்பி
கொங்குநாடு கண்டு வந்தீரோ தம்பி
கொத்தமல்லி கொண்டு வந்தீரோ தம்பி”


இவ்வண்ணம் ஒவ்வொரு நாட்டையும் சரக்குகளையும் சொல்லி முடித்த பின்.

“அப்பாவைப் பார்த்திடவந்தீரோ தம்பி
ஆனைக்குட்டி வாங்கவந்தீரோ தம்பி
ஆச்சியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
ஆட்டுக்குட்டி வாங்க வந்தீரோ தம்பி
மாமனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
மான்குட்டி வாங்கிட வந்தீரோதம்பி
அத்தையைப் பார்த்திட வந்தீரோ தம்பி
அன்னக்குஞ்சு வாங்க வந்தீரோ தம்பி
பாட்டனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பசுக்கன்று வாங்கிட வந்தீரோ தம்பி
பாட்டியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பால் மோர் குடித்திடவந்தீரோ தம்பி”


இப்பாடலைப்பாடும்போது பெற்றார், பேரர்கள், மாமன்மார்கள் முதலானோர்கள் ஆட்டுக்குட்டி, பசுக்கன்று, கோழிக்குஞ்சுகளையும் மாமன், அத்தை முதலானோர் ஆனை, குதிரை, மான் முதலியவைகளை வெள்ளித் தகட்டிலும், செம்பத்தகட்டிலும், சில பணம் படைத்தவர்கள் தங்கம் பொன்னிலும் செய்து அன்பளிப்புச் செய்வர். இவைகள் முடிந்ததும் வயது முதிர்ந்த பெரியவரொருவர் பிள்ளையைத் தூக்கி மடியில்வைப்பர். அப்போது மறவ வாலிபர்கள் மறாட்டியமும்@ சிலம்பும் அடிப்பர் (மறாட்டியம் என்பது ஒரு முளத்தடிகொண்டடிக்கும் கோலாட்டம்) இவர்கள் கோலாட்டம் அடிக்கும்போது, பிள்ளையை வைத்திருக்கும் பெரியவர் கீழ்வரும் பாடலைப்பாடுவர்.

“ஆனைமுது கேறிவந்தீரோ தம்பி
அரசைப் பிடித்திடவந்தீரோ தம்பி
குதிரை முதுகேறி வந்தீரோ தம்பி
கொடியை உயர்த்திட வந்தீரோ தம்பி
தேரினிலேறி நீ வந்தீரோ தம்பி
தேசம் பிடித்திட வந்தீரோ தம்பி
வேலைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வெற்றியெடுத்திட வந்தீரோ தம்பி
வாளைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வடநாடு வென்றிட வந்தீரோ தம்பி
ஈட்டி சுழற்றி நீ வந்தீரோ தம்பி
ஈழம் பிடித்திட வந்தீரோ தம்பி
படைகள் திரட்டி நீ வந்தீரோ தம்பி
பகைவனை வென்றிட வந்தீரோ தம்பி”

இப்பாடலில் மறவர்களின் வீரமும், அவர்கள் பணி யாற்றும் படைகளின் வரிசையும், பாவிக்கும் ஆயுதநாமங்களும் நாடு பிடிக்கும் திறனும் தொனிக்கிறது. அன்றியும் சிங்கரூபம் கீறி பிள்ளையை வளர்த்திவைத்திருப்பதின் காரணம் இவர்களின் குலதெய்வமான துர்க்கையின் சிங்கவாகனத்தை நினைப்பூட்டுதற்கென எண்ண இடமுண்டு

மறவருக்கமைந்த வடிவத்தைப் “பண்டைத் தமிழர் பண்பாடு” என்னும் நூலில் கூறப்பட்டதைப்போல், “கல்லெனத்திரண்டதோளர், கட்டமைந்த மேனியர், முறுக்கு மீசையர், தருக்குமொழியினர், வீறிய நடையினர், சீறிய விழியினர், முதலாம் அம்சங்கள் இவர்களுக் கிருப்பதையும் பரக்கக்காணலாம்.

மறவர் குலத்தவர்களில் ஒரு பகுதினரான கருங்கை மறவர் போரில்லாக் காலங்களில் காடுகளில் சென்று புலிகளை வேட்டையாடி அப்புலிகளின் பற்களை எடுத்துவந்து தம் மாதர்களுக்கு மாலையாகக் கோர்த்துக் கழுத்தில் அணிவதற்குப் பரிசாகக் கொடுப்பர்.
புலியாட்டம் என்பது விளையாட்டுக்களில் இடம் பெறும் ஒரு வகை விளையாட்டு. ஒருவர் புலிபோல் சோடித்துக் கொண்டு மணமக்களுக்கு முன்னால் பாய்ந்து, பாய்ந்து விளையாடிக்கொண்டு வருவார். இவ்வழக்கம் இவர்கள் மத்தியில் மாத்திரம் இருந்ததாக அறிகிறோம். திருவிழாகளிலும் இவர்கள் சந்தோஷத்திற்காகவும் சென்று புலியாட்டம் ஆடுவது வழக்கம். புலிப்பல்தாலி, புலிசகமாலை முதலியனயாவும் இக்குலத்தவர்களின் உரிமைச் சொத்தாகத் தெரிகிறது

“மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி” என ஒரு பழங்காலக் கவிதை இதன் உண்மையை எடுத்தோதுகிறது.

நெடுந்தீவில் வாழ்ந்த இக்குலத்தவர்களும் சங்கு மணிகளாலும், பொன்னாலும் அணிகலன்களைத் தேடாது, புலிப்பல், புலிநகம் முதலானவைகளையே சிறு நூல்களில் கோர்த்துக் கழுத்தில்கட்டியும், பன்றி முள்ளுகளைக் கொண்டையில் செருகியுமுள்ளார்க ளெனப் பரம்பரைக் கதைகளுமுண்டு.

மணவீடுகளில் புதுமாப்பிள்ளையும், புதுப்பெண்ணையும் வியந்து கூறிப் பெண்கள் வாழ்த்துக்கள் படிப்பது தமிழர் வழக்கம். இவ்வழக்கம் இவர்களுள்ளும் இருந்து வந்தது. ஒரு பெண் மாப்பிள்ளையை வியந்து கூறிப்படிக்கும் பாடலில் ஒன்றைக் கீழே தருகிறேன்.

ஆனைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
ஆலமரம் போதாது


குதிரைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
கொல்லைகளம் போதாது


சிங்கங்களைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
சிறுதோட்டம் போதாது


வேங்கைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
வெளிநிலங்கள் போதாது


வேல் சொருகி வைப்பதற்கோ - பெண்கொடுத்த
வீட்டுவளை போதாது


அம்புவில்லு வைப்பதற்கோ - பெண்கொடுத்த
அரண்மனையோ போதாது


போதாது போதாது - பெண்கொடுத்த சீதனங்கள் போதாது.

இவ்வாழ்த்துப்பா மூலம் இவர்கள் மறவர் குலத்தவர்களென்பதும், புலிவேட்டையாடு வர்களென்பது தெரிகிறது.

அன்றியும் அக்காலம் இக்குலத்தவர்களின் மணக்கோல ஊர்வலங்களில் மணமுரசோடு, கோலாட்டம், மறாட்டியம், புலியாட்டம் முதலாம் விளையாட்டுக்களும் இடம் பெறும். ஒருவர் புலிபோல் சோடித்துக் கொண்டு மணமக்களுக்கு முன்னால் பாய்ந்து, பாய்ந்து விளையாடிக்கொண்டு வருவார். இவ்வழக்கம் இவர்கள் மத்தியில் மாத்திரம் இருந்ததாக அறிகிறோம். வேறுசாதியாரின் மண்வீடுகளிலும் இவர்கள் சந்தோஷத்திற்காகவும் சென்று புலியாட்டம் ஆடுவது வழக்கம். புலிப்பல்தாலி, புலிசகமாலை முதலியனயாவும் இக்குலத்தவர்களின் உரிமைச் சொத்தாகத் தெரிகிறது.

ஆரிய சக்கரவர்த்தி யார்?

சேதுபதிகள் இராமநாதபுரத்தின் மன்னர் இல்லையாம் நிஜ சேதுக்காவலன் ஆரியசேகரணாம். ஆரியசேகரண் பிராமணனாம் அவர் சத்திரியராம் அதனால் சேதுபதிகள் சத்திரியர் கிடையாதாம் போலி சத்திரியன்கள் பல்லவன் பிராமணனா இல்லை சத்திரியனா? என்ற கேள்விக்கு எங்கள் இனத்தில் பிராமணரும் உள்ளனர் சத்திரியரும் உள்ளனர். இன்றைய பிராமணர் போலிகள் நாங்களே நிஜ பிராமணர் என கதைவிட்டு திரியும் கோமாளிகளுக்கு சந்தேகம் வேறு வந்துவிட்டது. தீர்ப்போம். 

சரி நாம் வைக்கும் கேள்விகள்:
ஆரியசக்கரவர்த்தி பிராமணன் என வைத்துகொள்வோம்.
1) இவர் பிராமணராக இருந்தால் இந்த பிராமணரின் படைகளில் எந்த பிராமனர்கள் போர் வீரர்களாக இருந்தனர்.
2)இராமேஸ்வரம் கோயில் அர்சகர்கள் மராத்திய பிராமணர். திருப்புல்லானி கோவில் அர்சகர்கள் தெலுங்கு பிராமன அய்யங்கார். இந்த இரு பிராமணர்களும் இடைக்காலத்தில் குடியேறியவர்கள் இவர்கள் தவிர அங்கு பூர்வீக ஆரிய பிராமணர் யார்?
3) சோழர் காலத்தில் அரையர் என்னும் அந்தஸ்து பிராமணர்களுக்கு வழங்கபட்டது.பிரம்மாதிராயன்,பிரம்மரைய என வந்துள்ள பட்டம் போல் ஆரிசேகரனுக்கு பிரம்மராயன் என எந்த பட்டம் வந்துள்ளது.
4)பிரம்மதேயங்களே இல்லாத யாழ்பாணத்தில் பிராமணர் குடியிருப்புகளே இல்லாத நிலையில் யாழ்பாணத்தில் மட்டும் ஒரு பிராமணன் அரசன் ஆனது எப்படி.
5)பிராமன சம்பந்து என பிராமன பென்களை மனந்து அவர்கள் பார்ப்பனத்தி என்ற பட்டத்தில் எத்தனை இரானிகள் ஆரிசேகரன் இராணிகள் வந்துள்ளனர்.
6)முக்குவர்களிடம் பென் எடுப்பதே அதிகமாக கொண்ட ஆரிசேகரன் பிராமணரா? 


ஒரு மன்னாங்கட்டியும் கிடையாது. ஒரு வெள்ளாள முதலி எழுதிய புத்தகத்தை வைத்து கொண்டு கேக்குது பாரு. இங்கே பிராமணர்க்ளும் கிடையாது பண்டாறங்கள் என்னும் வீரசைவ குருக்கள் தான் உள்ளனர். பிராமணனே கிடையாது. 


ஆரிய சக்கரவர்த்தி என்ற பெயரின் விளக்கம் தான் என்ன? 

இதே இராஜநாயகம் முதலியாரும் பின்னர் வந்த வெள்ளாள வரலாற்று ஆய்வாளர்களும் இந்த ஒரு பெயரை வைத்து தான் ஆரியசேகரனை பிராமணன் என முட்டாள் தனமாக கூறியுள்ளனர்.

ஆரிய சக்கரவர்த்தி பற்றி கம்பர்

ஐந்திலே ஒன்று பட்டான் ஐந்திலே ஒன்றை தாவி
ஐந்திலே ஒன்றாராக ஆரியர்க்காக ஏகி
ஐந்திலே ஒன்று பட்ட அனங்கை கண்டு அயலார் ஊரில்
ஐந்திலை ஒன்றை வைத்தா அவன் எம்மை அளித்து காப்பான்- அனுமன் துதி(கம்பராமாயனம்)

இங்கு ஆரியர் என்பது ஸ்ரீராமனை. அவன் ஆரியவேந்தன் தானே. இதனால் கம்பரே ஆரியர்க்காக் ஏகி என அனுமனின் பனியை கூறுகிறார்.

எத்தனை தடவை எழுதினாலும் முட்டாள்களுக்கு தெரிவதில்லை. திருப்புல்லானியில் கோவில் கொண்டன் (தெய்வ சிலையான் மன்னர் ஸ்ரீ ராமன்). இந்த தெய்வசிலை மன்னர் என்ற தமிழ் பெயரின் வடமொழியாக்கமே. ஆரியசக்கரவர்த்தி. இதேப்போல் இந்த திருப்புல்லானி கடவுளின் பெயரே இரகுநாதன்.

மன்னர்கள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட தெய்வத்தின் பெயரே தங்கள் நாமமாக சூடிக்கொள்வர். "திருமலை" நாயக்கர்."தீர்த்தபதி" முருகதாஸ்."ஏகாம்பரநாத" தொண்டைமான் பவானி"சரபோஜி", "திருகூடபதி" குற்றால தேவன், "சடையவர்மன்" பாண்டியன் ."பெருவுடையார்" இராஜ இராஜ சோழன் என எல்லா மன்னர்கள் பட்டங்களுக்கு முன் இருப்பது தெய்வத்தின் பெயர் தான். அதே போலத்தான் ஆரியசக்கரவர்த்தி,இரகுநாதன் என்னும் பெயர்கள்

இந்த இருபெயர்களைத்தான் ஆரியசக்கரவர்த்தி செகராஜசேகரன். இரகுநாத சேதுபதி என வைத்து கொண்ட்ள்ளனர். இருவரும். சேதுக்கரை என்பது இராமேஸ்வரம் தான். இது தான் சேது இதை ஆள்பவன் தான் சேதுக்காவலனே தவிர யாழ்பாணத்தில் இருப்பவன் எப்படி பூர்வீகமானவன் ஆவான்.
சேதுபதிகள் பற்றிய கதைகளில் ஸ்ரீராமன் குகனுக்கு பட்டபிஷெகம் செய்து வைத்தால் போல் வருகிறது. ஆரியசெகரன் இலங்கையை வென்ற ஸ்ரீ ராமன் ஒரு பிராமனுக்கு பட்டபிசேகம் செய்து வைத்தாற்போல் இராஜநாயகம் முதலியார் எழுதியுள்ளார். குகன் கதாப்பாத்திரம் இராமயனத்தில் வருகிறது? இராமன் பட்டபிஷேகம் செய்த  பிராமன் கதாப்பத்திரம் வருகிறதா? அப்படியே சேதுபதிகலின் கதைகளை ஜோட்டித்த இராஜநாய்கம் முதலியாரின் சொந்த சரக்கு. 

மட்டகளப்பு மான்மியம் - இது கல்வெட்டு ஓலை சுவடி இரண்டும் கொண்டது. இதில் வந்த ஆதாரப்பூர்வமான் வரிகள்:

அயோத்தி நகரதற்குப் புகழேயோங்க வரிய திருச்சபையோர்கள் வரிசைகூற மெய்செழிக்க விச்சபையில் வந்திருங்கள் விருதுடனே குலங்கோத்திர மரசுரிமைவேந்தர் பேரும் வையத்தில் வந்தவாறுடனே யந்தமன்னனிருவரன் முறையும் வழுத்துவீராய் பொய்யுரைகள் கூறாமல் வரிசை பெறும் பொருள் தெரியாதாகிலிந்தச் சபையின் பின் போவீரே வீரனென்னும் பரதிகுல யிரகுமுன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லிதன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வருஇரகு நாடனென நாமமிட்டு பூருவத்தி லயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவமறவர்குலம் நானும் வரிசைகேட்டேன் 

இரகுநாதன் என்னும் நாமமிட்டு அரசுரிமை ஈந்ததாக வரும் இந்த சேதுக்காவலன் யார்? சரி அதே வையாபாடலில் "சேதுபதிக்கு செழுமா சுரமனுப்பி" என ஆரிசேகரன் பாடலில் சேதுபதி என பெயர் வரும் அவர் யார்? போலியா? மூதேவிகள்!!!

இராஜநாயகம் ஆரியசேகரனை கீழைகங்கர் மற்றும் பாசுபத கோத்திரம்னு கதைவிட்டார் ஆதாரம் எங்கே? யாழ்பாண வைபவ மாலை கீர்த்திகளுக்கு மட்டு சேதுபதிகள் செப்பேட்டை காட்டிய முதலியார். ஆரியசக்கரவர்த்தியின் கீர்த்திகளை கண்டுபிடிக்க வேண்டியது தானே. ஆனால் குழம்பி சேதுபதிகளை பற்றியும் தீர்ப்பு கூற முடியாமல் தினறியுள்ளார்.

இராஜநாயகம் முதலியார் கூறுவதை பலரும் உடைத்து எரிந்துள்ளனர்.

இன்னும் சிங்கள எழுத்தாளர்கலுக்கு இன்னும் நன்கு தெரியும் எதிரிகளுக்கு கூட தெரியும் கோமாளிகளுக்கு தான் தெரியாது. சிங்கள் எழுத்தாளர்களே கலிங்க மாகன் வம்சத்தினரே சேதுபதி ஆரியசக்கரவர்த்தி என ஆதார்ப்பூர்வமாக பதிவிட்டுள்ளனர். ஜான் கிளிப்போர்ட் அண்ட் சார்லஸ் ஹூலி இருவரது ஆய்வு கலாநிதி பத்மானபன் மற்றும் ராஜநாயகம் முதலியாரின் குறிப்புகளுடன். 
http://sangam.org/2010/08/Tamil_Struggle_4.php?uid=4040

Kalinga Magha was a prince from the Kingdom of Kalinga which was in the Orissa state of modern India. His family was connected to the rulers of Ramanathapuram in Tamil Nadu. Kalinga Magha’s relatives of Ramanathapuram administered the famous temple of Rameswaram.
Kalinga Magha landed in Karainagar in 1215 AD with a large army of 24,000 soldiers mostly recruited from Chola and Pandyan territories. He camped his soldiers in Karainagar and Vallipuram and brought the Jaffna principality and the chieftaincies in Vanni under his control.
ஆரிய சக்கரவர்த்தி மற்றும் சேதுபதிகளின் வரலாறுகள் பற்றி ஆய்வு

யாழ்ப்பாண மன்னர்களின் பெயர்கள் "ஆரிய சக்கரவர்த்திகள்" என அழைத்து கொள்கிறார்கள். இவர்களை பற்றிய குறிப்புகளில் பாண்டிய மன்னனால் அனுப்பபட்ட ஒரு தளபதி என்றும் "தமிழர்" என்றும் சிங்கள குல வம்சம் கூறுகின்றது. கைலாயமாலை இவனை செயவீரன் செயசிங்கன்(செயதுங்கன்) என்ற தமிழ் வீரனாக புகழ்கிறது.

இவரை ஈழ தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் இவரை பிராமணர் மற்றும் சத்திரியர் என்னும் வர்ணத்துடன் கதை அமைக்கின்றனர். பொதுவாக ஆய்வாளர்கள் பிராமணர் மற்றும் சத்திரிய வம்சத்துடன் இனைக்க குஜராத்,வங்காளம்,ஒரிஸா போன்ற குடும்பங்களுடன் திருமணம் கொண்டதாக கதையழப்புகள் செய்வர். குஜராத்,வங்காளம்,ஒரிஸா போன்ற அரசுகள் போன்ற அரசுகள் தங்களை பிராமனர் அல்லது சத்திரியர் என கூறுவர். 

இந்த ஆதாரங்கள் எதுவும் இங்கு பொருந்தவில்லை. உன்மையாகவும் தெரியவில்லை. ஏனெனில் ஆரியசக்கரவர்த்தியின் பூர்வீகம் இராமேஸ்வரத்துடனே தொடர்பு படுத்தபடுகிறது. ஆதாவது இந்தியாவில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம். இவர்கள் தங்களை "சேதுகாவலன்" என இராமநாதபுரத்து சேதுபதிகளுடனே தொடர்பு படுத்தபடுகின்றது. 

சேது என்பது ஒரு கரை. இந்த கரையின் காவலன் சேதுகாவலன் என அழைக்கபடுகின்றான். சேதுபதி என்னும் மறவர் தலைவன் ராமேஸ்வரத்தின் ஆளுகை கொண்டுள்ளான். மேலும் ஆரியசக்கரவர்த்தி சேதுபதிகள் தொடர்பு கொண்டிருந்தனர்.

இடைக்காலங்களில் சோழர் இலங்கையின் மீது படையெடுத்தபோது மறவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்துள்ளனர். மறவர்களின் போர்தொழில் இலங்கை தர்ம சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுட்தி. சோழர்களின் அடைமொழியை பயன்படுத்தி மறவர் தலைவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் ஏராளம் வருகின்றது. சிலர் வேளாளர்கள் போன்று வாழ்க்கை நடத்தி அவர்கள் வாழ்க்கையை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்கள் காலம் வரை மறவர்களின் பேராதிக்கம் யாழ்பாணம் வரை நீண்டுள்ளது.


பாண்டியர்கள் ஆதிக்கத்திலும் மறவர்களின் போராதிக்கம் தொடர்ந்துள்ளது. இந்த காலகட்டத்திலே ஆரியசக்கரவர்த்தி பாண்டியரின் படைத்தளபதிகளாக வந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் பாண்டியர்களின் ராஜ்ஜியத்தில் மறவர்,கள்ளர் தலைவர்கள் பெரும் செல்வாக்காக இருந்துள்ளனர். சேதுபதிகள் மறவர்களின் தலைவரே. இவர் பாண்டிய மண்டலத்திலே பெரும் செல்வாக்கு பெற்றவர்.


யாழ்ப்பானத்தை பொருத்தவரை சேதுபதிகள் ஆரியசக்கரவர்த்திகள் இருவரும் இராமநாதபுரத்தின் மறவர் தலைவர்களே.

வெள்ளாள மயமாக்கத்தில் யாழ்ப்பானம் பிராமணமயமானது. பிராமனர்களான அப்பரும் சம்பந்தரும் இங்கு பெரும் சமயகுரவர்கள் ஆனார்கள். இதனால் வெள்ளாளர் பலம் வாயந்த சமூகமாக யாழ்பாணத்தில் கால்பதித்தது.

யாழ்ப்பாணத்தில் கைலாயமாலை வையாபாடல் வெள்ளார்கள் மேலாதிக்கத்தில் இயற்றப்பட்டது. இந்த காலகட்டத்தில். நாட்டார்கள் என்பவர்கள் விவசாயத்தில் காலூன்றிய வெள்ளாளர்கள். இதே காலக்கட்டத்தில் சிங்களவர்களின் கோவியர்கள் விவசாயத்தில் காலூன்றினர். இதை வைத்தே யாழ்பாணத்தை ஆண்ட ஆரியசக்கரவர்த்தியை பிராமணர் என பாடியுள்ளனர். 

ஆனால் யாழ்பானத்தை பொருத்தவரையில் பிரம்மதேயங்களே இல்லை பிராமணர்களும் இல்லை. பிராமன கிராமங்களும் இல்லை. எனவே பிராமணனுக்கு இங்கு தேவையே இல்லை. 


பொதுவாக பிராமணர்களை பொருத்தவரை வெள்ளாளர்களின் செல்வாக்கு கிடையாது. இதனால் வெள்ளாளர்கள் பிராமணர்களை சார்ந்தே வாழ்ந்துள்ளனர்.பத்மநாபன் சோழர் கால்த்தில் வலங்கை-இடங்கை என இரு பிரிவுகள் இருந்துள்ளனர். இவர்களில் வெள்ளாளர்கள் பிராமனர்களை சார்ந்து இருந்துள்ளனர். இதனாலே வர்ணாசிரமங்கள் புகுத்தபட்டது. இதனால வெள்ளாளர் பிராமனர்களின் உதவியாக இருந்து செல்வாக்கை வளர்த்தனர். வெள்ளாளர்கள் ஆரியசக்கரவர்த்தியை சார்ந்து இருந்தனர். இதனாலே தங்கள் தலைவனை பிராமனர் என பாடியுள்ளனர்.

சத்திரியர் யாருகேளு? ஆனால் உன்மையில் ஆரியசக்கரவர்த்தி மறவர் இனத்தை சார்ந்தவர் ஏனெனில் மறவர்களே போர்(சத்திரிய) சாதியை சார்ந்தவர்கள். எனவே ஆரியசக்கரவர்த்தி மறவர் இனத்தை சார்ந்தவர். 

இராஜநாயகம் முதலியாரின் தடுமாறல்:

இராஜநாயகம் முதலியார் வெள்ளாளர் இனத்தை சார்ந்தவர் இவரே மயில் வாகன புலவரின் வையாபாடல் இதை வைத்து வேதியன் என ஆரியசக்கரவர்த்தியை எழுதியுள்ளார் இவரே சேதுபதிகள் 16-ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களால் பட்டம் சூட்டப்பட்டவர் என்றும் அசல் சேதுக்காவலன் ஆரியசக்கரவர்த்தி தான் என எழுதியுள்ளார் ஏனெனில் தொண்டை மண்டல வேளாளர்கள் பிராமண பூர்வீகம் கொண்டவர் என்ற கருத்தின் அடிப்படையில். அதே நேரத்தில் சேதுபதிகளின் செப்பேட்டை போட்டுள்ளார். இன்னும் சேதுபதிகளுக்கும் ஆரிசேகரனுக்கும் உள்ள சிக்கல்களை இவரே விளக்க முடியாமல் தினறியுள்ளார் இதை யாழ்பான கும்பாபிசேக மலரில் இதனை விளக்கியுள்ளனர். 

யாழ்பாண வைபவமாலை ஒரு புரட்டு: 

யாழ்பாணத்தை பற்றிய பிற்காலத்தில் எழுதப்பட்டதில் ஒன்று யாழ்பாண வைபவமாலை என்னும் நூலில், இவை யாழ்பாணத்தில் ஏனைய சரித்திரத்தை பொய்யாக்கி தமக்கு தேவையான புது சரித்தரத்தை அவைக்கள புலவரை வைத்து எழுதி கொண்டுள்ளனர்.முதலிமார்கள் பலர் புலவர்கள் அமர்ந்தனர் என்பது குறிப்பிட தக்கது. 

ஆரியசேகரன் கட்டியதாக கோவில்கள் பலவும் புரட்டு(பழைய நாகர்வம்ச மன்னர்கள் ஆலயங்கள்) 

போர்த்துகேயரின் ஆளுகைக்கு பின் பல கோவில்களை புனரமைத்தது முற்குகரே இருந்தாலும் பல கோவில்களை குளக்கோட்டன் கட்டியதாகவும் ஆரியசேகரன் கட்டியதாகவும் கூறுவது சுத்த பொய்யாகும். அது பழைய நாகர் வம்சத்தின் சைவ தெய்வங்களாம். 

Some comments on Neville Jayaweera’s autobiographical Reflections

 

article_image
N.Q. Dias

by R. M. B Senanayake

We may ask the question what it is that Neville Jayaweera wants to convey to the public and to posterity through his autobiographical reflections?

Direct or first hand experiences of events impart a special depth as opposed to the third hand reports of the same events. Those of us who were Jayaweera’s contemporaries in the CCS in the 1960s, such as I, can confirm that his narration of those experiences, in his Reflections, is generally a correct portrayal of the history of those times. One might not share all of his views, but his work is a sparkling revelation, full of spiritual substance, candour and intellectual depth.

What impressed me most in Neville Jayaweera’s (NJ hereafter) Reflections was his inherent sense of justice and fair play and, as Susil Sirivardena says in his Preface, his granite-hard commitment to conscience and humanistic values, He was influenced entirely by the Buddhist concepts of avijja (ignorance of things as they are) the yatharthaya and maya (illusions) and concludes that "within Buddha’s epistemology there is no room for ethnic divisions, for nationalisms or even for patriotism"

Clearly, as the GA of Jaffna , between 1963-1966, Jayaweera’s values were rooted in the Sutras and in the true Abhidhamma of the Buddha and in the Brahma Viharas, but were light years away from the distorted values of the Mahavamsa and the nationalisms of Anagarika Dharmapala and of N.Q. Dias.

Marauders from Kalinga

Jayaweera refers to the marauding Kalinga King, Kalinga Magha, who invaded Sri Lanka and laid it waste, desecrating temples and dagabos in the Rajarata not sparing even the Ruwanvelisaya or the irrigation systems on which the ancient Sinhala civilization of Anuradhapura and Polonnaruwa was built. He displayed callous brutality in blinding and executing the incumbent ruler Parakrama Pandya. Jayaweera says the memory of such brutality is deeply ingrained in the collective subconscious of the Sinhala people and probably accounts for the prejudice they feel to the Tamils even today.


The brutality of the Maravar invaders has bequeathed the word "maravara balaya" to the Sinhala language to denote the power of brutality, extreme cruelty and intimidation displayed first by the Maravar warriors of Kalinga Magha. NJ cites several comparable cases from diverse cultures across the globe. Without condoning it, Jayaweera says that the brutality of the modern LTTE is only a manifestation of this historical barbarism of the Maravars.


அதே நேரத்தில் கல்வெட்டு ஆய்வாளர் ஸ்வெல்ஸ் நிறை கல்வெட்டு பாண்டியர் கல்வெட்டு முதல் பலவற்றையும் ஆராய்ந்தவர் 14-ஆம் நூற்றாண்டிலே சேதுபதிகள் பற்றிய கல்வெட்டு இருந்ததை ஆதாரமாக்கியுள்ளார்.

முத்துகுமாரசுவாமியின் யாழ்குடியேற்றம் என்ற புத்தகத்திலும் ஆரியசக்கரவர்த்தி மறவர் என கூறுகிறார்.

 The Maravar’s connections with Jaffna will be examined elsewhere in this study, especially in view of a recent attempt by a Jaffna historian to show that the early colonists of Jaffna were Maravar and that the rulers of Jaffna belonged to the Sethupathy clan of that caste. He has claimed that Vadamaradchi was in former days Vada Maravar Adchi [the domain of north Maravar]; ‘Yazh Kudi-etram’, K.Muthu Kumaraswamippillai, 1982, Chunnakam, Jaffna. Letter of Correspondent M.Raja Joganantham[Colombo 6]: Militarism and Caste [Lanka Guardian, July 15, 1992, p.16] With the reference to the above article in Lanka Guardian (1 July) 1992.


ரைட் டேவிட்ஸ் மற்றும் சேஷாத்திரியின் விளக்கம் கீழே: தமிழக அறிஞரான கே. சேசாத்திரி (இராமேஸ்வரம் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், பக் 186,க ) 1975 கைலாயமாலையின் காலம் 15 ஆம் நூற்றாண்டென்பர். முதலியார் இராசநாயகம் கி. பி. 1604 க்குப் பின் கோவில் கட்டப்பட்டதென்பதற்கு. சேது பதிக்குச் செழும்பா சுரமனுப்பி (கை. மா. கண்ணி 234)என்ற தொடர் ஆதாரமென்பர். இதில் வரும் சேதுபதி "இராமநாதபுரத்து மன்னராகிய சேதுபதி என்றே கொள்ளக் கிடக்கிறது. உடையான் சேதுபதியெனப் பெயர் பூண்ட சடையக்கதேவரே முதல் இராமநாத புரத்துக்குத் தலைவராக மதுரை நாயக்கரசனாகிய முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கி. பி. 1604 இல் நியமிக்கப்பட்டனர். அச் சேதுபதியென்னும் பெயர் இந்நூல கத்துக் குறிக்கப்பட்டதென்பது தெளிவு" (கை. மா. பக். III) என்பர். ஆனால், சேசாத்திரி (~. சிறப்பு மலர் பக். 186 g.)பரராசசேகரன் கி. பி. 1414இல் சேதுபதி இராமேஸ்வரம் கோயிலைக் கட்டுவதற்குத் திருகோணமயிலிருந்து வெட்டிச் சீராக்கப்பட்ட கற்களை அனுப்பியதாகக்கூறி, சேதுபதிக்கும்15 ஆம் நூற்றாண்டுக் குரிய யாழ்ப்பாண அரசர்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை விளக்குவார். கலாநிதி யேம்சு டேர்சஸ் (Indian Antiquary Vol. XII) கி. பி. 1434 இல் வாழ்ந்த உடையார் சேதுபதி பற்றிக் கூறுவார். சேதுபதிகள் பாண்டி மறவர்கள். அவர்கள் சேதுபதி என்ற விருதைத் தொடர்ந்தும் கொண்டிருந்தார்கள் என ஆய்வாளர் கூறுவர். (Rev. James Tracy, The Madras Journal of Literature and Science). எனவே, இராசநாயகம் அவர்கள் காட்டிய ஆதாரங்கள் வலுவிழக்கின்றன. "நல்லூர் கைலாச நாதர் கோவில் முதலாம் சிங்கையாரியன் காலத்தில் (கி. பி. 1260)கட்டப்பட்டது என்பதை மறுக்க எவ்வித ஆதாரமுமில்லை" என்பார் சி. பத்மநாதன் (The Kingdom of Jaffna, P. 194; 1978). எனினும்,நூலெழுந்த காலத்தை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. வையாபாலிலும் (16 ஆம் நூ. ஆ.?) 'சேதுபதி' (செய். 38) வருவது நோக்கத்தக்கது.


According to the other statement, which has its source in Sinhalese records, the family took its rise from the appointment of Parakrama Bahu's General Lankapura, who, according to a very trustworthy Sinhalese epitome of the Maha- wanso, after conquering Pandya, remained some time at Ramespuram, building a temple there, and, while on the island, struck kahapanas (coins similar to those of the Sinhalese series). Whichever of these statements we may accept, the facts seem to point to the rise of the family in the eleventh or twelfth century A.D., and inscriptions quoted from Dr. Burgess by Mr. Robert Sewell * show that grants were made by Sethupati princes in 1414, again in 1489, still again in 1500, and finally as late as 1540. These bring the line down to within two generations of the time when Muttu Krish- nappa Nayakka is said, in 1604, to have found affairs sadly disordered in the Marava country, and to have re-established the old family in the person of Sadaiyaka Tevar Udaiyar Sethupati. The coins of the Sethupatis divide themselves into an earlier and later series. The earlier series present specimens which are usually larger and better executed, and correspond in weight and appearance very nearly to the well-known coins of the Sinhalese series, together with which they are often found. ' These coins,' Rhys Davids writes, t ' are prob- ably the very ones referred to as having been struck by Parakrama's General Lankapura.' The coins of the later series are very rude in device and execution. The one face shows only the Tamil legend of the word Sethupati, while the other side is taken up with various devices." * Sketch of the Dynasties of South India, t Numismata Orient. Ancient Coins and Measures of Ceylon

ஆரியசேகரன் கீர்த்திகள் என்ன? 

செகராஜசேகரன் வையாபாடலில் மட்டும் ரவிகுலன் எனவந்துள்ளது ஆனால் சேதுபதிகளின் பட்டயத்தில் ஈழமும் கொங்கும் யாழ்பாணமும் கொண்ட் ரவிகுலசேகரன் என வந்துள்ளது. யாழ்பான ஆரியசேகரனுக்கு இந்த கீர்த்திகள் கொண்ட பட்டயம் கிடையாது. சிதம்பர பட்டத்தையும் போடுகின்றோம் சேதுபதிகளைப்பற்றி பல பட்டயம் கல்வெட்டுகளிலும் இது தான் வருகிறது. சேதுபதிகளின் மூதாதயராக "செயதுங்க ராய" வங்கிசாதிபதி என கூறுகிறார் அதே மூதாதயரை ஆரிய சேகரனும் கூறுகிறார். 


ஆரியசேகரன் என்னும் நல்லூர் அரனும் மறவர் குல கொழுந்து தான். சங்கிலியான்,பண்டாற வன்னியன்,இளஞ்சிங்க வாகு, வன்னிச்சிமார் அரசிகள்,சோழகங்க தேவன் இவர்கள் யாவரும் மறவர் குல மாணிக்கங்கள் தான்.

யாழ்பாண வன்னியர் யார்? 


நாங்கள் பூர்வீக வன்னியர் கிடையாது. வன்னியரை கண்டம் செய்த வன்னியர் கண்டர்கள். சேதுபதிகளின் செப்பேடுகளில்,தொண்டைமான் செப்பேடுகளில் ஆரியசேகரணின் செப்படுகளில் குறிப்பிடும் வன்னியர் கண்டன்,வன்னியர் கொட்டமடக்கி என்பவர்கள் யார்? ஈழத்தின் பூர்வீக வன்னியர் யார் இவர்களை கண்டம் செய்தது எப்போது? வன்னி வன்னியர் யாருக்குரிய பெயர்கள்.

யாழ்ப்பாணத்திலே முற்குகர் என்னும் முக்குவரின் வருகைக்கு முன் ஈழத்திலே வன்னி நாடுகள் இருந்துள்ளன. அவர்கள் இயக்கர் என்னும் வேடாக்கள். இவர்கள் தான் இலங்கையின் ஆதி வன்னியர். இவர்களை வீழ்த்தி தான் முற்குகர் என்னும் பாண்டிய,சேர நாட்டை சேர்ந்தவர்கள் அவர்களின் வன்னிநிலம்(காட்டை) அகப்படுத்தி தலைவர்கள்(வன்னியர்கள்) ஆனார்கள். 

இயக்கர்-வேடாக்கள் -வன்னியெத்தலோ: http://www.ethnologue.com/show_language.asp?code=ved நன்றி: இலங்கையின் வேடுர் தென்னிந்திய திராவிட மரபினர்

இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர். இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களாகும்.


சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அன்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார்

இயக்க வன்னியரை வீழ்த்திய முற்குகர்கள் வன்னியரான வரலாறு:

இதற்க்கு பத்மநாபன்,டி.பி.சிவராம் மற்றும் மெக்லவொர்த்தி முக்குவர் ஆதிக்கம் என்ற நூலில் கூறியுள்ளதை இங்கு பதிவிடுகின்றோம்

முக்குவர் அரசாங்கம்-மட்டகளப்பு மான்மியம்

முற்குகரின் குடியேற்றம் கலிங்க மாகன் காலத்திலிருந்து தொடங்குகின்றது. கலிங்க மாகன் ஈழப்படையெடுப்புக்கு முன்னர் சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் படைகளை திரட்டி தன்னை இராமனாகவும் துனைவருவது முற்குகர்கள் என குகசேனை உருவாக்கி ஈழத்தில் படையெடுத்தான். இவைபோக யாழ்பாணத்தில் இருந்த தமிழ் படைவீரர்களும் அடக்கம். ஆனால் பத்மாநாபன் கலாநிதி முற்குகரே வன்னியராக இருக்க முடியாது. முற்குகருக்கு முன்னரே வன்னி நாடுகள் இலங்கையில் இருந்தன என தெரிவிக்கின்றார்.

அந்த வன்னியரே வன்னி-எத்தலோ என்ற வேடாக்கள். இவர்களையே முற்குகர்கள் வீழ்த்தினர்.

இதற்க்கு மெக்லவொர்த்தி தன் புத்தகத்தில், முற்குகர்கள் மட்டகளப்பு மான்மியம் டச்சுக்குறிப்பு ஜாக்கப் பர்னார்ட் 1794 ல் எழுதி குறிப்பு முற்குகர்கள் இந்த தீவுக்கு ஏழு(7) மரக்கலங்களிலே வந்தனர். அவர்கள் இதற்க்குமுன் இங்கிருந்த "பழைய வன்னியர்களை" கொடூரமாக வீழ்த்தினர். முற்குகரிலே படையாண்ட குடி பற்றிய குறிப்பு இது.(10-12)

வேட்டுவ வன்னிகள் பராக்கிரம பாகு காலத்திலே இருந்தன அதில் பனிக்கனான் என்பவன் அந்த வன்னிகளை உருவாக்கினான் என உள்ளது.

ஆறாம் பராக்கிரமபாகு கோட்டை அரசணாக இருந்த போது 18-வன்னிகளையும் அடக்கினான் என கூறுகிறது.


முற்குகருக்கு முன்னே வன்னியராக இருந்தது வேடாக்கள். இவர்களை வென்றே முற்குகர்கள் வன்னியர்கள் ஆனார்கள்

கலிங்க மாகன் "இயக்கர்" என்னும் ராட்சதர்களை கொலை செய்து குகன் குலம் என்னும் படைத்தலைவர்களை நியமித்தான் என வரலாறு கூறுகிறது(நடராஜன்1942-72)

முக்குவர்களுக்கு வன்னியர் என தலைமை பட்டம் இருந்தது. ஆதாவது வன்னி என்னும் பிரதேசத்தின் தலைமைக்கு உரியபெயர்.(ராகவன் 1918) வன்னிநிலம் என்பது காட்டு நிலம்.

நிலங்களில் நன்செய்,புன்செய்,நத்தம் ,கரடு,குடிகாடு,வன்னி,வேளான்  என பல வகைப்படும். இதில் வன்னிசெய் அல்லது வன்னி என்பது விவசாயத்துக்கு தகுதியற்ற காட்டு நிலம். புன்செய் என்றால் மழை பெய்தால் வரும் நிலம்,நன்செய் குளங்கள் மூலம் பாசானம் செய்யும் நிலம் . நத்தம் என்றால் மண் செம்மண் பிசையும் சேரி நிலம்  வன்னி நிலத்தின் தலைவன் வன்னியன்,குடிகாட்டின் தலைவன் குடியானவன்,குடும்பு நிலத்தின் தலைவன் குடும்பன் நல்லவேளை புன்செய் நிலத்தால் புன்னியன் என்ற ப்யர் வந்து நாங்கள் புன்னியம் செய்தவர்கள் என கிளம்பி வந்தா என்ன செய்வது ?????

காட்டு நிலம் உடையவன் ஆதலின் வன்னியன் என பெயர் அவனே காடு கொன்று நாடாக்கினால் நாட்டார் என பெயர் பெறுகிறான். வன்னியனுக்கும் நாட்டார் என்னும் பெயருக்கும் வித்தியாசம் தெரிகின்றதா?

இந்த ஈழ இயக்க வன்னியன் யாரிடமுன் கடன் வாங்கி இந்த பட்டட்தை போட்டுகொள்ளவில்லை.

இப்போது புரிகிறதா? சேதுபதிகளின் பட்டயத்தில் வரும் வன்னியர் கொட்டமடக்கி வன்னியர்கண்டன், அறந்தாங்கி தொண்டைமான் பட்டயத்தில் வரும் இளமீசுர வன்னியர் கண்டன்,முகில் வன்னியர் கண்டன் என்பது ஈழத்து ஏலு மொழி பேசு இயக்கர்களான் வன்னியெத்தலோவை தான் குறிக்கிறது. 
An inscription of the Vijayanagar king Dēva Rāya II (1419–44 A.D.) gives him the title of the lord who took the heads of the eighteen Vanniyas.6
East and West, VI, 70, 1907.
6 Madras Mail, 1904.
கிருஷ்ணதேவராயர் கல்வெட்டுகளில் பதினெட்டு வன்னியர் கண்டன் என்ற கல்வெட்டு யாரை குறிப்பிடுகின்றது என்றால் உன்மையில் 18-வன்னியர்கள் என்பது தமிழக வன்னியரையே குறிக்காது. இது இலங்கையில் உள்ள முற்குகர் என்னும் முக்குவர் அவர்களின் வன்னி(காடுதான்யா!) அந்த பிரதேசத்தின் தலைவனையே குறிக்கும். இதே தேவராயர்(1419-44)கி.பி
ஆண்டை ஒட்டியே 'முக்கரஹட்டன' என்னும் நூல் சிங்கள அரசன் பராக்கிரம பாகுவுக்கும் இலங்கையில் உள்ள தமிழ் முற்குக வன்னியருக்கும் பெரும்போர் மூண்ட்து. பராக்கிரம் பாகு காரைக்கால் காஞ்சிபுரம் இங்கிருந்த நாயக்கர் படைகளின் உதவியுடன். பெரும்போர் பெற்று முற்குக வன்னியரை வீழ்த்தினான்.
இதற்கு ஆதாரம் கலாநிதி பத்மனாபன் எழுதிய வன்னியர். 1419 என வ்ருடம் அச்சு அசலாக வருகிறது.
18 வன்னியர் யாருன்னு கேட்ட பதினெட்டையும் பள்ளி சொல்லுமா? சொல்லாது. 18 வன்னியர் என்பது 18 உறுப்பினர்கள் முற்குகரின் "முத்திரகூடம்" என்னும் சபையின் அங்கத்தினர். இவர்களை "இராஜவன்னியர்" எனவும் கூறுவர். இவர்களையே வீழ்த்தினர் வடுகர் உதவியுடன் சிங்களர்கள்.
இந்த பட்டத்தை நாயக்க மன்னர் மட்டுமல்ல, சேதுபதி,அறந்தாங்கி தொண்டைமான்,]சூரைக்குடி அரசன் 
புதுக்கோட்டை பல்லவராயர் பட்டய்த்தில் வரும் 18 வன்னியர் கண்டன் என்பது கூட இந்த இலங்கை வன்னியனை தான் குறிக்கிறது. வடதமிழக வன்னியருக்கும் இயக்க வன்னியருக்கும் சம்பந்த முண்டா என தெரியவில்லை.

ஆனால் முற்குகர்களான் அடங்காபற்று வன்னியருக்கும் பள்ளிகளுக்கும் சம்பந்தமே இல்லை.
சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:
சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:
குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.



முக்குகர் வன்னிமை

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான்தனஞ்சயன்றான்
கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்
வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்
பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி


மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முரண்டன் குடி.

மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.
மறவரில் இருப்பது பெருங்குடி வீரர்கள்முற்குகரில் இருப்பது தலைவன், அரையன்,பெருமாண்,அரசன் என  முற்குக வன்னிமைகள் மறவரே.


எதனால் மறவருக்கு வன்னியர் பட்டம் என்றால் காடு நிலத்தின் காவலன் என்னும் பிரதேசப் பெயரே தவிர முற்குகனோ அல்லது கள்ளனோ அல்லது பரவரோ வன்னியர் பட்டத்தை திருட வரவில்லை இவர்க்ளை கண்டம்பன்னியதாலே வன்னியர் கண்டன் என்னும் பெயர்.

முற்குகர்கள் தானை தலைவர்கள் பெயரும் அவர்களால் வீழ்த்தபட்ட வேடாக்களும் இவர்கள் அனைவரும் முற்குகர் தலைவர்களே:


செயதுங்க வீரவரராஜசிங்கனும் இளவரசியை மணம்முடித்து விட்டு அவளோடு வந்த வீரர்களை அடங்கா வன்னிப்பற்றுக்குச்சென்று அதைக் கைப்பற்றி ஆளுமாறும், ஆண்டுதோறும் யாழ்ப்பாண அரசனுக்குத் திறை செலுத்த வேண்டுமென்றும் பணித்தான். அடங்காப் பற்றை அடைந்ததும் அதைக் கைப்பற்றுவதற்குத் தம்மிடம் போதிய படையில்லை என்பதை உணர்ந்தார்கள். எனவே, இளஞ்சிங்க மாப்பாணன், நல்லவாகுதேவன், அத்திமாப்பாணன் என்போரிடம் து}துவர்களை அனுப்பி மதுரை, மருங்கூர், காரைக்கால், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, துளுவை நாடு, தொண்டைமண்டலம், வடகிரிநாடு என்னுமிடங்களிலிருந்து கூட்டிவரக் கூடியவர்கள் அனைவரையும் கொண்டு வருமாறு சொல்லி அனுப்பினார்கள். இதனை அறிந்ததும் தில்லைமூவாயிரவர், திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், நல்லவாகு மலைநாடன், சிங்கவாகு, சோதயன், அங்கசிங்கன், கட்டைக்காலிங்கன், சொக்கநாதன், கங்கைமகன், கலைக்கோடமுடியோன், வீரகச்சமணி முடியரசன், காபாலிவீரன்,சேது எனும் பதியை ஆளுகின்ற வீரம் செறிந்த தலைவன், 

இளஞ்சிங்க மாப்பாணன் என்போரும் பெருமைமிக்க ஆரிய வம்சத்தாரும் படகுகளில் ஏறி யாழ்ப்பாணம் வந்தார்கள். இவர்களிலே திடவீரசிங்கன், கரிகட்டு மூலைப்பற்றுக்கு அதிபதியானான். இளஞ்சிங்க மாப்பாணன், இராஜசிங்க மாப்பாணன், நல்லவாக மெய்த்தேவன், கறுத்தவாகு, சிங்கமாப்பாணன் என்போர் சான்றாரையும் வலையரையும் துரத்தி விட்டு முள்ளியவளையைக் கைப்பற்றினார்கள். நீலையினார் திசையாண்டாரும் படையும் மேல் பற்றுக்கு வந்து சகரன் மகரன் என்ற வேட்டுவ தலைவர்களைக் கொன்று விட்டு நாட்டையாண்டனர்.


வன்னியர்கள்(முக்குவர்) இலங்கைக்கு வருமுன் அடங்காப்பதியில் வாழ்ந்த மக்களினங் காரணமாகவே அதற்கு அப்பெயரிட்டிருத்தல் வேண்டும். அப்பொழுது அம்மக்கள் யாருக்கு மடங்காதவர்களாய் வாழ்ந்தனர் என்பது இதனால் வெளிப்படையாகிறது. வன்னியர் வருவதற்கு முன், அடங்காப் பதியிலுள்ள ஊர்களாய முள்ளி மாநகரிற் சாண்டார்(சானார்) அரசாண்டனர் என்றும், கணுக்கேணியில் வில்லிகுலப்பறையர் அரசு செலுத்தினர் என்றும் தனிக்கல்லிற் சகரன் என்றும், கிழக்கு மூலையில் “இராமருக்குத் தோற்றேயகன்ற ராட்சதர்” ஆட்சி செலுத்தினர் என்றும், மேற்கு மூலையில் அவர்களுள் இழிந்தோராட்சி நடந்ததென்றும் வையாபாடல் கூறும். எனவே, அடங்காப்பதியில் வாழ்ந்த ஆதிக்குடிகள் இவர்களெனல் சாலும். இவர்கள் அப்பொழுது அப்பகுதியைத் தனிக்கல், கணுக்கேணி, முள்ளிமாநகர், கிழக்கு மூலை, மேற்கு மூலை எனவைந்து பகுதிகளாகப் பிரித்தரசாண்டனர் என்பதும் இவற்றாற் புலனாகும். இளஞ்சிங்கவாகு இராட்சதரோடு போர் செய்து வெற்றி கொண்ட போதும், அவர்களை அவனால் முற்றாக அடக்கிவிட முடியாதிருந்தது. அதனால் அவ்வசுரர்களை அடியோடு அழித்து விட வேண்டுமென்று ஐம்பத்துநாலு வன்னியர்கள்(முக்குவர்) ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்துப் போராடினர். அப்போரிலே அசுரர்கள் பெருஞ் சேதமடைந்து சிதைந்தனரெனினும் அவர்களுக்கெதிராய்ச் சமர்விளைத்த ஐம்பத்து நான்கு வன்னியரும் அப்போரிற் பட்டொழிந்தனர். அதன் பின் எஞ்சியிருந்த ஐந்து வன்னியரும் அடங்காப்பற்றை ஐந்து பற்றாகப் பிரித்தரசாண்டனர்

முற்குகர்களே வன்னியனார்கள்:

வன்னிபம் பெற்ற இருவர்கள் ஒருவர் வெள்ளாளர் இன்னோருவர் முற்குகர். முற்குகரே படைதலைவர்களாதலால் அவர்களே தங்களை வன்னியனார்கள் என்றும் வெள்ளாளர்கள் வெள்ளாளர் எனவே இருந்துள்ளனர். முற்குகர்களே வன்னி நிலத்தை வன்னியர்களிடம் கைப்பற்றி அதில் போடிகளாக எழுவர் ஆண்டன்ர். இவர்கள் மன்னர்களாகவு வெள்ளாளர்கள் குடிமக்களாகவும் இருந்தனர். தமிழ்நாட்டிலே கள்ளர் மறவர்களை போல.


மட்டகளப்பில் முக்குவர்களே உயர் ஜாதியாக இருந்தனர். இவர்களுக்கு வீர சைவ குருக்கள் இருந்தனர். கலிங்க மாகன் வெள்ளாளர்கள் பலரையும் கோவைசியரில் ஏழு குடிகளையும் இந்தியாவில் இருந்து தருவித்தான். இவர்கள் குடியேற்றப்பட்டனர். வெள்ளாளர் குடிகளே பிற்காலத்தில் கோவிலர்களாக மாறினர்.


போர்த்துகீசியரின் படையெடுப்பு டச்சு படையெடுப்பில் ஆரியசேகரன் பரம்பரையும் முக்குவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆரிசேகரன் வம்சத்தவர்கள் பிற்காலத்தில் முதலியார் என்ற பட்டத்தை கைக்கொண்டனர். முற்குவ வன்னியரும் முதலியார் பிள்ளை என்ற பட்டத்தை பின்பற்றினர்.


முக்குவர்கள் குக வேளாளர் என ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் பதிவு செய்தனர். ஏனெனில் போர்க்குடிகளுக்கு தக்க பாதுகாப்பு ஆளும் பரங்கியரிடம் இல்லை என்று குற்றப்பரம்பரை சட்டம் காரணமாக பலர் தங்கள் பட்டத்தையும் இனப்பெய்ரையும் மாற்றியது போல.


யாழ்ப்பாணத்தை பொருத்தவரை முக்குவர்கள்,வெள்ளாளர்கள் சைவ குருக்கள் மட்டுமே உயர் சாதி ஆதாவது தமிழ் மொழி பேசுபவர்கள்.தாழ்ந்த தமிழர் அல்லாதவர் தாழ்ந்த  சாதிகளாக சாணார் மற்றும் பறையரை கூறினர்.

ஒரு சிங்கள பெண் எழுத்தாளர் இதனாலே கோபம் கொண்டு தென்-இந்திய வன்னியர் வேறு முக்குவ வன்னியர் வேறு இயக்க வன்னியர் வேறு என கட்டுரை போட காரணம் இது தான். இவர் யாரிடமும் கடன் வாங்க வில்லை என எழுத காரணம் இது தான்.


The Vanniyas Of Sri Lanka Vs Vanniyas Of South India December 8, 2013 | Filed under: Colombo Telegraph,Opinion,Popular Columns | Posted by: COLOMBO_TELEGRAPH

வன்னியர் பட்டம் எங்களுக்கு சொந்தமில்லை என்பது உன்மை தான் ஏனெனில் எங்களுக்கு வன்னியர் என்பது பூர்வ பட்டம்ல்ல இலங்கையில் பெற்ற பட்டம் சேதுபதிகளின் வரலாறுகளையும் மற்றும் ஆரிசக்கரவர்த்திகளின் பூர்வீகத்தையும் அறிவதற்க்கு உதவிய நூல்களுக்கு நன்றி

நன்றி:யாழ்பான் வைபவ மாலை Ancient jaffana:rajanayagam mudhaliyar
 Mukkuvar ideology:Mcgloworthy
 Srilankan Reader:john clifford vanniyas "kalaanithi padhbhanaban"

இத்துடன் போலி சத்திரியர்களுக்கும் நன்றி.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.